முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

27 இந்திய மீனவர்களை கைது செய்தது பாகிஸ்தான்

வெள்ளிக்கிழமை, 11 நவம்பர் 2011      இந்தியா
Image Unavailable

 

இஸ்லாமாபாத், நவ.11 - தங்களுக்குச் சொந்தமான கடல் பகுதியில் சட்டவிரோதமாக மீன் பிடித்ததாக 27 இந்திய மீனவர்களை பாகிஸ்தான் அதிகாரிகள் கைது செய்துள்ளனர். கடந்த பக்ரீத் நாளன்று இந்திய மீனவர்கள் அரபிக் கடலில் மீன் பிடித்துக்கொண்டு இருந்தனர். அப்போது சில பாகிஸ்தான் கடல் பகுதிக்குள் அத்துமீறி சட்டவிரோதமாக மீன்பிடித்ததாக புகார் கூறி பாகிஸ்தான் கடலோர பாதுகாப்பு படை அதிகாரிகள் கூறினர். இருந்தாலும் இந்திய வீரர்கள் பெரும்பாலானோரை தாங்கள் விரட்டி அடித்துவிட்டதாகவும், பாகிஸ்தான் கடல் பகுதிக்குள் 50 கடல்மைல் தூரத்திற்கு நுழைந்த இந்திய மீனவர்கள் 25 பேரை தாங்கள் கைது செய்துள்ளதாகவும் அவர்களது 5 படகுகளை பறிமுதல் செய்துள்ளதாகவும் பாகிஸ்தான் கடலோர பாதுகாப்பு படை அதிகாரிகள் தெரிவித்தனர். 

பிறகு இவர்கள் கராச்சியில் உள்ள கடலோர காவல் படையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர் என்றும் இவர்கள் மீது முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர். நடப்பாண்டில் மட்டும் தங்களது கடல் பகுதிக்குள் அத்துமீறி நுழைந்த 100 இந்திய மீனவர்களை கைது செய்துள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர். இந்திய மீனவர்களை விடுதலை செய்ய பாகிஸ்தான் கடலோர காவல்படை அதிகாரிகளுடன் இந்திய கடலோர காவல்படையினர் பேச்சு நடத்தி வருகிறார்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்