எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புதுடெல்லி, மார்ச் - 9 - மூன்று நாட்கள் இழுபறியாக நீடித்த காங்கிரஸ், தி.மு.க. தொகுதி பங்கீடு விவகாரத்தில் நேற்று ஒரு புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. காங்கிரஸ் கேட்ட 63 தொகுதிகளையும் கொடுக்க தி.மு.க. மேலிடம் முடிவுசெய்துள்ளதாக முன்னாள் மத்திய அமைச்சர் குலாம்நபி ஆசாத் கூறியுள்ளார். தமிழக சட்டசபை தேர்தல் வருகிற ஏப்ரல் 13ம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலுக்கான தொகுதி பங்கீடு தொடர்பாக தி.மு.க.வுக்கும் காங்கிரசுக்கும் இடையே இழுபறி நீடித்துவந்த நிலையில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு கூட்டணி முறிந்துவிட்டதாக தி.மு.க. தரப்பில் அறிவிக்கப்பட்டது.
இந்த அறிவிப்பை கேட்டவுடனேயே இதைத்தான் நாங்கள் எதிர்பார்த்தோம் என்ற நிலையில் இருந்த காங்கிரஸ் தொண்டர்கள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் பட்டாசுகளை வெடித்து கோலாகலமாக கொண்டாடினார்கள். இதனால் தி.மு.க.வினர் கடும் கோபமும் அதிர்ச்சியும் அடைந்தனர். இதையடுத்து மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் அங்கம் வகிக்கும் தி.மு.க. அக்கூட்டணியில் தொடர்ந்து நீடிக்க இருப்பதாகவும், ஆனால் பிரச்சனைகளின் அடிப்படையில் வெளியில் இருந்து ஆதரவு அளிப்பதாகவும் கூறியிருந்தது. என்றாலும் தி.மு.க.வைச் சேர்ந்த 6 மத்திய மந்திரிகளும் தங்களது பதவியை ராஜினாமா செய்வார்கள் என்றும் அறிவிக்கப்பட்டு இருந்தது. இதையடுத்து தி.மு.க. மத்திய மந்திரிகள் மு.க.அழகிரி, தயாநிதி மாறன், காந்திசெல்வன், நெப்போலியன், ஜெகத்ரட்சகன், ஆகியோர் டெல்லி புறப்பட்டு சென்றனர். ஏற்கனவே பழனிமாணிக்கம் டெல்லியில் இருக்கிறார் என்றும், அவரும் இவர்களுடன் சேர்ந்து ராஜினாமா கடிதங்களை நேற்று முன்தினம் காலை 11 மணிக்கு பிரதமர் மன்மோகன் சிங்கிடம் கொடுப்பார்கள் என்றும் தி.மு.க. மேலிடம் அறிவித்து இருந்தது. ஆனால் குறிப்பிட்ட அந்த தேதியில் அந்த நேரத்தில் ராஜினாமா கடிதங்கள் கொடுக்கப்படவில்லை. இதுகுறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு திங்கள்கிழமை மாலையில் இவர்கள் ராஜினாமா கடிதங்களை கொடுப்பார்கள் என்று டெல்லியில் டி.ஆர்.பாலு தெரிவித்திருந்தார். அதுவும் நடக்கவில்லை. இதனைத் தொடர்ந்து தி.மு.க. தலைவர் கருணாநிதியை மத்திய நிதி அமைச்சரும், மூத்த காங்கிரஸ் தலைவர்களில் ஒருவருமான பிரணாப்முகர்ஜி தொலைபேசியில் 2 முறை தொடர்புகொண்டு சமரச பேச்சுவார்த்தை நடத்தியதாக தி.மு.க. தலைமை தெரிவித்திருந்தது. இதனைத் தொடர்ந்து ராஜினாமா செய்வது மேலும் ஒரு நாள் தள்ளிவைக்கப்படுவதாகவும் துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
இந்த நிலையில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை நேற்று முன்தினம் தி.மு.க. மத்திய மந்திரிகள் மு.க.அழகிரி, தயாநிதி மாறன் ஆகியோர் சந்தித்து பேசினார்கள். ஆனால் அந்த பேச்சுவார்த்தையிலும் எந்தவிதமான சமரசமும் ஏற்படவில்லை. முறிந்துபோனதாக அறிவிக்கப்பட்ட தி.மு.க., காங்கிரஸ் கூட்டணி மீண்டும் தொடருமா? என்ற கேள்விக்குறி பல்வேறு தரப்பினர் மத்தியில் நிலவிய நிலையில் நேற்று மாலை டெல்லியில் மத்திய அமைச்சரும் மூத்த காங்கிரஸ் தலைவர்களில் ஒருவருமான குலாம்நபி ஆசாத் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுகையில், காங்கிரஸ் கட்சி விரும்பும் 63 தொகுதிகளையும் தர தி.மு.க. மேலிடம் சம்மதித்துவிட்டதாகவும், அதனால் தி.மு.க. -காங்கிரஸ் கூட்டணி தொடரும் என்றும் ஆசாத் கூறினார். இந்த கூட்டணியில் இரு கட்சிகளும் சேர்ந்து செயல்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
கடந்த 3 நாட்களாக காங்கிரஸ் -தி.மு.க. உறவு நீடிக்குமா என்ற நிச்சயமற்ற தன்மை நிலவிவந்த நிலையில் குலாம் நபி ஆசாத்தின் இந்த அறிவிப்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 60 க்கு மேல் ஒரு தொகுதிகூட ஒதுக்க முடியாது என்று அடம்பிடித்த தி.மு.க. மேலிடம் கடைசியில் காங்கிரஸ் கேட்ட 63 தொகுதிகளையுமே அதற்கு வாரி வழங்கியுள்ளதன் மர்மம் என்ன என்பதுதான் தெரியவில்லை. இது திரைமறைவு ரகசியங்கள் இந்த விவகாரத்தில் இருக்கலாமோ என்ற சந்தேகத்தை பொதுமக்கள் மத்தியில் எழுப்பியுள்ளது. தி.மு.க. காங்கிரஸ் இடையே மூன்று நாட்களுக்கு பிறகு தொகுதி உடன்பாடு ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இதன் பின்னணி என்ன என்பது குறித்து சில தகவல்கள் கிடைத்துள்ளன. அதாவது ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரத்தில் தன் குடும்பத்தினரை விசாரிக்கக் கூடாது. தன் குடும்பத்தினர் மீது நடவடிக்கை எதுவும் எடுக்கக்கூடாது என்று காங்கிரஸ் மேலிடத்தை தி.மு.க. தலைவர் நிர்பந்தம் செய்துவந்தார். அதே நிபந்தனையை கடந்த 3 நாட்களாக தொடர்ந்து வலியுறுத்தி வந்ததாகவும் கூறப்படுகிறது. இதுபோன்ற பேரங்களுக்கு பிறகே நேற்று மாலையில் ஒரு உடன்பாடு ஏற்பட்டுள்ளதால் அரசியல் நோக்கர்கள் மத்தியில் இது பல சந்தேகங்களையும் கேள்விகளையும் எழுப்பியுள்ளது. எது எப்படியோ, 3 நாட்கள் நீடித்த நாடகம் நேற்று ஒருவழியாக முடிவுக்கு வந்தது. இந்த நாடகத்தை முடிவுக்கு கொண்டுவர தி.மு.க. தலைவர்கள் தலைநகரில் படாதபாடு பட்டதாகவும் கூறப்படுகிறது. இதற்காகவே டெல்லியில் முகாமிட்டு சோனியா முதல் பிரணாப்வரை அவர்கள் சந்தித்து தங்கள் காரியத்தை முடித்துக்கொண்டனர். காங்கிரசுக்கு 63 தொகுதிகள் ஒதுக்குவதாக கூறி தங்களது 3 நாள் நாடகத்திற்கு முற்றுப்புள்ளியும் வைத்துள்ளார்கள். என்னதான் உடன்பாடு ஏற்பட்டாலும் காங்கிரஸ் தொண்டர்களுக்கு இது மகிழ்ச்சியை ஏற்படுத்தவில்லை. இந்த கூட்டணி தேர்தல் கூட்டணியாக இருக்குமே தவிர, தொண்டர்கள் மத்தியில் உண்மையான கூட்டணியாக இந்த கூட்டணி இருக்குமா என்பது சந்தேகமே...
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஸ்வீட் உருளைக்கிழங்கு கேக்1 day 12 hours ago |
பெப்பர் சிக்கன்5 days 12 hours ago |
ஹனி பட்டர் சிக்கன்1 week 1 day ago |
-
கெஜ்ரிவால் விவகாரத்தை தொடர்ந்து காங்கிரஸ் வங்கி கணக்கு குறித்து கருத்து தெரிவித்த அமெரிக்கா
28 Mar 2024வாஷிங்டன், டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் விவகாரத்தை தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்கு முடக்கம் குறித்து அமெரிக்கா கருத்து தெரிவித்துள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 28-03-2024.
28 Mar 2024 -
முக்கிய வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்பு: தமிழகத்தில் வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை முடிந்தது: இறுதி வேட்பாளர்கள் பட்டியல் நாளை வெளியீடு
28 Mar 2024சென்னை, தமிழ்நாடு முழுவதும் வேட்புமனு தாக்கல் செய்த முக்கிய தலைவர்கள் அனைவரின் வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டுள்ளது.
-
தி.மு.க., காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று தர்மபுரியில் பிரச்சாரம்
28 Mar 2024தர்மபுரி, தர்மபுரி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் தி.மு.க.
-
குன்றத்தில் வெகுவிமர்சையாக நடந்த சுப்பிரமணிய சுவாமி - தெய்வானை அம்மன் திருக்கல்யாண வைபவம்
28 Mar 2024மதுரை, மீனாட்சியம்மன், சுந்தரேஸ்வரர் பிரியாவிடை முன்னிலையில் திருப்பரங்குன்றத்தில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை அம்மன் திருக்கல்யாண வைபவம் வெகுவிமர்சையாக நேற்று நடைபெற்
-
தாய்லாந்தில் ஓரின சேர்க்கையாளர் திருமணத்துக்கு சட்டப்பூர்வ அனுமதி
28 Mar 2024பாங்காங்க், ஓரின சேர்க்கையாளர் திருமணத்திற்கான சட்ட மசோதா தாய்லாந்து பாராளுமன்றத்தில் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது.
-
தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின், ராகுல் காந்தி இணைந்து பிரச்சாரம்: செல்வப்பெருந்தகை தகவல்
28 Mar 2024சென்னை, முதல்வர் மு.க.ஸ்டாலினும், ராகுல் காந்தியும் ஒன்றாக சேர்ந்து தமிழகத்தில் இண்டியா கூட்டணி வேட்பாளர்களுக்கு சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வாக்கு சேகரிக்க
-
5 நாள் பயணமாக கவர்னர் ரவி நாளை ஊட்டி செல்கிறார்
28 Mar 2024ஊட்டி, 5 நாள் பயணமாக கவர்னர் ஆர்.என். ரவி நாளை ஊட்டிக்கு புறப்பட்டு செல்கிறார்.
-
ஆஸ்திரேலியா ஒப்பந்த பட்டியல்: முக்கிய வீரர்களுக்கு இடமில்லை
28 Mar 2024மெல்போர்ன், ஆஸ்திரேலிய ஆடவர் கிரிக்கெட் அணிக்கு மத்திய ஒப்பந்தப் பட்டியல் வெளியாகியுள்ளது. இதில் பல முக்கிய வீரர்களுக்கு இடமில்லை.
-
ஏப். 4-ல் டெல்லியில் கூடுகிறது காவிரி மேலாண்மை ஆணையம்
28 Mar 2024புது டெல்லி, காவிரி மேலாண்மை ஆணையத்தின் 29-வது கூட்டம் ஏப்ரல் 4-ம் தேதி டெல்லியில் நடைபெற உள்ளது.
-
ஏப்.4-ல் மத்திய அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகை: சென்னை, மதுரை, சிவகங்கையில் பிரச்சாரம்
28 Mar 2024சென்னை, தேர்தல் பிரச்சாரத்துக்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஏப்ரல் 4-ம் தேதி தமிழகம் வரவுள்ளார். அவர் மதுரை, சிவகங்கை, சென்னையில் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.
-
வேட்புமனு தாக்கல் செய்ய ஏப். 3-ல் கேரளா செல்கிறார் ராகுல் காந்தி
28 Mar 2024திருவனந்தபுரம், ஏப்ரல் 3-ம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்ய கேரளா செல்கிறார். அதை தொடர்ந்து கல்பெட்டா கலெக்டர் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்கிறார்.
-
ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பி.எஸ். பெயரில் தாக்கலான 6 பேரின் வேட்புமனுவும் ஏற்பு
28 Mar 2024ராமநாதபுரம், பாராளுமன்ற மக்களவைத் தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பன்னீர் செல்வம் எனும் பெயரில் வேட்புமனு தாக்கல் செய்த 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டுள்ளது.
-
ஈரோடு எம்.பி. கணேசமூர்த்தி மறைவு: முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல்
28 Mar 2024சென்னை, ஈரோடு மக்களவை உறுப்பினர் கணேசமூர்த்தி மறைவுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
-
2-ம் கட்ட தேர்தல்: 13 மாநிலங்களில் உள்ள 89 மக்களவை தொகுதிகளில் மனு தாக்கல் தொடங்கியது
28 Mar 2024புது டெல்லி, நாடு முழுவதும் பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்படும் நிலையில், இரண்டாவது கட்டமாக ஏப்ரல் 26-ம் தேதி 13 மாநிலங்களில் உள்ள 89 மக்களவை தொகுதிகளில் வாக்க
-
கிறிஸ்தவ ஆலயங்களில் இன்று புனித வெள்ளி சிறப்பு வழிபாடு
28 Mar 2024சென்னை, தமிழகம் முழுவதும் கிறிஸ்தவ ஆலயங்களில் இன்று புனித வெள்ளி சிறப்பு வழிபாடு நடத்தப்படுகிறது.
-
அடுத்த தலைமுறைக்கான பயணிகள் விமானத்தை உருவாக்கும் ஜப்பான்
28 Mar 2024டோக்கியோ, ஹைட்ரஜன் எரிபொருள் என்ஜினை பயன்படுத்தி அடுத்த தலைமுறைக்கான பயணிகள் விமானத்தை ஜப்பான் உருவாக்க உள்ளது.
-
கெஜ்ரிவாலை பதவியிலிருந்து நீக்க கோரிய மனு தள்ளுபடி
28 Mar 2024புது டெல்லி, அரவிந்த் கெஜ்ரிவாலை முதல்வர் பதவியில் இருந்து நீக்க கோரி தொடரப்பட்ட பொதுநல மனுவை தள்ளுபடி செய்து டெல்லி ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
-
இந்தியாவின் பணக்கார பெண்மணி சாவித்ரி ஜிண்டால் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகல்
28 Mar 2024புது டெல்லி, அரியானா முன்னாள் அமைச்சரும், பிரபல தொழில் நிறுவனமான ஓ.பி.
-
அருணாச்சலில் போட்டியின்றி தேர்வாகும் முதல்வர் காண்டு உள்ளிட்ட 5 பா.ஜ.க. வேட்பாளர்கள்
28 Mar 2024ஈடாநகர், எதிர்க்கட்சிகள் தரப்பில் வேட்பாளர்கள் யாரும் மனு தாக்கல் செய்யாததால் அருணாசல பிரதேசத்தில் முதல்வர் பிமா காண்டு உள்ளிட்ட 5 பா.ஜ.க.
-
தமிழகத்தில் 1-ம் தேதி வரை வெப்பநிலை அதிகரிக்க கூடும்: சென்னை வானிலை மையம் தகவல்
28 Mar 2024சென்னை, தமிழகத்தில் வரும் 01-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2 டிகிரி செல்சியஸ் வரை படிப்படியாக அதிகரிக்கக் கூடும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்
-
செந்தில் பாலாஜியின் புதிய மனு ஏப். 4-ம் தேதிக்கு தள்ளி வைப்பு
28 Mar 2024சென்னை, சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த புதிய மனுவுக்கு அமலாக்கத்துறை பதிலளிக்கும் படி உத்தரவிட்டு ஏப்ரல் 4-ம் தேதி
-
அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனை 3-வது முறையாக நிராகரித்தார் மொய்த்ரா
28 Mar 2024புது டெல்லி, திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளர் மஹுவா மொய்த்ரா மூன்றாவது முறையாக அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனை நிராகரித்துள்ளார்.
-
புதுச்சேரியில் உதயநிதி 31-ம் தேதி பிரச்சாரம்
28 Mar 2024புதுச்சேரி, காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கத்துக்கு ஆதரவாக அமைச்சர் உதயநிதி வருகிற 31-ம் தேதி புதுச்சேரியில் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.
-
டி.என்.பி.எஸ்.சி. குரூப் 1 தேர்வு நடைபெறும் தேதி அறிவிப்பு: ஏப். 27 வரை விண்ணப்பிக்கலாம்
28 Mar 2024சென்னை, 90 காலிபணியிடங்களுக்கான குரூப் 1 தேர்வு அறிவிப்பை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.