எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மதுரை,அக்.22 - தமிழகத்தில் நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் 10 மாநகராட்சிகளையுமே அ.தி.மு.க. கைப்பற்றி இமாலய சாதனை படைத்துவிட்டது. தனித்து போட்டியிட்ட நிலையிலும் இந்த வெற்றி கட்சிக்கு கிடைத்திருப்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இத்தேர்தலில் போட்டியிட்ட காங்கிரஸ், பா.ம.க., தே.மு.தி.க. போன்ற கட்சிகள் படுதோல்வியை சந்தித்துவிட்டன. ஆனால் அ.தி.மு.க. மாநகராட்சகளில் வெற்றிபெற்றதோடு 90-க்கும் மேற்பட்ட நகராட்சிகளையும் கைப்பற்றிவிட்டது. தி.மு.க.வுக்கு 23 நகராட்சிகள் மட்டுமே கிடைத்துள்ளன.
தமிழக சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணி அமைத்து போட்டியிட்டது. அந்த தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணிக்கு மக்கள் அமோக ஆதரவு அளித்தார்கள். அ.தி.மு.க. மட்டுமே கிட்டத்தட்ட 148 தொகுதிகளை வென்றது. ஆனால் உள்ளாட்சி தேர்தலில் கூட்டணி அமையவில்லை. எல்லா கட்சிகளுமே தனித்து போட்டியிட்டன. இதுவரை கூட்டணி இல்லாமல் உள்ளாட்சி தேர்தல் நடந்ததில்லை. தற்போது முதல் முறையாக அ.தி.மு.க. உள்பட எல்லா கட்சிகளும் தனித்து களம் இறங்கின. இதனால் இந்த கட்சிகளின் பலத்தை அறிய மக்களே ஆர்வத்தோடு காத்திருந்தார்கள். தேர்தலும் வந்தது. கடந்த 17,19 ஆகிய தேதிகளில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலிலும் வெற்றியை தாருங்கள் அ.தி.மு.க. பொதுச்செயலாளரும் முதல்வருமான ஜெயலலிதா தமிழக மக்களை அன்புடன் கேட்டுக்கொண்டார். அவர் கேட்டுக்கொண்டபடி தமிழக மக்கள் உள்ளாட்சி தேர்தலிலும் அ.தி.மு.க.வுக்கு மகத்தான வெற்றியை கொடுத்துவிட்டார்கள். தனித்து போட்டியிட்ட அ.தி.மு.க., சென்னை, மதுரை,உள்ளிட்ட 10 மாநகராட்சிகளையும் கைப்பற்றிவிட்டது. மேலும் 90 நகராட்சிகளையும் அ.தி.மு.க.கைப்பற்றி உள்ளது. 100-க்கும் மேற்பட்ட பேரூராட்சிகளையும் அ.தி.மு.க. கைப்பற்றியுள்ளது. ஆனால் தி.மு.க. வுக்கு 23 நகராட்சிகள் மட்டுமே கிடைத்துள்ளன. தே.மு.தி..க.2 நகராட்சிகளையும் இ.கம்யூனிஸ்ட் 2 நகராட்சிகளையும் ம.தி.மு.க. குளித்தலை நகராட்சியையும் பா.ஜ.க. 2 நகராட்சிகளையும் கைப்பற்றி உள்ளன. காங்கிரஸ், பா.ம.க.போன்ற கட்சிகள் படுதோல்வியை சந்தித்து உள்ளன.
சென்னை மாநகராட்சியில் அ.தி.மு.க. வேட்பாளராக போட்டியிட்ட சைதை துரைசாமி, தன்னை எதிர்த்து போட்டியிட்ட தி.மு.க. வேட்பாளர் சுப்பிரமணியத்தை விட சுமார் 2 லட்சத்து 68 ஆயிரத்து 6 வாக்குகள் நேற்று இரவு 8 மணி நிலவரப்படி பெற்றிருந்தார். சென்னை மாநகராட்சியில் மொத்தம் உள்ள 200 வார்டுகளில் 175 வார்டுகளை அ.தி.மு.க. கைப்பற்றிவிட்டது. காங்கிரஸ், தே.மு.தி.க., பா.ம.க. போன்ற கட்சிகள் படுதோல்வியை சந்தித்தன. திருச்சியில் அ.தி.மு.க. வேட்பாளராக போட்டியிட்ட ஜெயா, தன்னை எதிர்த்து போட்டியிட்ட தி.மு.க. வேட்பாளர் விஜயாவைவிட 52 ஆயிரத்து 415 வாக்குகள் கூடுதலாக பெற்று வெற்றிபெற்றார். மதுரையில் போட்டியிட்ட அ.தி.மு.க. வேட்பாளர் ராஜன்செல்லப்பா நேற்று இரவு 8 மணி நிலவரப்படி ஒரு லட்சத்து 42 ஆயிரத்து 119 வாக்குகள் கூடுதலாக பெற்றிருந்தார். கோவை அ.தி.மு.க. வேட்பாளர் செ.ம.வேலுசாமி நேற்று இரவு 8 மணி இரவு நிலவரப்படி 2 லட்சத்து 66 ஆயிரத்து 667 வாக்குகள் பெற்றிருந்தார். இவரை எதிர்த்து போட்டியிட்ட தி.மு.க. வேட்பாளர் கார்த்திக் ஒரு லட்சத்து 44 ஆயிரத்து 404 வாக்குகள் பெற்று பின்னணியில் இருந்தார். திருப்பூர் மாநகராட்சியில் அ.தி.மு.க. வேட்பாளராக போட்டியிட்ட விசாலாட்சி ஒரு லட்சத்து 36 ஆயிரத்து 949 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட தி.மு.க. வேட்பாளர் செல்வராஜ் 59 ஆயிரத்து 280 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்தார். ஈரோடு மாநகராட்சியில் அ.தி.மு.க. வேட்பாளராக போட்டியிட்ட மல்லிகா பரமசிவம் தன்னை எதிர்த்து போட்டியிட்ட தி.மு.க. வேட்பாளர் செல்லப்பொன்னியை விட 46 ஆயிரத்து 223 வாக்குகள் கூடுதலாக பெற்று வெற்றிபெற்றார். இதேபோல் வேலூரில் அ.தி.மு.க. வேட்பாளர் கார்த்திகாயினி சேலத்தில் அ.தி.மு.க. வேட்பாளர் சவுண்டப்பன், தூத்துக்குடியில் அ.தி.மு.க.வேட்பாளர் சசிகலாபுஷ்பா ஆகியோரும் அமோக வெற்றிபெற்றுள்ளனர். ஆகமொத்தம் 10 மாநகராட்சிகளையும் அ.தி.மு.க.கைப்பற்றி வரலாற்று சாதனை படைத்துவிட்டது. தி.மு.க. ஒரு மாநகராட்சியைக்கூட கைப்பற்றவில்லை. 90 நகராட்சிகளிலும் நேற்று இரவு 8 மணி நிலவரப்படி அ.தி.மு.க. வெற்றிவாகை சூடியுள்ளது. ராமநாதபுரம், பரமக்குடி, ராமேஸ்வரம், காரைக்குடி, தேவகோட்டை, சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம், உசிலம்பட்டி, தேனி, பெரியகுளம், கம்பம், கொடைக்கானல், கரூர், ஊட்டி, குன்னூர், கூடலூர், பண்ருட்டி,ராசிபுரம், கோவில்பட்டி, நாகை, மன்னார்குடி, கும்பகோணம், மேட்டூர், செங்கோட்டை, திருவள்ளூர், திருவேற்காடு, தாம்பரம், வேதாரண்யம், மறைமலைநகர், பொள்ளாச்சி, தர்மபுரி, பட்டுக்கோட்டை வாலாஜாபாத் போன்ற நகராட்சிகள் உள்பட 90-க்கும் மேலான நகராட்சிகளை அ.தி.மு.க. கைப்பற்றி உள்ளது. தி.மு.க. 23 நகராட்சிகளையும் தே.மு.தி.க. 2 நகராட்சிகளையும் இடது கம்யூனிஸ்ட் 2 நகராட்சிகளையும் குளித்தலை நகராட்சியை ம.தி.மு.க. வும் பா.ஜ. க. 2 நகராட்சிகளையும் கைப்பற்றி உள்ளன. ஆனால் இத்தேர்தலில் காங்கிரஸ், பா.ம.க. ஆகிய கட்சிகள் படுதோல்வியை சந்தித்துள்ளன. தனித்து போட்டியிட்டு சாதனை படைப்போம் என்று கூறிய விஜயகாந்த் கட்சி மண்ணை கவ்வியதுதான் மிச்சம்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்3 days 6 hours ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி6 days 10 min ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி1 week 2 days ago |
-
சென்னைக்கு குடிநீர் ஆதரமாக இருக்கும் வீராணம் ஏரி வறண்டது
22 Apr 2024கடலூர் : கடலூர் மாவட்டத்தில் உள்ள மிகப்பெரிய வீராணம் ஏரி வறண்டு காணப்படுகிறது.
-
கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி: 2,400 வி.ஐ.பி.களுக்கு மட்டும் பாஸ் வழங்க வேண்டும்: ஐகோர்ட் கிளை
22 Apr 2024மதுரை : மதுரை வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கும் நிகழ்வில் 'விஐபிகளுக்கு 2400 பாஸ் மட்டுமே வழங்க வேண்டும்; ஒரு பாஸ்க்கு ஒருவர் மட்டுமே என ஆற்றுக்குள் 2,400 பேர் மட்டுமே அனு
-
ஆந்திர சட்டசபை தேர்தல்: வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது காங்கிரஸ்
22 Apr 2024ஐதராபாத் : ஆந்திரப் பிரதேசத்தில் அடுத்த மாதம் நிகழவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் 38 வேட்பாளர்களை காங்கிரஸ் நேற்று அறிவித்துள்ளது.
-
நடிகை வைஜெயந்தி மாலா உள்ளிட்டோருக்கு பத்ம விருதுகளை வழங்கினார் ஜனாதிபதி திரெளபதி முர்மு
22 Apr 2024புதுடெல்லி : நடிகை வைஜெயந்தி மாலா உள்ளிட்டோருக்கு டெல்லியில் குடியரசுத் தலைவர் மாளிகையில் பத்ம விருதுகளை ஜனாதிபதி திரெளபதி முர்மு வழங்கினார்.
-
கேண்டிடேட்ஸ் செஸ் போட்டியில் வெற்றி: உலக சாம்பியன்ஷிப் தொடருக்கு முன்னேறிய தமிழக வீரர் குகேஷ்
22 Apr 2024ஒட்டோவா : கேண்டிடேட்ஸ் செஸ் தொடரின் 14-வது சுற்றில் இந்திய கிராண்ட்மாஸ்டரான டி.குகேஷ் அபார வெற்றி பெற்றுள்ளார்.
-
அமெரிக்கா: விபத்தில் இந்திய மாணவர்கள் இருவர் உயிரிழப்பு
22 Apr 2024நியூயார்க் : அமெரிக்காவின் அரிசோனா மாகாணத்தில் பீனிக்ஸ் சிட்டி நகரில் கார் ஒன்றில் இந்திய மாணவர்கள் இருவர் பயணம் செய்தபோது, எதிர் திசையில் இருந்து விரைவாக வந்த மற்றொரு
-
விராட் கோலிக்கு அபராதம்
22 Apr 2024ஐ.பி.எல். தொடரில் பெங்களூரு அணியை 1 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி கொல்கத்தா வெற்றி பெற்றது.
-
நடிகர் ரஜினி பட தலைப்பு அறிவிப்பு
22 Apr 2024சென்னை : ஜெயிலர் பட வெற்றியைத் தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த்தின் 171வது படத்திலும் சன் பிக்சர்ஸ் மீண்டும் இணைகிறது.
-
இன்டியா கூட்டணி வென்றால் முழு ஆதரவு வழங்குவோம் : மேற்கு வங்க முதல்வர் மம்தா அறிவிப்பு
22 Apr 2024கொல்கத்தா : இன்டியா கூட்டணி வென்று மத்தியில் ஆட்சிக்கு வந்தால் முழு ஆதரவு தருவோம் என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
-
பஞ்சாப்பை வீழ்த்தியது குஜராத்
22 Apr 2024சண்டிகர் : பஞ்சாப் கிங்ஸ் அணியை 3 விக்கெட்கள் வித்தியாசத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணி வெற்றிபெற்றது.
-
கர்நாடகாவில் 2-ம் கட்ட தேர்தல்: வேட்புமனுக்களை வாபஸ் பெற அவகாசம் முடிந்தது
22 Apr 2024பெங்களூரு : கர்நாடகாவில் 2-ம் கட்ட தேர்தலுக்கான வேட்புமனுக்களை வாபஸ் பெற கால அவகாசம் நேற்றுடன் முடிந்தது.
-
பாலியல் பலாத்காரத்துக்கு ஆளான 14 வயது சிறுமியின் 30 வார கருவை கலைக்க சுப்ரீம் கோர்ட் அனுமதி
22 Apr 2024புதுடில்லி : பாலியல் பலாத்காரத்துக்கு ஆளான 14 வயது சிறுமியின் 30 வார கருவை கலைக்க சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்து உத்தரவிட்டது.
-
கெஜ்ரிவாலின் உடல்நிலையை பரிசோதிக்க நிபுணர் குழு அமைக்க எய்ம்ஸ் நிர்வாகத்திற்கு கோர்ட் உத்தரவு
22 Apr 2024டெல்லி : கெஜ்ரிவாலின் உடல்நிலையை பரிசோதனை செய்ய நிபுணர் குழு அமைக்கும்படி டெல்லி எய்ம்ஸ் நிர்வாகத்திற்கு டெல்லி சி.பி.ஐ. சிறப்பு கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
-
பெங்களூரு, பஞ்சாப் அணி கேப்டன்களுக்கு அபராதம் : ஐ.பி.எல். நிர்வாகம் நடவடிக்கை
22 Apr 2024மும்பை : பெங்களூரு அணி கேப்டன் டு பிளெஸ்சிஸ், பஞ்சாப் அணி கேப்டன் சாம் கர்ரனுக்கு அபராதம் விதித்துள்ளது ஐ.பி.எல். நிர்வாகம்.
-
மீண்டும் நிலநடுக்கம்: தைவானில் அடுத்தடுத்து பல முறை அதிர்ந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சி
23 Apr 2024தைபே, தைவானின் கிழக்குப் பகுதியான ஹுவாலினில் நேற்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டது.
-
சட்டவிரோதமாக இங்கிலாந்தில் நுழைய முயன்ற 5 பேர் கடலில் மூழ்கி உயிரிழப்பு
23 Apr 2024பாரிஸ், பிரான்சில் இருந்து சட்டவிரோதமாக இங்கிலாந்திற்குள் நுழைய முயன்ற 5 பேர் கடலில் மூழ்கி உயிரிழந்தனர்.
-
சமுதாயத்தை தழைக்க செய்யும் கொடை புத்தகங்கள்: உலக புத்தக தினத்தை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு
23 Apr 2024சென்னை, ‘புத்தகங்கள் மனிதச் சமுதாயத்தைத் தழைக்கச் செய்யும் கொடை’ என உலக புத்தக தினத்தை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள
-
ஐ.நா.,வில் இந்திய பெண் கீதாவுக்கு முக்கியப்பதவி
23 Apr 2024வாஷிங்டன், இந்தோனேஷியாவில், ஐ.நா.,வின் ஒருங்கிணைப்பாளர் ஆக இந்தியாவைச் சேர்ந்த கீதா சபர்வால் என்பவர் நியமிக்கப்பட்டு உள்ளார்.
-
பார்லி. தேர்தல்: கேரளா உள்ளிட்ட 13 மாநிலங்களில் 2-ம் கட்ட பிரசாரம் இன்றுடன் நிறைவு: இறுதிக்கட்ட வாக்குசேகரிப்பில் வேட்பாளர்கள் தீவிரம்
23 Apr 2024டெல்லி, பாராளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான 2-ம் கட்ட பிரச்சாரம் இன்று மாலையுடன் ஓய்கிறது.
-
தமிழ்நாட்டில் குமரி, தேனி உள்ளிட்ட 13 மாவட்டங்களில் பறக்கும் படை சோதனை தொடரும்: தலைமைத் தேர்தல் அதிகாரி சாகு தகவல்
23 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் 13 மாவட்டங்களில் மட்டும் 24 மணி நேரமும் தேர்தல் பறக்கும் படை சோதனை தொடரும் என தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்தார்.
-
5 நாள் பயணமாக சீனா சென்றார் நவாஸ் ஷெரீப்
23 Apr 2024இஸ்லாமாபாத், 5 நாள் பயணமாக சீனா சென்றார் நவாஸ் ஷெரீப்.
-
இலங்கை: கார் பந்தய விபத்தில் பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு
23 Apr 2024கொழும்பு, இலங்கையின் ஊவா மாகாணத்தில் நடைபெற்ற கார் பந்தயத்தில் பங்கேற்ற கார் ஒன்று பார்வயாளர்களிடையே பாய்ந்ததில் 7 பேர் உயிரிழந்தனர்.
-
இந்து கடவுள்களை தொடர்ந்து காங்கிரஸ் கட்சி அவமதிக்கிறது: ராஜஸ்தானில் பிரதமர் மோடி பேச்சு
23 Apr 2024ஜெய்ப்பூர், ஹனுமன், ராமரை காங்கிரஸ் கட்சி தொடர்ந்து அவமதிக்கிறது என பிரதமர் மோடி குற்றம் சாட்டியுள்ளார்.
-
குலுங்கியது மதுரை மாநகர்: பச்சைப் பட்டு உடுத்தி வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர்: லட்சக்கணக்கான பக்தர்கர் திரண்டு சாமி தரிசனம்
23 Apr 2024மதுரை, சித்ரா பவுர்ணமியாம் நேற்று பச்சை பட்டு உடுத்தி கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கினார்.
-
வட தமிழக உள் மாவட்டங்களுக்கு இன்றும் வெப்ப அலை எச்சரிக்கை
23 Apr 2024சென்னை, தமிழகத்தின் உள் மாவட்டங்களில் 4 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகரிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.