எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மதுரை,அக்.22 - மதுரை மாநகராட்சி மேயர் தேர்தலில் அதிமுக வேட்பாளர் வி.வி.ராஜன்செல்லப்பா 1.73 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் அமோக வெற்றி பெற்றார். இந்த வெற்றியின் மூலம் 15 ஆண்டுகளுக்கு பின்னர் மதுரை மாநகராட்சியை அதிமுக கைப்பற்றியது. மதுரை மாநகராட்சி மேயர் பதவி மற்றும் 99 வார்டுகளுக்கான கவுன்சிலர் பதவிகளுக்கான தேர்தல் கடந்த 17ம் தேதி நடைபெற்றது. இந்த தேர்தலில் மொத்த வாக்காளர்கள் 9 லட்சத்து 95 ஆயிரத்து 21 பேர்களில் 6 லட்சத்து 33 ஆயிரத்து 150 வாக்காளர்கள் வாக்களித்தனர். மொத்தம் உள்ள 100 வார்டுகளில் 15 வது வார்டு அதிமுக வேட்பாளர் எஸ்.பி.ஜெயமணி மரணம் அடைந்ததால் அந்த வார்டில் தேர்தல் நடைபெறவில்லை. மீதமுள்ள 99 வார்டுகளுக்கும் வாக்குப்பதிவு நடந்தது. இந்த வாக்குப்பதிவு அமைதியான முறையில் நடந்தது. இந்த தேர்தலில் அதிமுக வேட்பாளராக வி.வி.ராஜன்செல்லப்பா, திமுக வேட்பாளர் பி.பாக்கியநாதன், இ.காங்கிரஸ் வேட்பாளராக ஐ.சிலுவை, தேமுதிக வேட்பாளராக கா.கவியரசு,பாரதிய ஜனதா கட்சி வேட்பாளராக ராஜேந்திரன் உள்ளிட்ட 26 பேர் போட்டியிட்டனர்.
மதுரை மாநகராட்சி தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டது. மருத்துவ கல்லூரி, அமெரிக்கன் கல்லூரி, தமிழ்நாடு பாலிடெக்னிக் ஆகிய 3 இடங்களில் எண்ணப்பட்டது. ஒவ்வொரு மையத்திலும் வார்டு வாரியாக இந்த வாக்குகள் எண்ணப்பட்டது. அதிமுக வேட்பாளர் ராஜன்செல்லப்பா ஆரம்பத்திலிருந்தே அதிக வாக்குகளை பெற்று முன்னணி வகித்தார். முதல் சுற்றிலிருந்து இறுதி சுற்று வரை அதிமுக வேட்பாளர் ராஜன்செல்லப்பா முன்னிலை வகித்தார். மொத்தம் 10 சுற்றுக்கள் வாக்குகள் எண்ணப்பட்டது. முடிவில் அதிமுக வேட்பாளர் ராஜன்செல்லப்பா ஒரு லட்சத்து 73 ஆயிரத்து 897 ஓட்டுக்கள் அதிகம் பெற்று அமோக வெற்றி பெற்றார். இந்த தேர்தலில் அதிமுக வேட்பாளர் வி.வி.ராஜன்செல்லப்பா 3 லட்சத்து 12 ஆயிரத்து 226 ஓட்டுக்களை பெற்றார். இவருக்கு அடுத்தபடியாக இரண்டாம் இடத்தை பிடித்த திமுக வேட்பாளர் பி.பாக்கியநாதன் 1 லட்சத்து 38 ஆயிரத்து 329 ஓட்டுக்களையும், மூன்றாவது இடத்தை பிடித்த தேமுதிக வேட்பாளர் கா.கவியரசு 88 ஆயிரத்து 788 ஓட்டுக்களையும், நான்காவது இடத்தை பிடித்த காங்கிரஸ் வேட்பாளர் ஐ.சிலுவை 22 ஆயிரத்து 904 ஓட்டுக்களையும், 5 வது இடத்தை பிடித்த பிஜேபி வேட்பாளர் டாக்டர் ராஜேந்திரன் 14 ஆயிரத்து 352 ஓட்டுக்களையும், 6 வது இடத்தை பிடித்த மதிமுக வேட்பாளர் பாஸ்கர சேதுபதி 12 ஆயிரத்து 619 ஓட்டுக்களையும் பெற்றனர்.
மாநகராட்சி மேயர் தேர்தலில் அதிமுக வேட்பாளர் வி.வி.ராஜன்செல்லப்பா வெற்றி பெற்றதாக ஓட்டு எண்ணிக்கையின் முடிவில் தேர்தல் அதிகாரியும், மாநகராட்சி கமிஷனருமான நடராஜன் அறிவித்தார். இதை தொடர்ந்து அதிமுக வேட்பாளர் வி.வி.ராஜன்செல்லப்பா வெற்றி பெற்றதற்கான சான்றிதழை தேர்தல் அலுவலர் நடராஜனிடம் இருந்து பெற்றுக்கொண்டார். இந்த நிகழ்ச்சியின் போது, அமைச்சர் செல்லூர் கே.ராஜூ, மாவட்ட செயலாளர்கள் ஏ.கே.போஸ் எம்எல்ஏ, முத்துராமலிங்கம் எம்எல்ஏ, கே.தமிழரசன் எம்எல்ஏ, முன்னாள் அமைச்சர்கள் அ.மா.பரமசிவம், வளர்மதி ஜெபராஜ், மாநில எம்ஜிஆர் மன்ற துணை செயலாளர் எம்.எஸ்.பாண்டியன், முன்னாள் எம்பிக்கள் எஸ்.டி.கே.ஜக்கையன், எஸ்.முத்துமணி, மாவட்ட அவைத்தலைவர் புதூர் துரைப்பாண்டி, பொருளாளர் வில்லாபுரம் ஜெ.ராஜா, துணைசெயலாளர் சி.தங்கம், இளைஞரணி செயலாளர் ஷ.ராஜலிங்கம் உள்ளிட்ட அதிமுகவினர் கலந்து கொண்டனர். இதைதொடர்ந்து வி.வி.ராஜன்செல்லப்பா ஓட்டு எண்ணிக்கை நடந்த மருத்துவ கல்லூரி மையத்தை விட்டு வெளியே வந்தார். அப்போது அதிமுகவினர் பட்டாசுகளை வெடித்து இனிப்புகளை வழங்கி வெற்றியை கொண்டாடினார்கள். பின்னர் வி.வி.ராஜன்செல்லப்பா கேகேநகர் ஆர்ச் அருகில் உள்ள எம்ஜிஆர் சிலைக்கு சென்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்த தேர்தலில் அதிமுக பெற்ற அமோக வெற்றியின் மூலம் 15 ஆண்டுகளுக்கு பிறகு மதுரை மாநகராட்சியை அதிமுக கைப்பற்றி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஸ்வீட் உருளைக்கிழங்கு கேக்1 day 12 hours ago |
பெப்பர் சிக்கன்5 days 12 hours ago |
ஹனி பட்டர் சிக்கன்1 week 1 day ago |
-
கெஜ்ரிவால் விவகாரத்தை தொடர்ந்து காங்கிரஸ் வங்கி கணக்கு குறித்து கருத்து தெரிவித்த அமெரிக்கா
28 Mar 2024வாஷிங்டன், டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் விவகாரத்தை தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்கு முடக்கம் குறித்து அமெரிக்கா கருத்து தெரிவித்துள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 28-03-2024.
28 Mar 2024 -
தி.மு.க., காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று தர்மபுரியில் பிரச்சாரம்
28 Mar 2024தர்மபுரி, தர்மபுரி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் தி.மு.க.
-
குன்றத்தில் வெகுவிமர்சையாக நடந்த சுப்பிரமணிய சுவாமி - தெய்வானை அம்மன் திருக்கல்யாண வைபவம்
28 Mar 2024மதுரை, மீனாட்சியம்மன், சுந்தரேஸ்வரர் பிரியாவிடை முன்னிலையில் திருப்பரங்குன்றத்தில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை அம்மன் திருக்கல்யாண வைபவம் வெகுவிமர்சையாக நேற்று நடைபெற்
-
முக்கிய வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்பு: தமிழகத்தில் வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை முடிந்தது: இறுதி வேட்பாளர்கள் பட்டியல் நாளை வெளியீடு
28 Mar 2024சென்னை, தமிழ்நாடு முழுவதும் வேட்புமனு தாக்கல் செய்த முக்கிய தலைவர்கள் அனைவரின் வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டுள்ளது.
-
5 நாள் பயணமாக கவர்னர் ரவி நாளை ஊட்டி செல்கிறார்
28 Mar 2024ஊட்டி, 5 நாள் பயணமாக கவர்னர் ஆர்.என். ரவி நாளை ஊட்டிக்கு புறப்பட்டு செல்கிறார்.
-
தாய்லாந்தில் ஓரின சேர்க்கையாளர் திருமணத்துக்கு சட்டப்பூர்வ அனுமதி
28 Mar 2024பாங்காங்க், ஓரின சேர்க்கையாளர் திருமணத்திற்கான சட்ட மசோதா தாய்லாந்து பாராளுமன்றத்தில் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது.
-
தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின், ராகுல் காந்தி இணைந்து பிரச்சாரம்: செல்வப்பெருந்தகை தகவல்
28 Mar 2024சென்னை, முதல்வர் மு.க.ஸ்டாலினும், ராகுல் காந்தியும் ஒன்றாக சேர்ந்து தமிழகத்தில் இண்டியா கூட்டணி வேட்பாளர்களுக்கு சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வாக்கு சேகரிக்க
-
வேட்புமனு தாக்கல் செய்ய ஏப். 3-ல் கேரளா செல்கிறார் ராகுல் காந்தி
28 Mar 2024திருவனந்தபுரம், ஏப்ரல் 3-ம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்ய கேரளா செல்கிறார். அதை தொடர்ந்து கல்பெட்டா கலெக்டர் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்கிறார்.
-
ஏப். 4-ல் டெல்லியில் கூடுகிறது காவிரி மேலாண்மை ஆணையம்
28 Mar 2024புது டெல்லி, காவிரி மேலாண்மை ஆணையத்தின் 29-வது கூட்டம் ஏப்ரல் 4-ம் தேதி டெல்லியில் நடைபெற உள்ளது.
-
ஈரோடு எம்.பி. கணேசமூர்த்தி மறைவு: முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல்
28 Mar 2024சென்னை, ஈரோடு மக்களவை உறுப்பினர் கணேசமூர்த்தி மறைவுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
-
2-ம் கட்ட தேர்தல்: 13 மாநிலங்களில் உள்ள 89 மக்களவை தொகுதிகளில் மனு தாக்கல் தொடங்கியது
28 Mar 2024புது டெல்லி, நாடு முழுவதும் பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்படும் நிலையில், இரண்டாவது கட்டமாக ஏப்ரல் 26-ம் தேதி 13 மாநிலங்களில் உள்ள 89 மக்களவை தொகுதிகளில் வாக்க
-
ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பி.எஸ். பெயரில் தாக்கலான 6 பேரின் வேட்புமனுவும் ஏற்பு
28 Mar 2024ராமநாதபுரம், பாராளுமன்ற மக்களவைத் தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பன்னீர் செல்வம் எனும் பெயரில் வேட்புமனு தாக்கல் செய்த 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டுள்ளது.
-
ஏப்.4-ல் மத்திய அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகை: சென்னை, மதுரை, சிவகங்கையில் பிரச்சாரம்
28 Mar 2024சென்னை, தேர்தல் பிரச்சாரத்துக்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஏப்ரல் 4-ம் தேதி தமிழகம் வரவுள்ளார். அவர் மதுரை, சிவகங்கை, சென்னையில் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.
-
கெஜ்ரிவாலை பதவியிலிருந்து நீக்க கோரிய மனு தள்ளுபடி
28 Mar 2024புது டெல்லி, அரவிந்த் கெஜ்ரிவாலை முதல்வர் பதவியில் இருந்து நீக்க கோரி தொடரப்பட்ட பொதுநல மனுவை தள்ளுபடி செய்து டெல்லி ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
-
இந்தியாவின் பணக்கார பெண்மணி சாவித்ரி ஜிண்டால் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகல்
28 Mar 2024புது டெல்லி, அரியானா முன்னாள் அமைச்சரும், பிரபல தொழில் நிறுவனமான ஓ.பி.
-
அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனை 3-வது முறையாக நிராகரித்தார் மொய்த்ரா
28 Mar 2024புது டெல்லி, திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளர் மஹுவா மொய்த்ரா மூன்றாவது முறையாக அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனை நிராகரித்துள்ளார்.
-
அடுத்த தலைமுறைக்கான பயணிகள் விமானத்தை உருவாக்கும் ஜப்பான்
28 Mar 2024டோக்கியோ, ஹைட்ரஜன் எரிபொருள் என்ஜினை பயன்படுத்தி அடுத்த தலைமுறைக்கான பயணிகள் விமானத்தை ஜப்பான் உருவாக்க உள்ளது.
-
புதுச்சேரியில் உதயநிதி 31-ம் தேதி பிரச்சாரம்
28 Mar 2024புதுச்சேரி, காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கத்துக்கு ஆதரவாக அமைச்சர் உதயநிதி வருகிற 31-ம் தேதி புதுச்சேரியில் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.
-
கிறிஸ்தவ ஆலயங்களில் இன்று புனித வெள்ளி சிறப்பு வழிபாடு
28 Mar 2024சென்னை, தமிழகம் முழுவதும் கிறிஸ்தவ ஆலயங்களில் இன்று புனித வெள்ளி சிறப்பு வழிபாடு நடத்தப்படுகிறது.
-
தமிழகத்தில் 1-ம் தேதி வரை வெப்பநிலை அதிகரிக்க கூடும்: சென்னை வானிலை மையம் தகவல்
28 Mar 2024சென்னை, தமிழகத்தில் வரும் 01-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2 டிகிரி செல்சியஸ் வரை படிப்படியாக அதிகரிக்கக் கூடும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்
-
அருணாச்சலில் போட்டியின்றி தேர்வாகும் முதல்வர் காண்டு உள்ளிட்ட 5 பா.ஜ.க. வேட்பாளர்கள்
28 Mar 2024ஈடாநகர், எதிர்க்கட்சிகள் தரப்பில் வேட்பாளர்கள் யாரும் மனு தாக்கல் செய்யாததால் அருணாசல பிரதேசத்தில் முதல்வர் பிமா காண்டு உள்ளிட்ட 5 பா.ஜ.க.
-
செந்தில் பாலாஜியின் புதிய மனு ஏப். 4-ம் தேதிக்கு தள்ளி வைப்பு
28 Mar 2024சென்னை, சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த புதிய மனுவுக்கு அமலாக்கத்துறை பதிலளிக்கும் படி உத்தரவிட்டு ஏப்ரல் 4-ம் தேதி
-
பார்லி. தேர்தலுக்கு பின் விடுபட்ட அனைவருக்கும் உரிமைத்தொகை: அமைச்சர் உதயநிதி வாக்குறுதி
28 Mar 2024ஸ்ரீபெரும்புதூர், பாராளுமன்ற மக்களவை தேர்தலுக்கு பின்னர் விடுபட்ட அனைவருக்கும் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
டி.என்.பி.எஸ்.சி. குரூப் 1 தேர்வு நடைபெறும் தேதி அறிவிப்பு: ஏப். 27 வரை விண்ணப்பிக்கலாம்
28 Mar 2024சென்னை, 90 காலிபணியிடங்களுக்கான குரூப் 1 தேர்வு அறிவிப்பை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.