முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விழுப்புரம் மாவட்ட கோமுகி அணையிலிருந்து தண்ணீர் திறப்பு -ஜெயலலிதா

திங்கட்கிழமை, 24 அக்டோபர் 2011      தமிழகம்
Image Unavailable

சென்னை, அக். - 24 - விழுப்புரம் மாவட்டம் கோமுகி அணையிலிருந்து தண்ணீர் திறந்துவிட ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இது குறித்த தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா விடுத்துள்ள அறிக்கை வருமாறு  விழுப்புரம் மாவட்டம், கோமுகி அணையிலிருந்து பழைய மற்றும் புதியபாசன நிலங்களுக்குப் பாசனத்திற்காக தண்ணீர் திறந்துவிடக் கோரி, வேளாண் பெருங்குடிமக்களிடமிருந்து எனக்குக் கோரிக்கைகள் வந்துள்ளன. வேளாண் பெருங்குடிமக்களின் வேண்டுகோளினை ஏற்று, விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பழைய மற்றும் புதிய பாசன நிலங்களின் பாசனத்திற்காக 24.10.2011 முதல் தண்ணீர் திறந்து விட நான் ஆணையிட்டுள்ளேன். இதனால், விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள சுமார் 10,860 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என்பதை நான் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்