முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தேர்தல் தகராறு: அ.தி.மு.க. வினருக்கு அமைச்சர் ஆறுதல்

புதன்கிழமை, 19 அக்டோபர் 2011      அரசியல்
Image Unavailable

 

நாகர்கோவில்,அக்.19 - குளச்சல் துறைமுக தெருவை சேர்ந்த பெனடிக்ட் (வயது 42), ஜான்சன் (வயது 28), ஜாண்யோஸ்கோ (வயது 43), சேவியர் (வயது 33), ஆரோக்கிய எட்வின் (வயது 40) ஆகிய 5 பேரும் ஓட்டு போட்டு விட்டு இரவு 9 மணிக்கு வீட்டுக்கு திரும்பி கொண்டிருந்தனர். அப்போது அவர்களை ஒரு கும்பல் வழிமறித்தது. அந்த கும்பல் அவர்களிடம் நீங்கள் அ.தி.மு.க.வுக்கா ஓட்டு போட்டீர்கள்? என்று கேட்டு தகராறு செய்தனர். இதனால் அவர்களுக்கிடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் 5 பேரும் காயமடைந்தனர். அவர்களை குளச்சல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இது குறித்து குளச்சல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இது குறித்து தகவல் அறிந்ததும் தமிழக வனத்துறை அமைச்சர் பச்சைமால் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெறுபவர்களை பார்த்து ஆறுதல் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்