முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இலவச பேன், மிக்சி,கிரைண்டர் வழங்கும் திட்டம் முத்துராமலிங்கம் துவக்கிவைத்தார்

புதன்கிழமை, 9 நவம்பர் 2011      அரசியல்
Image Unavailable

 

திருமங்கலம், நவ. - 9 - திருமங்கலம் தொகுதியில் தமிழக அரசின் இலவச பேன், மிக்சி, கிரைண்டர் வழங்கும் திட்டத்தினை முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ. துவக்கி வைத்தார். கடந்த சட்டமன்ற பொதுத் தேர்தலின் போது பல்வேறு இலவச திட்டங்கள் வழங்கப்படுமென அ.தி.மு.க பொதுச் செயலாளர் ஜெயலலிதா தனது தேர்தல் வாக்குறுதியில் அறிவித்திருந்தார். அதன்படி தமிழக முதல்வராக பொறுப்பேற்ற அவர், 20 கிலோ இலவச அரிசி, இலவச பேன், மிக்சி, கிரைண்டர் போன்றவை உடனடியாக வழங்கப்படும் என முதல்வர் உத்தரவிட்டார். தற்போது தமிழகத்தில் முதல்வர் ஜெயலலிதா அறிவித்த வாக்குறுதிகள் அனைத்தும் ஒன்றன் பின் ஒன்றாக நிறைவேற்றப்பட்டு வருகிறது.  இதன் ஒரு பகுதியாக முதல்வர் ஜெயலலிதாவின் உத்தரவுப்படி திருமங்கலம் தொகுதியில் உள்ள தகுதிவாய்ந்த பயனாளிகள் அனைவருக்கும் தமிழக அரசின் சார்பில் இலவச பேன், மிக்சி, கிரைண்டர் வழங்கும் திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது. முதல் கட்டமாக தொகுதிக்குட்பட்ட குதிரைசாரிகுளம், எர்ரம்மலம்பட்டி, வண்ணாங்குளம் உள்ளிட்ட கிராமங்களில் நடைபெற்ற அரசு விழாக்களில் திருமங்கலம் எம்.எல்.ஏ. முத்துராமலிங்கம் கலந்து கொண்டு இலவச பேன், மிக்சி, கிரைண்டர் போன்ற பொருட்களை வழங்கி திட்டத்தினை தொடங்கி வைத்தார்.  குதிரைசாரி குளத்தில் நடைபெற்ற விழாவில் முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ. பேசியதாவது,  பொதுமக்கள் பயனடைந்திடும் வகையில் சீர்மிகு சிறப்பு திட்டங்கள் முதல்வரின் ஆட்சியில் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. தற்போது முதல்வராக பொறுப்பேற்றவுடன் ஒன்றரை ஆண்டுகளில் திட்டமிட வேண்டிய திட்டங்களை 5 மாத காலத்திற்குள்ளாகவே திட்டமிட்டு 16 க்கும் மேற்பட்ட திட்டங்களை முதல்வர் ஜெயலலிதா விரைவாக செயல்படுத்தி வருகிறார். முதல்வர் ஜெயலலிதாவின் நலத் திட்டங்களால் தமிழக மக்கள் அனைவரும் பயன்பெறுவது நிச்சயம். இவ்வாறு அவர் பேசினார். 

முதல் கட்டமாக பல கிராமங்களில் நடைபெற்ற விழாக்களில் தகுதிவாய்ந்த 255 நபர்களுக்கு இலவச பேன், மிக்சி, கிரைண்டர்கள் வழங்கப்பட்டது. இந்த விழாக்களில் மதுரை புறநகர் மாவட்ட அ.தி.மு.க. துணை செயலாளரும், மாவட்ட கவுன்சிலருமான அய்யப்பன், திருமங்கலம் யூனியன் சேர்மன் தமிழழகன், தொகுதி செயலாளர் ஆண்டிச்சாமி, ஒன்றிய கவுன்சிலர் பழனிச்சாமி, பொதுக்குழு உறுப்பினர் அன்பழகன், திருமங்கலம் தாசில்தார் மோகன், உரப்பனூர் ஊராட்சி மன்ற தலைவர் சாமிநாதன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். 

 

புட் நோட்

திருமங்கலம் தொகுதியில் உள்ள குதிரைசாரிகுளம் கிராமத்தில் பயனாளிகளுக்கு தமிழக அரசின் இலவச பேன், மிக்சி, கிரைண்டர்களை முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ. வழங்கினார். உடன் தாசில்தார் மோகன், மாவட்ட கவுன்சிலர் அய்யப்பன், யூனியன் சேர்மன் தமிழழகன் ஆகியோர் உள்ளனர். 

---

அ.தி.மு.க. வின் 40 வது ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு டி. கல்லுப்பட்டியில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் மதுரை புறநகர் மாவட்ட செயலாளர் முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ. சிறப்புரையாற்றினார். அருகில் ஒன்றிய செயலாளர் ராமசாமி, டி. கல்லுப்பட்டி யூனியன் துணை சேர்மன் டாக்டர் பாவடியான் உள்ளிட்ட நிர்வாகிகள் உள்ளனர்.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்