எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, அக்.19 - கூடங்குளம் மக்களின் பிரச்சனைகள் தீரும்வரை அணுமின் நிலைய பணிகளை நிறுத்திவைக்காமல், மாநில அரசின்மீது, மத்திய அரசு வீண்பழி சுமத்துவதா என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா காட்டமான கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளத்தில் 1,000 மெகாவாட் திறன் கொண்ட இரண்டு அணு மின் நிலையங்கள் அமைப்பதற்கு 1988 ஆம் ஆண்டு இந்தியா மற்றும் சோவியத் ரஷ்யா இடையே ஒரு ஒப்பந்தம் கையெழுத்தானது. 2001 ஆம் ஆண்டு இந்திய அணு மின் கழகத்தால் பணிகள் துவக்கப்பட்டு, முதல் அணு மின் நிலையத்தின் பணிகள் இந்த ஆண்டு டிசம்பர் மாதம் முடிவடையும் நிலையில் இருந்தன.
இந்த நிலையில் சில மாதங்களுக்கு முன்னர் சுனாமியால் ஜப்பானில் உள்ள ஃபுகுஷிமாவில் உள்ள அணு மின் நிலையத்தில் ஏற்பட்ட கதிரியக்கப் பிரச்சனை காரணமாக, இந்திய அணு மின் நிலையங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து, அதிலும் குறிப்பாக, தற்போது பணிகள் முடிவடையும் தருவாயில் உள்ள கூடங்குளம் அணு மின் நிலையத்தின் பாதுகாப்பு குறித்து அந்தப் பகுதி மக்களின் மனதில் ஐயப்பாடுகள் எழுந்தன. இதன் காரணமாக கூடங்குளம் அணு மின் நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அதனை உடனடியாக மூட வலியுறுத்தி அப்பகுதி மக்கள் இடிந்தகரையில் உண்ணாவிரதம் மேற்கொண்டனர். மக்களுக்காகத் தான் திட்டங்கள் என்பதில் நான் எப்போதும் உறுதியுடன் செயல்பட்டு வருவதை தமிழக மக்கள் நன்கு அறிவார்கள்.
எனவே, அப்பகுதி மக்களின் அச்சம் தீர்க்கப்படும் வரை கூடங்குளம் அணு மின் திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படக் கூடாது என்பதில் நான் தொடர்ந்து உறுதியாக உள்ளேன். கூடங்குளம் அணு மின் திட்டம் முழுவதும் மத்திய அரசின் திட்டமே ஆகும். எனவே இந்த அணு மின் திட்டத்தின் பாதுகாப்பு பற்றிய முழு விவரமும் மத்திய அரசு மற்றும் இந்திய அணு மின் கழகம் ஆகியவற்றுக்குத் தான் தெளிவாகத் தெரியும். இந்த அணு மின் திட்டம் பற்றிய கூடங்குளம் பகுதி மக்களின் அச்சத்தைப் போக்குவது முழுக்க முழுக்க மத்திய அரசின் கடமையே ஆகும்.
ஆனால், மத்திய அரசு அதற்கான எந்த நடவடிக்கைகளையும் எடுக்காததாலும்; அங்கு நடைபெறும் உண்ணாவிரதப் போராட்டம் மற்றும் அந்தப் பகுதி மக்களின் அச்சம் ஆகியவைக் குறித்து தனக்கு சம்பந்தம் இல்லாதது போல் மத்திய அரசின் நடவடிக்கைகள் அமைந்திருந்ததாலும்; 19.9.2011 அன்று நான் பாரதப் பிரதமருக்கு கடிதம் ஒன்றை எழுதினேன். அந்தக் கடிதத்தில், கூடங்குளம் பிரச்சனைத் தொடர்பாக பாரதப் பிரதமரை சந்தித்து ஒரு கோரிக்கை மனு அளிப்பதற்கான நாள் மற்றும் நேரத்தை ஒதுக்கித் தருவதுடன், அந்தப் பகுதி மக்களின் அச்சம் தீர்க்கப்படும் வரை கூடங்குளம் அணு மின் நிலையப் பணிகள் எதையும் மேற்கொண்டு தொடர வேண்டாம் என்றும் நான் பாரதப் பிரதமரை கேட்டுக் கொண்டேன்.
அதனை அடுத்து, பிரதமர் அலுவலக மத்திய இணை அமைச்சர்வி. நாராயணசாமி 20.9.2011 அன்று இடிந்தகரை சென்று, உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த மக்களை சந்தித்தார். எனினும், கூடங்குளம் பகுதி மக்களின் அச்சங்களைத் தீர்ப்பதற்கான எந்த நடவடிக்கையையும் அவர் எடுக்கவில்லை. உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த மக்களின் பிரதிநிதிகளை 21.9.2011 அன்று தலைமைச் செயலகத்தில் நான் சந்தித்தேன். அந்த சந்திப்பின் போது, இந்தப் பிரச்சனைத் தொடர்பாக தமிழ்நாடு அமைச்சரவையைக் கூட்டி தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட வேண்டும் என்ற கோரிக்கையை அவர்கள் வைத்தனர். அதனை நான் ஏற்றுக் கொண்டு, 22.9.2011 அன்று தமிழ்நாடு அமைச்சரவைக் கூட்டம் கூட்டப்பட்டது.
அந்தக் கூட்டத்தில், கூடங்குளம் அணு மின் நிலையம் பற்றிய அந்தப் பகுதி மக்களின் அச்சம் தீர்க்கப்படும் வரை அணு மின் நிலையப் பணிகளை நிறுத்தி வைக்குமாறு பாரதப் பிரதமரையும், மத்திய அரசையும் கேட்டுக் கொள்வதென்று அமைச்சரவை தீர்மானம் ஒன்றை நிறைவேற்றியது. இதனை அடுத்து, 7.10.2011 அன்று, தமிழக நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான தமிழகக் குழு பாரதப் பிரதமரை டெல்லியில் சந்தித்து, கூடங்குளம் பகுதி மக்களிடம் கூடங்குளம் அணு மின் நிலையம் பற்றிய அச்சம் தீர்க்கப்படும் வரை அணு மின் நிலையப் பணிகளை நிறுத்தி வைக்க வேண்டும் என்ற கோரிக்கை மனுவை அளித்தது. அப்போது, பாரதப் பிரதமர், மத்திய அரசின் பிரதிநிதிகள், மாநில அரசின் பிரதிநிதிகள் மற்றும் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களின் பிரதிநிதிகள் ஆகியோர் அடங்கிய கூட்டுக் குழு உருவாக்கப்படும் என்றும், அந்தக் குழு கூடங்குளம் அணு மின் நிலையப் பிரச்சனைக் குறித்து விரிவாக ஆராயும் என்றும் தெரிவித்தார்.
இருப்பினும், பாரதப் பிரதமர் அளித்த உறுதிமொழிக்கு ஏற்ப எந்த ஒரு நடவடிக்கையையும் மத்திய அரசு அதன் பின் எடுக்கவில்லை. மாறாக, 7.10.2011 அன்று தமிழகக் குழுவை சந்தித்த பின்னர், பாரதப் பிரதமரால் எழுதப்பட்ட 4.10.2011 தேதியிட்ட ஒரு கடிதம் 7.10.2011 அன்றே ஊடகங்களுக்கு வெளியிடப்பட்டது. ஆனால் அந்தக் கடிதம் எனக்கு கிடைக்கப் பெறவில்லை. எனவே, அந்தக் கடிதத்தின் நகலை தமிழக அரசு பிரதமர் அலுவலகத்தில் இருந்து ஊஹஞ் மூலம் 9.10.2011 அன்று கேட்டுப் பெற்றது. அதன் பின்னர் அந்தக் கடிதம் 10.10.2011 அன்று தான் எனது அலுவலகத்தில் பெறப்பட்டது. அதன் பின்னர் பாரதப் பிரதமர் மேலும் ஒரு கடிதத்தை எனக்கு எழுதியதாக ஊடகங்களில் 12.10.2011 அன்று செய்தி வெளியிடப்பட்டது. ஆனால் அந்தக் கடிதம் இதுவரை எனக்குக் கிடைக்கப் பெறவில்லை. நிலைமை இவ்வாறு இருக்கும் போது, 15.10.2011 அன்று சென்னை வந்த பிரதமர் அலுவலக மத்திய இணை அமைச்சர் வி. நாராயணசாமி, பாரதப் பிரதமரால் உத்தேசிக்கப்பட்ட குழுவில் இடம் பெற வேண்டிய மாநில அரசின் பிரதிநிதிகளின் பட்டியலை தமிழக அரசு இன்னமும் அளிக்கவில்லை; எனவே குழு அமைக்க முடியாமல் உள்ளது என்று வேண்டுமென்றே மாநில அரசின் மீது குற்றம் சாட்டி உள்ளார். மூன்றாவது முறையாக முதலமைச்சராகப் பொறுப்பேற்று செயல்பட்டு வருகிறேன். நான் ஆட்சியில் இருந்த போதெல்லாம் அன்றைய பிரதமர்களோடு பலமுறை கடித பரிவர்த்தனை நடந்துள்ளது. இதுவரை எந்தப் பிரதமரும் எனக்கு கடிதம் எழுதியதாகச் சொல்லிக் கொண்டு, அதனை முதலில் ஊடகங்களுக்கு அனுப்பி வெளியிட்டு விட்டு, அதன் பின்னர் கூட எனக்கு அனுப்பாமல் இவ்வாறு செயல்பட்டதில்லை. ஆனால் கடந்த 10 நாட்களில் இரண்டு முறை இந்தப் புதிய அனுபவம் நிகழ்ந்துள்ளது.
எனவே, கூடங்குளம் பிரச்சனையில் மாநில அரசின் மீது பழி சுமத்த வேண்டும் என்ற நோக்கத்துடனேயே மத்திய அரசு செயல்பட்டு வருகிறதோ என்ற சந்தேகம் ஏற்படுகிறது. கூடங்குளம் பகுதி மக்களின் பிரச்சனைகள் தீர்க்கப்படும் வரை கூடங்குளம் அணு மின் நிலையப் பணிகள் நிறுத்தி வைக்கப்பட வேண்டும் என்பது தான் எனது அரசின் உறுதியான நிலைப்பாடு ஆகும். ஆனால், மத்திய அரசு அவ்வாறு பணிகளை நிறுத்தி வைக்காத காரணத்தால் தான், கூடங்குளம் பகுதியில் மீண்டும் உண்ணாவிரதம் மற்றும் மறியல் போராட்டங்களில் ஈடுபடும் நிலைக்கு அந்தப் பகுதி மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். எனவே, கூடங்குளம் அணு மின் நிலையப் பிரச்சனையைத் தீர்ப்பதற்கு மத்திய அரசு அனைத்து நடவடிக்கைகளையும் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்றும், மாநில அரசின் மீது வீண் பழி சுமத்துவதை கைவிட வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன்.இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்2 days 18 hours ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி5 days 12 hours ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி1 week 2 days ago |
-
பார்லி. தேர்தல் வாக்குப்பதிவு சதவீதத்தில் குளறுபடி ஏன்? - சத்யபிரத சாகு விளக்கம்
22 Apr 2024சென்னை : செயலியில் கிடைத்த தகவல் அடிப்படையில் சதவீதத்தை அளித்த காரணத்தால் தான் வாக்குப்பதிவு சதவீதத்தில் மாறுபாடு ஏற்பட்டது என்று தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு த
-
இஸ்ரேல் ராணுவத்தின் உளவு பிரிவு தலைவர் திடீர் ராஜினாமா
22 Apr 2024டெல் அவிவ் : இஸ்ரேல் ராணுவத்தின் உளவு பிரிவு தலைவர் அஹ்ரோன் ஹலிவா திடீரெனெ ராஜினாமா செய்துள்ளார்.
-
கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் கேட்டவருக்கு ரூ.75,000 அபராதம் : டெல்லி ஐகோர்ட்டில் பொதுநல மனு தள்ளுபடி
22 Apr 2024புதுடெல்லி : கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்க கோரி மனு தாக்கல் செய்தவருக்கு ரூ.
-
இயக்குனர் ஷங்கரின் மூத்த மகள் ஐஸ்வர்யா ஷங்கர் திருமண வரவேற்பு
22 Apr 2024இந்திய திரையுலகின் பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் மூத்த மகள் ஐஸ்வர்யா ஷங்கர் - தருண் கார்த்திகேயன் திருமண வரவேற்பு நிகழ்ச்சி வெகு விமர்சையாக நடைபெற்றது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 22-04-2024.
22 Apr 2024 -
பிரதமரின் சர்ச்சை பேச்சு: தேர்தல் ஆணையத்திற்கு ஆழ்ந்த இரங்கல்: தமிழக அமைச்சர் பதிவு
22 Apr 2024சென்னை : பிரதமர் மோடியின் சர்ச்சை பேச்சிற்கு கண்டனம் தெரிவித்து தேர்தல் ஆணையத்திற்கு ஆழ்ந்த இரங்கல் என அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் பதிவிட்டுள்ளார்.
-
கம்யூ. சிந்தனையை செயல்படுத்த இன்டியா கூட்டணியினர் முயற்சி : உ.பி.யில் பிரதமர் மோடி பேச்சு
22 Apr 2024அலிகார் : மாவோயிஸ்ட், கம்யூனிஸ்டுகளின் சிந்தனையை இந்தியாவில் செயல்படுத்த இன்டியா கூட்டணியினர் முயற்சி செய்வதாக உத்தரப்பிரதேசத்தில் நடந்த கூட்டத்தில் பிரதமர் மோடி குற்றஞ
-
பிரச்சினைகளில் இருந்து மக்களை திசை திருப்ப பிரதமர் புதிய யுக்திகளை வைத்துள்ளார்: ராகுல் காந்தி
22 Apr 2024புதுடெல்லி : மக்களின் உண்மையான பிரச்சினைகளில் இருந்து அவர்களின் கவனத்தை திசை திருப்ப பிரதமர் மோடி பல புதிய யுக்திகளை கொண்டிருப்பதாகவும், ஆனால் அவரின் பொய்களுக்கு முடிவு
-
கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது : தமிழக பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை
22 Apr 2024சென்னை, தமிழகம் முழுவதும் பள்ளிகளில் கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது என்ற பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
-
மாணிக்கம் தாகூரை தகுதி நீக்கம் செய்யக்கோரிய மனு தள்ளுபடி
22 Apr 2024சென்னை : விருதுநகர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூரை தகுதி நீக்கம் செய்யக்கோரிய வழக்கை சென்னை ஐகோர்ட் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
-
ஜம்மு காஷ்மீரில் 9 இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை
22 Apr 2024ஜம்மு : ஜம்மு காஷ்மீரில் நேற்று 9 இடங்களில் தேசிய புலனாய்வு படை அதிகாரிகள் (என்.ஐ.ஏ.) சோதனையில் ஈடுபட்டனர்.
-
தமிழக மகளிர் காங்கிரசுக்கு புதிய தலைவர் நியமனம்
22 Apr 2024சென்னை : தமிழ்நாடு மகளிர் காங்கிரஸ் தலைவியாக ஹசீனா சையத் நியமிக்கப்பட்டுள்ளார்.
-
மக்களவை தேர்தல்: சூரத் தொகுதியின் பா.ஜ.க. வேட்பாளர் போட்டியின்றி தேர்வு
22 Apr 2024சூரத் : சூரத் தொகுதியின் பா.ஜ.க. வேட்பாளர் முகேஷ் தலால் போட்டியின்றி வெற்றி பெற்றுள்ளார்.
-
சென்னை-சேலம் விமான சேவை நேரம் மாற்றம்
22 Apr 2024சென்னை : சென்னை விமானநிலையத்துக்கு மதிய நேரத்தில் சேலத்தில் இருந்து இயக்கப்பட்டு வந்த தனியார் ஏர்லைன்ஸ் விமான சேவையின் நேரம் மாலை நேரத்துக்கு மாற்றப்பட்டு உள்ளது.
-
சென்னைக்கு குடிநீர் ஆதரமாக இருக்கும் வீராணம் ஏரி வறண்டது
22 Apr 2024கடலூர் : கடலூர் மாவட்டத்தில் உள்ள மிகப்பெரிய வீராணம் ஏரி வறண்டு காணப்படுகிறது.
-
கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி: 2,400 வி.ஐ.பி.களுக்கு மட்டும் பாஸ் வழங்க வேண்டும்: ஐகோர்ட் கிளை
22 Apr 2024மதுரை : மதுரை வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கும் நிகழ்வில் 'விஐபிகளுக்கு 2400 பாஸ் மட்டுமே வழங்க வேண்டும்; ஒரு பாஸ்க்கு ஒருவர் மட்டுமே என ஆற்றுக்குள் 2,400 பேர் மட்டுமே அனு
-
ஆசிரியர் பணி நியமன ஊழல் வழக்கு: 24,000 பணியிட உத்தரவுகளை ரத்து செய்து கொல்கத்தா ஐகோர்ட் உத்தரவு
22 Apr 2024கொல்கத்தா : மேற்கு வங்க ஆசிரியர்கள் பணி நியமன ஊழல் தொடர்பான வழக்கை விசாரித்த கொல்கத்தா ஐகோர்ட், மேற்கு வங்க பள்ளி சேவை ஆணையத்தால் அமைக்கப்பட்ட 2016-ம் ஆண்டு
-
மே 1-ம் தேதி வரை ஜாபர் சாதிக்கின் நீதிமன்ற காவல் மேலும் நீட்டிப்பு
22 Apr 2024புதுடெல்லி : சா்வதேச போதைப் பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட ஜாபா் சாதிக்கின் நீதிமன்றக் காவல் மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது.
-
நாடு முழுவதும் வெப்ப அலை: தேர்தல் ஆணையம் ஆலோசனை
22 Apr 2024புதுடெல்லி : நாடு முழுவதும் வெப்பத்தின் தாக்கம் கடுமையாக இருப்பதால் வாக்குப்பதிவு, பிரச்சாரம் நடைமுறைகளில் என்னென்ன மாற்றங்கள் செய்யலாம் என்பது குறித்து டெல்லியில
-
பாராளுமன்ற தேர்தல்:தமிழகத்தில் வாக்குப்பதிவு சதவீத குளறுபடிக்கு செயலியே காரணம்: தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தகவல்
22 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் நடைபெற்ற வாக்குப்பதிவில் ஏற்பட்ட குளறுபடிக்கு செயலியே காரணம் என தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு விளக்கம் அளித்துள்ளார்.
-
மாலத்தீவு பாராளுமன்ற தேர்தலில் அதிபர் முய்சு கட்சி அமோக வெற்றி
22 Apr 2024மாலே : மாலத்தீவு பாராளுமன்ற தேர்தலில் அதிபர் முய்சு தலைமையிலான பி.என்.சி. கட்சி அமோக வெற்றி பெற்றுள்ளது.
-
65 வயதுக்கு மேற்பட்டோரும் மருத்துவ காப்பீடு பெறலாம் : இந்தியக் காப்பீட்டு ஒழுங்குமுறை ஆணையம் அறிவிப்பு
22 Apr 2024புதுடெல்லி, இனி 65 வயதுக்கு மேற்பட்டவர்களும் மருத்துவ காப்பீடு பெறலாம் என இந்தியக் காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் (ஐஆர்டிஏஐ) தெரிவித்துள்ளது.
-
அசல் ஆவண நகல் ஒப்படைப்பு: செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 25-ம் தேதி வரை நீட்டிப்பு
22 Apr 2024சென்னை : செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் வரும் 25-ம் தேதி வரை 34-வது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது.
-
பாரதிராஜா, நட்டி, ரியோராஜ், சாண்டி இணைந்து நடிக்கும், "நிறம் மாறும் உலகில்"
22 Apr 2024நான்கு விதமான வாழ்க்கை, நான்கு கதைகள் அதை இணைக்கும் ஒரு புள்ளி, என நம் வாழ்வின் உறவுகளின் அவசியத்தை, உணர்வுகளை பேசும் அழகான படமாக இப்படம் உருவாகியுள்ளார் அறிமுக இயக்குந
-
வல்லவன் வகுத்ததடா விமர்சனம்
22 Apr 2024நல்லவங்கள ஆண்டவன் சோதிப்பான் ஆனா கை விட மாட்டான், கெட்டவங்களுக்கு ஆண்டவன் நிறைய கொடுப்பான் ஆனா கை விட்டுருவான்” என்ற வாக்கியத்தை வைத்துக்கொண்டு இயக்குநர் விநாயக்