முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மேலூர் அருகே அ.தி.மு.க. வேட்பாளருக்கு வெட்டு

புதன்கிழமை, 19 அக்டோபர் 2011      தமிழகம்
Image Unavailable

 

மேலூர், அக். 19 - மேலூர் அருகே தேர்தல் தகராறு காரணமாக எழுந்த மோதல் தொடர்பாக அ.தி.மு.க. வேட்பாளருக்கு வெட்டு விழுந்தது. இது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.  மேலூர் அருகே உள்ளது திருவாதவூர். இங்கு ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு ராஜேந்திரன் என்பவருடைய மகன் முருகன் மனைவி சுதா போட்டியிட்டார். அதே போல் மோகன் என்பவரது மனைவி சசிகலா சுயேட்சை வேட்பாளராக போட்டியிட்டார்.  இவர்களுக்குள் எழுந்த தேர்தல் முன் விரோதம் காரணமாக தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது. இதனால் இரு தரப்பினரும் மோதிக் கொண்டனர். இந்த சூழலில் இது குறித்து தகவலறிந்த மேலூர் டி.எஸ்.பி. மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தகராறில் ஈடுபட்ட கும்பலை விரட்டியடித்தனர். அப்போது நாலாபுறமும் கலவர கும்பல் சிதறி ஓடியது. 

மேலும் இந்த சம்பவத்திற்கு 15 வது ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட்ட அ.தி.மு.க வேட்பாளர் நல்லதம்பி என்பவரது மகன் முருகன்தான் காரணம் எனக் கருதி அவ்வழியே வந்த அவரை சரமாரியாக கும்பல் அரிவாள், கட்டை உள்ளிட்ட ஆயுதங்களால் தாக்கியது. இந்த தாக்குதலில் முருகனுக்கு வெட்டு விழுந்தது. இதில படுகாயமடைந்த முருகன் மேலூர் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். மேலும் தேர்தல் தகராறில் ராஜேந்திரனின் மகன் மோகனின் வீடும் அடித்து நொறுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. தேர்தல் தகராறில் எழுந்த மோதலையடுத்து 

அப்பகுதியில் பதட்டமான சூழ்நிலை நிலவுகிறது. இது குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்