முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

புழல் ஏரியில் மூழ்கி 2 சிறுவர்கள்- ஒரு சிறுமி பலி-ஜெயலலிதா ரூ.1 லட்சம் நிதிஉதவி

வியாழக்கிழமை, 10 நவம்பர் 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, நவ.- 10 - சென்னை அருகே புழல் ஏரியில் மூழ்கி உயிரிழந்த 2 சிறுவர்கள் மற்றும் 1 சிறுமி குடும்பங்களுக்கு அனுதாபம் தெரிவித்துள்ள முதல்வர் ஜெயலலிதா, 3 பேர்களது குடும்பங்களுக்கு தலா ரூ.1 லட்சம் நிதி உதவி வழங்கவும் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- 8.11.2011 அன்று திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள புழல் ஏரியில் குளிக்க சென்ற சென்னை, கிழக்கு அண்ணாநகரை சேர்ந்த சத்தார் என்பவரின் மகள் சிறுமி சர்மிளா, வண்ணாரப்பேட்டையை சேர்ந்த காதர் பாஷா என்பவரின் மகன் சிறுவன் முகமது ரிஸ்வான் மற்றும் சூரப்பட்டு, சண்முகபுரத்தை சேர்ந்த முகமது நசீர் என்பவரின் மகன் சிறுவன் முகமது ஆஷிக் ஆகிய மூவரும் நீரில் மூழ்கி உயிரிழந்தனர் என்ற செய்தியை அறிந்து நான் மிகவும் துயறுற்றேன். 

இவ்விபத்தில் அகால மரணமடைந்த சிறுவர்களின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். இத்துயர சம்பவத்தில் உயிரிழந்த சிறுவர்களின் குடும்பம் ஒவ்வொன்றுக்கும் தலா ரூ.1 லட்சம் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன்.  இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா தனது இரங்கல் அறிக்கையில் கூறியுள்ளார்.          

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago