முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பணியில் முறையாக செயல்படாத அதிகாரிகள் மாற்றம்

வெள்ளிக்கிழமை, 14 அக்டோபர் 2011      அரசியல்
Image Unavailable

 

சென்னை, அக்.14 - உள்ளாட்சி தேர்தல் பணிகளை கண்காணிக்க மாநிலம் முழுவதும் தேர்தல் பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.  அவர்கள் அளித்த அறிக்கையில், நாகப்பட்டினம் மாவட்டம் சீர்காழி போலீஸ் டி.எஸ்.பி.,  வேதாரண்யம் போலீஸ் டி.எஸ்.பி. ஆகியோர் நடுநிலையுடன் முறையாக பணிபுரியவில்லை. எனவே 2 போலீஸ் அதிகாரிகளையும் மாற்ற வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது. மாநில தேர்தல் ஆணையர் சோ அய்யர் அந்த அறிக்கையை பரிசீலனை செய்து சீர்காழி, வேதாரண்யம் போலீஸ் டி.எஸ்.பி.களை உடனே மாற்ற உத்தரவிட்டார். அதன்படி 2 பேரும் மாற்றப்பட்டு, அங்கு புதிய போலீஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர். 

தேர்தலுக்கு இன்னும் 3 நாட்களை உள்ளன. எனவே அனைத்து தேர்தல் நடவடிக்கைகளையும் தீவிரமாக கண்காணிக்கவும், முக்கிய நிகழ்ச்சிகளை வீடியோ பதிவு செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது. சட்டம்- ஒழுங்கை பாதுகாக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

மேலும் தேர்தல் விதிமுறைகள் மீறப்பட்டுள்ளதா என்பதை கண்டறிந்து உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். வாக்குப்பதிவு அமைதியாக நடத்த அனைத்து ஏற்பாடுகளும் செய்ய வேண்டும் என்றும் தேர்தல் பார்வையாளர்களுக்கு மாநில தேர்தல் ஆணையர் சோ.அய்யர் உத்தரவிட்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்