முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மரணமடைந்த அ.தி.மு.க. நிர்வாகிக்கு முதல்வர் இரங்கல்

வியாழக்கிழமை, 20 அக்டோபர் 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, அக்.20 - சென்னை மாநகராட்சி தேர்தலின்போது தி.மு.க.வினரின் கொடூர தாக்குதலை வன்மையாக கண்டித்துள்ள முதல்வர் ஜெயலலிதா, இந்த தாக்குதலுக்கு ஆளாகி, உயிரிழந்துள்ள மோகனுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அ.தி.மு.க. பொதுச்செயலாளரும் தமிழக முதல்வருமான ஜெயலலிதா வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:

சென்னை மாநகராட்சிக்கு 17.10.2011 அன்று நடைபெற்ற தேர்தலின்போது திருவொற்றியூர் பகுதியை சேர்ந்த 7-வது வார்டில் கலவரத்தில் ஈடுபட்ட தி.மு.க. ரவுடிகள், தேர்தல் பணியாற்றிக்கொண்டிருந்த கழக உடன்பிறப்புகளான செல்வமணி, அவருடைய மனைவி வெண்ணிலா மற்றும் மோகன் ஆகியோர் மீது ஆயுதங்கள் கொண்டு தாக்குதல் நடத்தியதில், இவர்கள் மூவரும் கடுமையான காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், மோகன் அகால மரணமடைந்துவிட்டார்  என்ற செய்தி கேட்டு மிகுந்த வேதனை அடைந்தேன்.

தி.மு.க.வினரின் இந்த கொடூர தாக்குதலுக்கு எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

அன்புச்சகோதரர் மோகனை இழந்துவாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்வதுடன், அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் அமைதி பெற எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன். மேலும், காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் செல்வமணி, வெண்ணிலை ஆகியோர் விரைவில் பூரண நலம் பெற்று வீடு திரும்ப எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

இவ்வாறு அந்த இரங்கல் செய்தில் ஜெயலலிதா கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்