எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, அக்.18 - காவிரி நதிநீர்ப் பிரச்சனை குறித்து பிரதமர் மன்மோகன்சிங்கிற்கு முதல்வர் ஜெயலலிதா நேற்று ஒரு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் நதிநீர் ஆணையத்தின் இறுதி உத்தரவை இந்திய கெஜட்டில் வெளியிட நீர்வளத்துறை அமைச்சகத்திற்கு உத்தரவு பிறப்பிக் வேண்டும் என பிரதமரை முதல்வர் கேட்டுக்கொண்டுள்ளார். காவிரி நதிநீர்ப் பிரச்சனை கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து வருகிறது. இதனால் தமிழ்நாடு, கர்நாடகம் இடையே அடிக்கடி கருத்து வேறுபாடு ஏற்பட்டு இரு மாநில மக்களுக்கும் பிரச்சனை ஏற்படுகிறது. இது தொடர்பாக அமைக்கப்பட்ட நதிநீர் ஆணையம், தனது இறுதி உத்தரவை பிறப்பித்த பிறகும்கூட கர்நாடகம் அதற்கு அடிபணியவில்லை. தமிழ்நாட்டிற்கு தரவேண்டிய தண்ணீரை ஒழுங்காக தருவதும் இல்லை.
இந்தநிலையில் தமிழக முதல்வர் ஜெயலலிதா நேற்று அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் காவிரி நதிநீர் பிரச்சனை குறித்து ஆலோசனை நடத்தினார். பிறகு பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு அவர் ஒரு கடிதமும் எழுதினார். அந்த கடிதத்தில் முதல்வர் ஜெயலலிதா எழுதியிருப்பதாவது:-
தமிழ்நாட்டின் 80 சதவீத நீர்ப்பாசனத்திற்கு காவிரி நதிநீர்தான் ஜீவநாடியாக இருந்துவருகிறது. காவிரியில் உரிய நேரத்தில் தண்ணீர் திறக்கப்பட்டால்தான் தமிழக மக்களுக்கு உணவு பாதுகாப்பே கிடைக்கும். ஒவ்வொரு ஆண்டும் கர்நாடக மாநிலம் தண்ணீரைத் திறந்துவிட வேண்டும். மாதந்தோறும் திறந்துவிட வேண்டிய தண்ணீரை கர்நாடகம் விடத் தவறினால் தமிழகத்தின் விவசாயம் மட்டுமல்ல, பொருளாதாரமும் பாதிக்கப்படும். இரு மாநிலங்களிடையே இந்த பிரச்சனை 1960 ல் வெடித்தது. தமிழகத்தின் சம்மதம் இல்லாமல் கர்நாடக அரசு நீர்ப்பாசன திட்டங்களை செயல்படுத்த தொடங்கியது. பிறகு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின் பேரில் இந்திய அரசு 1990 ல் காவிரி நதிநீர் தாவா தொடர்பான தீர்ப்பாயத்தை அமைத்தது. இந்த காவிரி நதிநீர் ஆணையம் தனது இடைக்கால உத்தரவை 25.6.1991 ல் பிறப்பித்தது. அது 10.12.1991 ல் இந்திய அரசால் கெஜட்டில் வெளியிடப்பட்டது. பிறகு காவிரி நதிநீர் ஆணையமானது 5.2.2007 ல் தனது இறுதித் தீர்ப்பை வழங்கியது. அப்போது கர்நாடகம், கேரளம், தமிழ்நாடு, புதுச்சேரி போன்ற மாநிலங்களுக்கு தரப்படவேண்டிய தண்ணீரை ஒதுக்கீடு செய்து நதிநீர் ஆணையம் உத்தரவிட்டது. ஆனால் இதை கர்நாடக அரசும், கேரள அரசும் ஏற்றுக்கொள்ளாமல் இறுதி உத்தரவை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டுக்கு சென்றன. தமிழகமும் சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்தது. பின்னர் இந்த வழக்கில் சுப்ரீம் கோர்ட்டில் இந்திய அரசும் தனது கருத்துக்களை எடுத்துவைத்தது. அதன்பிறகு சம்பந்தப்பட்ட மாநில அரசுகள் தங்களது மனுக்களை தாக்கல் செய்தன. அவையெல்லாம் தற்போது நிலுவையில் உள்ளன. காவிரி நதிநீர் ஆணையத்தால் இறுதி உத்தரவு பிறப்பிக்கப்பட்ட பிறகும், அந்த உத்தரவு அமுல்படுத்தப்படவில்லை. மேலும் கர்நாடக அரசு இந்த விஷயத்தில் தான் தெரிவித்துள்ள யோசனையை இறுதி உத்தரவுக்கான சம்மதம் என்று எடுத்துக்கொள்ள முடியாது என்றும் கருத்து தெரிவித்துள்ளது. எனவே இதுபோன்ற சூழ்நிலையில் இந்திய அரசு நதிநீர் ஆணையத்தின் இறுதி உத்தரவை அரசு கெஜட்டில் வெளியிடுவதுதான் நல்லது. அப்போதுதான் இதில் சம்பந்தப்பட்ட மாநிலங்கள் அதற்கு கட்டுப்பட்டு இறுதி உத்தரவை அமுல்படுத்தும். இந்த விஷயம் தொடர்பாக கடந்த 14.6.2011 அன்று தங்களை நேரில் சந்தித்தபோது நான் மனு கொடுத்தேன். அப்போதே காவிரி நதிநீர் ஆணைய இறுதி உத்தரவை கெஜட்டில் வெளியிடுமாறு நீர்வளத்துறை அமைச்சகத்திற்கு உத்தரவிடும்படி நான் கேட்டுக்கொண்டேன். அதே வேண்டுகோளை இப்போதும் முன்வைக்கிறேன். காவிரி நதிநீர் ஆணையத்தின் இறுதி உத்தரவை இந்திய கெஜட்டில் வெளியிடுமாறு நீர்வளத்துறை அமைச்சகத்திற்கு நீங்கள் தகுந்த உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என இந்த கடிதத்தின் மூலம் வேண்டிக் கேட்டுக்கொள்கிறேன். அவ்வாறு துரிதமாக நடவடிக்கை எடுத்தால் மிகவும் நன்றியுள்ளவளாக இருப்பேன். இவ்வாறு அந்த கடிதத்தில் முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு டோனட்23 hours 59 min ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்5 days 42 min ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி1 week 18 hours ago |
-
தங்கம் விலை மீண்டும் உயர்வு
24 Apr 2024சென்னை, சென்னையில் நேற்று ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ரூ.53.840-க்கு விற்பனையானது.
-
பாகிஸ்தான் செல்லுமா இந்தியா?
24 Apr 2024சாம்பியன் டிராபி போட்டி பாகிஸ்தானில் நடப்பதால் இந்திய அணி அங்கு சென்று விளையாட வாய்ப்பு இல்லை என தகவல் வெளியாகி உள்ளது.
-
பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்ன ஆகும்? இளையராஜா தரப்புக்கு உயர் நீதிமன்றம் கேள்வி
24 Apr 2024சென்னை, இளையராஜா பாடலை பயன்படுத்த விதித்த இடைக்கால தடையை நீக்கக்கோரி நிறுவனங்கள் தொடர்ந்த மேல்முறையீடு வழக்கில் பாடலுக்கு பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்ன ஆகும்? 
-
சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தல் எதிரொலி: பெரிய அளவில் விளம்பரம் வெளியிட்டு மன்னிப்பு கோரியது பதஞ்சலி நிறுவனம்
24 Apr 2024புதுடெல்லி, சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தலை அடுத்து 67 தேசிய செய்தித்தாள்களில் பெரிய அளவில் விளம்பரம் வெளியிட்டு நிபந்தனையற்ற பொதுமன்னிப்பு கோரியது பதஞ்சலி நிறுவனம்.
-
வண்டியூர் தேனூர் மண்டபத்தில் மண்டூக மகரிஷிக்கு சாப விமோசனம் அளித்த கள்ளழகர்: ராமராயர் மண்டகப்படியில் விடிய, விடிய தசாவதாரம்
24 Apr 2024மதுரை, வண்டியூர் தேனூர் மண்டபத்தில் கருட வாகனத்தில் எழுந்தருளிய கள்ளழகர் அங்கு மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் அளித்தார்.
-
செல்போன் டவரில் ஏறி தமிழக விவசாயிகள் திடீர் போராட்டம் : தலைநகர் டெல்லியில் பரபரப்பு
24 Apr 2024புதுடெல்லி, டெல்லி ஜந்தர் மந்தரில் செல்போன் டவர், மரத்தின் மீது ஏறி தமிழ்நாட்டை சார்ந்த விவசாயிகள் போராட்டம் நடத்தியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
-
கஷ்டப்பட்டு உழைத்து சேர்த்த உங்கள் செல்வத்தை காங்கிரஸ் பறித்துவிடும்: சத்தீஷ்கரில் பிரதமர் மோடி பேச்சு
24 Apr 2024புதுடெல்லி, நீங்கள் கஷ்டப்பட்டு உழைத்து சேர்த்த செல்வத்தை உங்கள் பிள்ளைகள் பெறமாட்டார்கள், அதை காங்கிரஸ் கட்சி பறித்துவிடும் என்று சத்தீஷ்கர் மாநிலத்தில் நடந்த கூட்டத்த
-
ஸ்மோக்கிங் பிஸ்கட்டை உட்கொள்ள வேண்டாம்: மாநில உணவு பாதுகாப்புத்துறை எச்சரிக்கை
24 Apr 2024சென்னை, ஸ்மோக்கிங் பிஸ்கட்டை உட்கொள்ள வேண்டாம் என மாநில உணவு பாதுகாப்புத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
-
இன்டியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து வடமாநிலங்களில் தேர்தல் பிரசாரம் செய்ய முதல்வர் ஸ்டாலின் திட்டம்
24 Apr 2024சென்னை, இன்டியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து டெல்லி உள்ளிட்ட மாநிலங்களுக்கு சென்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரசாரம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
-
வி.வி.பாட் வழக்கில் தேர்தல் ஆணையம் விளக்கம்:தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தது சுப்ரீம் கோர்ட்
24 Apr 2024புதுடெல்லி:வி.வி.பாட் தொடர்பான வழக்கில் தேர்தல் ஆணையம் விளக்கமளித்ததை அடுத்து தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை சுப்ரீம் கோர்ட் ஒத்திவைத்தது.
-
இந்திய வம்சாவளியை சேர்ந்தவர்: 3-வது முறையாக விண்வெளிக்கு செல்கிறார் சுனிதா வில்லியம்ஸ்
24 Apr 2024வாஷிங்டன், பூமி உள்ளிட்ட பிற கிரகங்களை ஆய்வு செய்வதற்காக ரஷியா, அமெரிக்க உள்ளிட்ட நாடுகள் விண்வெளியில் சர்வதேச விண்வெளி மையத்தை அமைத்துள்ளன.
-
நாளை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் மணிப்பூரில் அடுத்தடுத்து குண்டுவெடிப்பு சம்பவம்
24 Apr 2024இம்பால், மணிப்பூரின் 2ம் கட்ட தேர்தல் நாளை நடைபெறவுள்ள நிலையில், அங்கு குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
தமிழ்நாட்டில் ஈரோடு, சேலம் உள்ளிட்ட 15 மாவட்டங்களுக்கு வெப்ப அலைக்கான மஞ்சள் அலர்ட் வட உள்மாவட்டங்களில் 5 டிகிரி வரை வெப்பம் உயரும்
24 Apr 2024புதுடில்லி, ஏப். 25- தமிழகத்தில் ஈரோடு, சேலம் உட்பட 15 மாவட்டங்களுக்கு வெப்ப அலைக்கான மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
-
மஞ்சுமெல் பாய்ஸ் பட நடிகரை கரம் பிடித்தார் அபர்ணா தாஸ்
24 Apr 2024திருவனந்தபுரம், கேரள மாநிலம், வடக்கஞ்சேரியில் மஞ்சுமெல் பாய்ஸ் பட நடிகர் தீபக் பரம்போல்,நடிகை அபர்ணாதாஸ் ஆகியோரது திருமணம் நேற்று நடைபெற்றது.
-
விமான பயணத்தின்போது பெற்றோருக்கு அருகிலேயே குழந்தைகளுக்கு இருக்கை டி.ஜி.சி.ஏ. புதிய உத்தரவு
24 Apr 2024புதுடெல்லி, விமானங்களில் 12 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு அவர்களின் பெற்றோர் ஒருவருடன் இருக்கை ஒதுக்க வேண்டும் என்று விமான நிறுவனங்களுக்கு விமான போக்குவரத்து தலைமை இயக்க
-
கூவாகம் கூத்தாண்டவர் கோயில் தேரோட்டம் கோலாகலம்: ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு
24 Apr 2024கள்ளக்குறிச்சி, கள்ளக்குறிச்சி மாவட்டம் பிரசித்தி பெற்ற கூவாகம் கூத்தாண்டவர் கோயிலில் நடைபெற்ற தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.
-
அதிகரிக்கும் வெப்பதால் கண்களுக்கு பாதிப்பு அதிகம் : மருத்துவர்கள் எச்சரிக்கை
24 Apr 2024சென்னை, அதிகரிக்கும் கோடை வெப்பத்தால் கண்களுக்கு பாதிப்பு ஏற்படும் என டாக்டர்கள் எச்சரித்துள்ளனர்.
-
காஷ்மீர் என்கவுண்ட்டர்: பயங்கரவாதிகள் தாக்குதலில் பாதுகாப்புப்படை வீரர் காயம்
24 Apr 2024ஸ்ரீநகர்:காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் பாதுகாப்புப்படை வீரர் காயமடைந்தார்.
-
திருச்சி விமான நிலையத்தில், சிங்கப்பூரில் இருந்து நூதனமாக காலணியில் வைத்து தங்கத்தை கடத்தி வந்தவர் கைது
24 Apr 2024திருச்சி, திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் சிங்கப்பூரிலிருந்து நூதனமாக காலணியில் தங்கத்தை பதுக்கி எடுத்து வந்த நபரை சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர்.
-
வள்ளலார் சர்வதேச மையம்: ஆய்வு செய்து தொல்லியல் குழு அறிக்கை தாக்கல் செய்ய சென்னை ஐகோர்ட் உத்தரவு
24 Apr 2024சென்னை, வடலூர் வள்ளலார் சர்வதேச மையம் அமைய உள்ள பகுதியை தொல்லியல் குழு அமைத்து ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்த
-
லக்னோவுக்கு எதிராக தோல்வி: புள்ளி பட்டியலில் சரிந்த சென்னை சூப்பர் கிங்ஸ்
24 Apr 2024சென்னை:லக்னோவுக்கு எதிரான தோல்வியால் புள்ளி பட்டியலில் 5-ம் இடத்திற்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சரிந்துள்ளது.
-
கேரளாவில் தேர்தலை புறக்கணிக்குமாறு மாவோயிஸ்டுகள் எச்சரிக்கை
24 Apr 2024திருவனந்தபுரம்:கேரள மாநிலத்தில் உள்ள 20 தொகுதிகளுக்கும் வரும் 26ம் தேதி (நாளை) ஒரே கட்டமாக மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது.
-
இலங்கையிலிருந்து மேலும் 5 மீனவர்கள் தாயகம் திரும்பினர்
24 Apr 2024கொழும்பு:எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 5 இந்திய மீனவர்கள் இந்தியாவுக்கு அழைத்து வரப்பட்டனர்.
-
ஜம்மு-காஷ்மீரில் நாளை வாக்குப்பதிவு
24 Apr 2024ஜம்மு:ஜம்மு காஷ்மீரில் நாளை 2ம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.
-
குரூப்-4 தேர்வுக்கான கால அட்டவணை வெளியீடு
24 Apr 2024சென்னை:குரூப்-1, குரூப்-2, குரூப்-2ஏ, குரூப்-4 உள்ளிட்ட தேர்வுகளுக்கான அறிவிப்பை வெளியிட்டது தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்.