முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

2 ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கு - சி.பி.ஐ.க்கு சுப்ரீம் கோர்ட் கேள்வி

செவ்வாய்க்கிழமை, 1 நவம்பர் 2011      ஊழல்
Image Unavailable

 

புது டெல்லி, நவ.1 - 2 ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள தி.மு.க. எம்.பி. கனிமொழி உள்ளிட்டோரின் ஜாமீன் மனுக்கள் தொடர்பாக சி.பி.ஐ. இரண்டு விதமாக பேசி வருவது ஏன் என்று சுப்ரீம் கோர்ட் கேள்வி எழுப்பியுள்ளது. தி.மு.க. எம்.பி. கனிமொழி, கலைஞர் டி.வியின் நிர்வாக இயக்குனர் சரத்குமார், குசேகரன் ப்ரூட்ஸ் மற்றும் காய்கறிகள் நிறுவன தலைவர்கள் ஆசிப் பல்வா, ராஜீவ் அகர்வால் மற்றும் பாலிவுட் தயாரிப்பாளர் கரீம் மொரானி ஆகியோரின் ஜாமீன் மனுக்களை பாட்டியாலா சிறப்பு நீதிமன்றத்தில் கடந்த வாரம் விசாரணைக்கு வந்தது. அப்போது அவர்களது ஜாமீன் மனுக்களுக்கு சி.பி.ஐ. எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. முன்னதாக, 2 ஜி வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள அனைவரது ஜாமீன் மனுக்களையும் பாட்டியாலா விசாரணை நீதிமன்றத்தில் எதிர்க்கப் போவதாக சுப்ரீம் கோர்ட்டில் சி.பி.ஐ. தெரிவித்திருந்தது. 

இந்த நிலையில் இதே வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள யுனிடெக் நிர்வாக இயக்குனர் சஞ்சய் சந்திரா, ஸ்வான் டெலிகாம் வினோத் கோயங்கா, ரிலையன்ஸ் அனில் அம்பானி குழும அதிகாரிகளான ஹரிநாயர், கவுதம் தோஷி மற்றும் சுரேந்திரா பிபாரா ஆகியோரின் ஜாமீன் மனுக்கள் சுப்ரீம் கோர்ட்டில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது குற்றம் சாட்டப்பட்ட ஒருவர் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ராம்ஜெத்மலானி, இந்த வழக்கில் 5 பேரின் ஜாமீன் மனுக்களுக்கு பாட்டியாலா நீதிமன்றத்தில் சி.பி.ஐ. எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்றார். 

இதையடுத்து நீதிபதிகள் சிங்வி, தத்தூ ஆகியோர் சி.பி.ஐ.க்கு சரமாரியான கேள்விகளை எழுப்பினர். ஆதாரங்கள் கலைக்கப்பட மாட்டாது என்பதில் சி.பி.ஐ. உறுதியாக இருந்தால் ஏன் குற்றம் சாட்டப்பட்டவர்களை சிறையில் வைத்திருக்க வேண்டும்? அவர்களிடம் மேலும் நீங்கள் விசாரிக்க விரும்பாத போது அவர்களை ஏன் சிறையில் வைத்திருக்க வேண்டும் என்று கேள்வி எழுப்பினர். விசாரணை நீதிமன்றத்தில் என்ன விவாதிக்கப்பட்டது என்ற விவரத்தை உடனடியாக தாக்கல் செய்யுமாறு மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஹரீன்ராவலுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள் விசாரணையை நவம்பர் 3 ம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்