முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வெள்ளத்தால் உயிரிழந்த 4 பேரின் குடும்பத்திற்கு நிதியுதவி

வெள்ளிக்கிழமை, 11 நவம்பர் 2011      அரசியல்
Image Unavailable

 

சென்னை, நவ.11 - மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 4 பேர் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவி அளிக்க ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் பெய்து வரும் வடகிழக்குப் பருவமழையின் காரணமாக 6.11.2011 அன்று சென்னை, கொடுங்கையூர், ராஜரத்தினம் நகரைச் சேர்ந்த மணிவண்ணன் என்பவரின் மகன் சிறுவன் ஸ்ரீதர் தனது வீட்டின் அருகில் உள்ள பக்கிங்காம் கால்வாயில் குளித்துக் கொண்டிருந்த போது, வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதாலும்,  9.11.2011 அன்று திருவள்ளூர் மாவட்டம், திருவொற்றியூர், கார்கில் நகரைச் சேர்ந்த காமராஜ் என்பவரின் மகன் சிறுவன் கிஷோர் வெள்ள நீரில் மூழ்கியதாலும்,  மதுரை மாவட்டம், வாடிப்பட்டி வட்டம், சானாம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த முத்து என்பவரின் மகள்  எம்.ராஜாத்தி இடி தாக்கியதாலும், திருப்ர் மாவட்டம், காங்கேயம் வட்டம், நாமக்காரன்பாளையத்தைச் சேர்ந்த பழனிச்சாமி என்பவரது மனைவி நாச்சம்மாள் ஆற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதாலும்  உயிரிழந்தனர் என்ற செய்தியை அறிந்து நான் மிகவும் துயருற்றேன்.  பல்வேறு விபத்துகளில் மரணமடைந்த இந்த நான்கு நபர்களின் குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தத் துயரச் சம்பவங்களில் உயிரிழந்தவர்களின் குடும்பங்கள் ஒவ்வொன்றுக்கும் தலா இரண்டு  லட்சம் ரூபாய் உதவித் தொகையை உடனடியாக வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன். 

இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்