முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காகித நிறுவனத்தின் ஈவுத்தொகை முதல்வரிடம் வழங்கினார்

வெள்ளிக்கிழமை, 11 நவம்பர் 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, நவ.11 - செய்திதாள் காகித நிறுவனத்தின் ஈவுத்தொகை ரூ.12 கோடியே 22 லட்சம் காசோலையை முதல்வர் ஜெயலலிதாவிடம் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வழங்கினார். தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவிடம் நேற்று (10.11.2011) தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனத்தின் சார்பில் தொழில்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி 2010​- 2011​ஆம் ஆண்டுக்கான ஈவுத் தொகையில் அரசின் பங்கான 12 கோடியே 22 லட்சத்து 24 ஆயிரத்து 500  ரூபாய்க்கான வரைவுக் காசோலையை வழங்கினார்.

தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனம் 2010​2011​ஆம் ஆண்டில் வரி செலுத்திய பின் 149 கோடி ரூபாய் நிகரலாபம் அடைந்துள்ளது.  இதன் பயனாக தமிழக அரசுக்கு 50ரூ பங்கு ஈவுத் தொகையாக 12 கோடியே 22 லட்சத்து 24 ஆயிரத்து 500 ரூபாய்க்கான வரைவுக் காசோலையை  தொழில்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவிடம் நேற்று வழங்கினார்.

இந்நிகழ்வின்போது, தலைமைச் செயலாளர், தொழில்துறை முதன்மைச் செயலாளர், தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனத்தின் தலைவர், தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் ஆகியோர் உடனிருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்