முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருச்சி மேற்கு அ.தி.மு.க எம்.எல்.ஏ.யாக பரஞ்ஜோதி பதவி ஏற்றார்

செவ்வாய்க்கிழமை, 25 அக்டோபர் 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, அக். - 25 - அ.தி.மு.க எம்.எல்.ஏ.யாக பரஞ்ஜோதி பதவி ஏற்றார். திருச்சி மேற்கு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற அமைச்சர் மரியம் பிச்சை விபத்தில் இறந்ததையொட்டி இடைத் தேர்தல் கடந்த 13 ந் தேதி நடைபெற்றது. அ.தி.மு.க சார்பில் போட்டியிட்ட பரஞ்ஜோதி முன்னாள் தி.மு.க அமைச்சர் கே.என்.நேருவை 14 ஆயிரத்தி 867 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். வெற்றிபெற்ற பரஞ்ஜோதி நேற்று நண்பகல் 12.30 மணி அளவில் சென்னை கோட்டையில் அ.தி.மு.க எம்.எல்.ஏ.யாக பதவி ஏற்றார். இவருக்கு சபாநாயகர் டி.ஜெயகுமார் பதவி பிரமாணம் செய்து வைத்தார். எம்.எல்.ஏ.யாக பதவி ஏற்ற பரஞ்ஜோதிக்கு சபாநாயகர் டி.ஜெயகுமார் பொன்னாடை போர்த்தி வாழ்த்து தெரிவித்தார் நிதி அமைச்சர் ஒ.பன்னீர் செல்வம், வேளாண்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் நத்தம் விஸ்வநாதன் ஆகியோரும் வாழ்த்து தெரிவித்தனர். பதவி ஏற்பு நிகழ்ச்சியில் அமைச்சர்கள் கே.பி.முனுசாமி, செல்லூர் ராஜீ, பி.வி.ரமணா, ஆர்.பி.உதயகுமார், கோகுலஇந்திரா, செல்லப்பாண்டியன், முகம்மது ஜான், சிவபதி, திருச்சி மாவட்ட பொறுப்பாளர் வைகை செல்வன் எம்.எல்.ஏ எம்.ஜி.ஆர் மன்ற செயலாளர் தமிழ்மகன் உசேன், அன்வர் ராஜா, பொள்ளாச்சி ஜெயராமன், உள்பட பலர் கலந்து கொண்டனர்.

பதவி ஏற்ற பிறகு முதல்வர் ஜெயலலிதாவை பரஞ்ஜோதி எம்.எல்.ஏ. குடும்பத்தினருடன் சந்தித்து வாழ்த்து பெற்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்