முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முஷாரப்புக்கு கைது வாரண்ட்

ஞாயிற்றுக்கிழமை, 30 அக்டோபர் 2011      உலகம்
Image Unavailable

இஸ்லாமாபாத், அக். - 30 - பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷாரப்புக்கு கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. பல்சிஸ்தான் தேசிய தலைவர் நவாஸ் அக்பர் கொலை செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக முஷாரப் மற்றும் முன்னாள் பிரதமர் சவுகத் அஜீஸ் ஆகியோருக்கு கைது வாரண்ட் பிறப்பித்து மாவட்ட நீதிபதி உத்தரவிட்டுள்ளார். இதற்கு முன்பு இந்த வழக்கு தொடர்பாக மாகாண உள்துறை அமைச்சர் சோஹிப் அகமதை கைது செய்ய வாரண்ட் பிறப்பிக்குமாறு புலனாய்வு அமைப்பினர் கேட்டுக் கொண்டனர். வெளிநாட்டில் உள்ள முஷாரப்பை பாகிஸ்தானுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்குமாறு பலுசிஸ்தான் மாகாண அரசு கோரிக்கை விடுத்துள்ளது. ஆனால் பாகிஸ்தான் அரசு அதிகாரிகள் இது தொடர்பாக கைது ஆணை தேவை என்று கோரியுள்ளனர். அதன் மூலம்தான் சர்வதேச போலீசாரிடம் முஷாரப்பை கைது செய்யுமாறு கோர முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு தொடர்பாக கொலை செய்யப்பட்ட நவாப் அக்பரின் மகன் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில்தான் முதல் தகவல் அறிக்கைபதிவு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்