முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முதல் அ.தி.மு.க. மேயர் சைதை துரைசாமி நாளை பதவி ஏற்கிறார்

திங்கட்கிழமை, 24 அக்டோபர் 2011      தமிழகம்
Image Unavailable

சென்னை, அக். - 24 - சென்னையில் மாநகராட்சி மேயர் பதவியை கைப்பற்றி முதல் அ.தி.மு.க. மேயர் என பெருமை பெற்ற சைதை துரைசாமி நாளை காலை மேயராக பதவி ஏற்கிறார். அவரை தொடர்ந்து கவுன்சிலர்களும் பதவி ஏற்கின்றனர். இதுபற்றிய விபரம் வருமாறு:- சென்னை மாநகராட்சியை முதன் முதலில் அ.தி.மு.க. கைப்பற்றி உள்ளது. புதிய மேயராக சைதை துரைசாமி வெற்றி பெற்றுள்ளார். அவர் நாளை (25-​ந்தேதி) மேயராக பதவி ஏற்கிறார். காலை 10 மணிக்கு மாநகராட்சி கூட்ட அரங்கில் பதவி ஏற்பு நிகழ்ச்சி நடக்கிறது. கமிஷனர் கார்த்திகேயன் பதவி பிரமாணம் செய்து வைக்கிறார். சைதை துரைசாமியை தொடர்ந்து 200 கவுன்சிலர்களும் பதவி ஏற்றுக்கொள்கிறார்கள். பதவி ஏற்பு விழாவுக்கான ஏற்பாடுகள் முழு வீச்சில் நடந்து வருகிறது. மாநகராட்சி மன்ற கூடத்தில் 200 கவுன்சிலர்கள் அமருவதற்கு இருக்கை வசதி உள்ளது. விழாவுக்கு வரும் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் முக்கிய விருந்தினர்கள் உள்பட விழா அரங்கில் 250 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கவுன்சிலர்கள், குடும்ப உறுப்பினர்கள் அமருவதற்கு அருகில் உள்ள அரங்கம் ஒதுக்கப்பட்டுள்ளது. பதவி ஏற்பு விழாவில் கலந்து கொள்ள வரும் பார்வையாளர்கள் அமருவதற்கு ரிப்பன் மாளிகை வளாகத்தில் சாமியானா பந்தல் போடப்படுகிறது. பதவி ஏற்பு விழாவை நேரடியாக காண்பதற்காக டிஜிட்டல் திரை பொருத்தப்படுகிறது. தற்போது மெட்ரோ ரெயில் பணிகள் ரிப்பன் மாளிகை வளாகத்தில் நடந்து வருவதால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படும் எனத்தெரிகிறது. எனவே பார்வையாளர்கள் வரும் வாகனங்களை அருகில் உள்ள நேரு விளையாட்டு அரங்கில் நிறுத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்