முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

செயலாளர் பதவியிலிருந்து அப்துல் ரஹீம் விடுவிப்பு-ஜெயலலிதா

வியாழக்கிழமை, 10 நவம்பர் 2011      தமிழகம்
Image Unavailable

சென்னை, நவ.- 10 - ஆவடி நகரச் செயலாளர் அப்துல்ரஹீம் எம்.எல்.ஏ உட்பட அ.தி.மு.க. நிர்வாகிகள் 5 பேர் வகித்துவரும் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டிருப்பதாக கட்சியின் பொதுச் செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதா அறிவித்திருக்கிறார். இதுத்தொடர்பாக தலைமை கழக அறிவிப்பில் கூறியிருப்பதாவது:- திருவள்ளூர் தெற்கு மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற செயலாளர் பொறுப்பில் இருக்கும் தி.ப.கண்ணனும், ஆவடி நகர செயலாளர் பொறுப்பில் இருக்கும் எஸ்.அப்துல் ரஹீம் எம்.எல்.ஏ.வும், புழல் ஒன்றிய கழக செயலாளர் பொறுப்பில் இருக்கும் ஜி.கே.எழிலும், புழல் ஒன்றிய ஜெயலலிதா பேரவை இணை செயலாளர் பொறுப்பில் இருக்கும் கே.துரைராஜும், ஆவடி நகர சிறுபான்மையினர் நலப்பிரிவு செயலாளர் பொறுப்பில் இருக்கும் எஸ்.டேவிட் ராஜனும்  அவரவர் வகித்து வரும் பொறுப்புகளிலிருந்து விடுவிக்கப்படுகிறார்கள்.  இவ்வாறு அ.தி.மு.க  தலைமை கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்