முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஸ்ரீவில்லி ஆட்டோ மீது ரயில் மோதி 2 பேர் படுகாயம்: ஒருவர் பலி

புதன்கிழமை, 9 மார்ச் 2011      தமிழகம்
Image Unavailable

 

ஸ்ரீவில்லி,மார்ச்.- 9 - ஸ்ரீவில்லி அருகே ஆட்டோ மீது ரயில் மோதிய விபத்தில் 2 பேர் படுகாயமடைந்தனர். ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.  ஸ்ரீவில்லி அருகே உள்ள நாச்சியார்பட்டியை சேர்ந்தவர் பொன்ராஜ். இவர் சமயல் வேலை செய்து வந்தார். இவருடைய உறவினர் நாராயணசாமி. இவர்கள் இருவரும் அத்திகுளத்தை சேர்ந்த முருகனின் ஆட்டோவில் ஸ்ரீவில்லியில் இருந்து நாச்சியார்பட்டிக்கு சென்றனர். அப்போது ஆளில்லாத லெவல் கிராசிங்கில் ஆட்டோ நுழைந்தது. அந்த நேரத்தில் மதுரையில் இருந்து செங்கோட்டை வந்த சோதனை ரயில் ஆட்டோ மீது பயங்கரமாக மோதியது. 

இதில் ஆட்டோ தூள் தூளானது. இந்த விபத்தில் சமையல்காரர் பொன்ராஜ் சம்பவ இடத்திலேயே பலியானார். நாராயணசாமியும், ஆட்டோ டிரைவர் முருகனும் பலத்த காயமடைந்து ஆபத்தான நிலையில் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து குறித்து விருதுநகர் ரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்