முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அலையில் சிக்கி உயிரிழந்த சிறுவன் குடும்பத்திற்கு ரூ.1 லட்சம் நிதி-ஜெயலலிதா அறிவிப்பு

புதன்கிழமை, 9 நவம்பர் 2011      தமிழகம்
Image Unavailable

சென்னை, நவ.- 9 - கடல் அலையில் சிக்கி உயிரிழந்த சிறுவன் குடும்பத்திற்கு ரூ.1 லட்சம் நிதி வழங்குவதாக முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். இது குறித்து முதல்வர்  ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- காஞ்சிபுரம் மாவட்டம் திருக்கழுக்குன்றம் வட்டம் கொக்கிலமேடு கிராமத்தைச் சேர்ந்த ஆரியப்பன் என்பவரின் மகன் சிறுவன் முத்துக்குமார் 7.11.2011 அன்று கடலை ஒட்டியுள்ள பகுதியில் விளையாடிக்கொண்டிருந்தபோது பெரும் அலையில் சிக்கி உயிரிழந்தார் என்ற செய்தியை அறிந்து நான் மிகவும் துயற்றேன். இத்துயரச் சம்பவத்தில் அகால மரணமடைந்த சிறுவன் முத்துக்குமாரின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதோடு, முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.1 லட்சம் வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன். இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்