முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தி.மு.க. தலைவர் கருணாநிதி டெல்லி பயணம்

சனிக்கிழமை, 22 அக்டோபர் 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, அக்.22 - தி.மு.க. தலைவர் கருணாநிதி நேற்று டெல்லி புறப்பட்டு சென்றார். இன்று அவர் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் திகார் சிறையில் உள்ள அவரது மகள் கனிமொழி ஆகியோரை சந்திப்பார் என கூறப்படுகிறது. 

இதுகுறித்த விபரம் வருமாறு:- ஸ்பெக்ட்ரம் முறைகேடு தொடர்பாக கைது செய்யப்பட்ட கனிமொழி எம்.பி. டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவர் மீது நம்பிக்கை மோசடி செய்ததாக சி.பி.ஐ. புதிய குற்றச்சாட்டு ஒன்றை சுமத்தியுள்ளது. இதை சி.பி.ஐ. சிறப்பு கோர்ட் ஏற்குமா என்பது இன்று (சனிக்கிழமை) தெரியும். 

இந்த நிலையில் தி.மு.க. தலைவர் கருணாநிதி நேற்று (வெள்ளிக்கிழமை) மாலை டெல்லி சென்றார். அவருடன் ராஜாத்தி அம்மாள், கனிமொழியின் மகன் ஆதித்யா ஆகியோரும் உடன் சென்றனர். நேற்று இரவு டெல்லியில் தங்கிய கருணாநிதி இன்று காலை கனிமொழியை சந்தித்து பேசுவார் என்று தெரிகிறது. திகார் சிறையில் இந்த சந்திப்பு நடைபெறும் என்று கூறப்படுகின்றது. 

இன்று மதியம் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை சந்தித்து பேச திட்டமிட்டுள்ளார். சோனியா காந்தி சமீபத்தில் அமெரிக்கா சென்று அறுவை சிகிச்சை செய்து திரும்பினார். அவரை சில தினங்களுக்கு முன்பு பாராளுமன்ற தி.மு.க. குழு தலைவர் டி.ஆர்.பாலு சந்தித்து பேசினார். அப்போது கருணாநிதி சந்திப்புக்காக நேரம் ஒதுக்கித் தருமாறு கேட்கப்பட்டது. அதன்படி தி.மு.க. தலைவர் கருணாநிதி இன்று சோனியாவை சந்திப்பார் என்று கூறப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்