எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சாத்தூர், நவ.- 12 - தமிழகத்தில் வெண்மைப் புரட்சி பசுமைப் புரட்சியுடன் அறிவுப்புரட்சி செய்த ஒரே முதல்வர் ஜெயலலிதா ஒருவர்தான் என்று சாத்தூர் தொகுதியில் நலத்திட்ட உதவிகளை வழங்கி ஆர்.பி.உதயகுமார் எம்.எல்.ஏ. பேசினார். சாத்தூர் தொகுதியில் உள்ள தூங்காரெட்டியபட்டியிலும் பொம்மங்கிபுரத்திலும் தமிழக அரசின் சிறப்பு நலத்திட்ட உதவிகளான மிக்ஸி, கிரைண்டர், மின்விசிறிகள் வழங்கும் விழா நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் தூங்காரெட்டியபட்டியில் 53 பயனாளிகளுக்கும், கொம்மங்கிபுரத்தில் 393 பயனாளிகளுக்கும் விலையில்லா மின்விசிறி, கிரைண்டர், மிக்ஸிகளை முன்னாள் அமைச்சரும் சாத்தூர் சட்டமன்ற உறுப்பினருமான ஆர்.பி.உதயகுமார் வழங்கி பேசினார். அவர் பேசியதாவது, இன்று பெளர்ணமியும் வெள்ளிக்கிழமையும் இணைந்த லட்சுமிகரமான நன்னாளாகும். இந்த நல்ல நாளில் உங்களுக்கெல்லாம் தாய்வீட்டு சீதனமாக, இந்த விலையில்லா மிக்ஸி, கிரைண்டர், மின் விசிறிகள் வழங்கப்பட்டுள்ளது. இதனை தங்களது வீடுகளுக்கு கொண்டுசென்று நீங்கள் அனைவரும் சுபீட்சமாக, சந்தோஷமாக உங்கள் குடும்பத்தாருடன் நீடூழி வாழ வேண்டும். தேர்தல் நேரத்தில் சொன்னதை மின்னல் வேகத்தில் நிறைவேற்றி வருகின்ற இந்தியத் திருநாட்டின் ஒரே முதலமைச்சர் நமது அம்மா ஆவார். தமிழகத்தின் ஏழு கோடி மக்களுக்காக இரவும் பகலும் உழைத்துக்கொண்டிருக்கிறார். அவர் ஆட்சிப் பொறுப்பை ஏற்ற அடுத்த நிமிடத்திலிருந்து சட்டம் ஒழுங்கு சீர்படுத்தப்பட்டு இன்று தமிழகம் அமைதிப் பூங்காவாக திகழ்கிறது. எல்லாத் தரப்பினரும் தமிழக அரசின் நலத்திட்ட உதவிகளை பெற்று வருகின்றனர். இந்த நலத்திட்ட உதவிகள் அனைத்தும் கடைக்கோடி மக்களுக்கும் போய்ச்சேர வேண்டும் என்ற தொலைநோக்கில் சட்டமன்ற உறுப்பினர்களும், அதிகாரிகளும் உழைத்துக்கொண்டு இருக்கிறார்கள். கடந்த கால ஆட்சியில் கருணாநிதியின் ஒரு குடும்பம் மட்டுமே பயன்பெற்றது. ஆனால் இன்று அம்மா அவர்கள் ஆட்சியில் 7 கோடி மக்களும் பயன்பெற்று அமைதியாக வாழ்கிறார்கள்.
இதுபோன்ற மக்கள் நலத்திட்டங்களை அம்மா அறிவிக்கின்றபோது, இவற்றையெல்லாம் தர முடியுமா? என்று பலர் கேட்டனர். கொடுக்கின்ற மனமிருந்தால் எல்லாம் தரமுடியும் நமது முதல்வர் அம்மா சொன்னார்கள். அவர் சொன்னபடி இங்கு சிறப்பு நலத்திட்ட உதவிகள் எல்லாம் வழங்கப்படுகின்றன. ஏரத்தாழ ஒன்றரை வருடத்திற்குள் தமிழகம் முழுவதும் இந்த நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுவிடும் என்று முதல்வர் அம்மா தெரிவித்துள்ளார். எனவே அனைவருக்கும் மிக்ஸி, கிரைண்டர், மின்விசிறி கிடைத்துவிடும் என்பது உறுதி. தமிழகத்தில் முதல்வர் அம்மா வெண்மைப் புரட்சி, பசுமைப் புரட்சி, அறிவுப் புரட்சியை ஏற்படுத்தியுள்ளார்.அதன் அடிப்படையில் விவசாயத்தில் நவீன யுக்திகள் கையாளப்பட்டு இன்று பசுமைப் புரட்சி ஏற்பட்டுள்ளது. தமிழக மாணவர்கள் தகவல் தொழில்நுட்பத்தில் முதன்மை பெறவேண்டும் என்பதற்காக லேப் டாப் வழங்கும் திட்டம் கொண்டுவரப்பட்டு இன்று கடைக்கோடியில் இருக்கும் மாணவ-மாணவியருக்கும் அறிவுப் புரட்சியை ஏற்படுத்த வாய்ப்பு தரப்பட்டுள்ளது. கிராமப் பொருளாதாரத்தை மேம்படுத்த வேலை வாய்ப்பற்ற கிராம மக்கள் பயனடைய அவர்களுக்கு கறவை மாடுகள், ஆடுகள் வழங்கும் திட்டம் அமுல்படுத்தப்பட்டு கிராமப்புற மக்கள் பயனடைந்து வருகின்றனர். நமது முதலமைச்சரின் வழிகாட்டுதலின்பேரில் சட்டமன்ற உறுப்பினர்களாகிய நாங்களும் உங்களுக்காக உழைத்துக்கொண்டு இருக்கிறோம். அ.தி.மு.க. அரசு மக்கள் ஜனநாயக அரசாக இன்று செயல்பட்டு வருகிறது. இந்திய திருநாட்டின் திருவிளக்காய் உலகை ஆளுகின்ற வல்லமைபெற்ற ஒப்பற்ற நமது முதலமைச்சர் தமிழக மக்களுக்காக நல்ல பல திட்டங்களை தினம் தினம் கொண்டுவந்து நிறைவேற்றி வருகிறார். அவரது வழியில் அயராது உழைப்போம். இவ்வாறு அவர் பேசினார்.
விழாவில் விருதுநகர் மாவட்ட ஊராட்சி தலைவர் வசந்தா அழகர்சாமி, சாத்தூர் ஒன்றிய சேர்மன் வேலாயுதம், வெம்பக்கோட்டை ஒன்றியச் சேர்மன் ரேவதி, துணைச் சேர்மன் மணிகண்டன், மாவட்ட கவுன்சிலர்கள் சுப்புராம், சசீலா, பாலமுருகன், சாத்தூர் தொகுதி செயலாளர் சேதுராமானுஜம், நகரச் செயலாளர் என்.எஸ்.வாசன், மாவட்ட மாணவரணி செயலாளர் கிருஷ்ணன், ஊராட்சி மன்ற தலைவர்கள் மகேஷ் செல்வம், சுபா பரமராஜ், தொகுதி இணைச் செயலாளர் தாசன், மாவட்ட இளைஞரணி செயலாளர் அழகர்சாமி, சண்முகக்கனி, காசி துரைப்பாண்டியன், ஏழாயிரம்பண்ணை ராஜேந்திரன், ரெட்டியபட்டி சமுத்திரம், குகன்பாறை ராஜ், சிப்பிப்பாறை கவுன்சிலர் ஜெயராஜ், மினுத்தான், விஜயாபோஸ், ஏழாயிரம்பண்ணை துரைராஜ், கனகராஜ், கணேசன், சந்தனமாரி, சீனிவாசன், காளியப்பன், கிளைச் செயலாளர்கள் மற்றும் ஊராட்சி தலைவர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் இந்த விழாவில் கலந்துகொண்டனர்.
இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை சாத்தூர் தாசில்தார் கு.பாலசுப்பிரமணியன் மற்றும் வருவாய் அதிகாரிகள் செய்திருந்தனர். முன்னதாக சிவகாசி கோட்டாட்சியர் சுப்புலெட்சுமி அனைவரையும் வரவேற்றார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஸ்வீட் உருளைக்கிழங்கு கேக்1 day 12 hours ago |
பெப்பர் சிக்கன்5 days 12 hours ago |
ஹனி பட்டர் சிக்கன்1 week 1 day ago |
-
கெஜ்ரிவால் விவகாரத்தை தொடர்ந்து காங்கிரஸ் வங்கி கணக்கு குறித்து கருத்து தெரிவித்த அமெரிக்கா
28 Mar 2024வாஷிங்டன், டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் விவகாரத்தை தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்கு முடக்கம் குறித்து அமெரிக்கா கருத்து தெரிவித்துள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 28-03-2024.
28 Mar 2024 -
முக்கிய வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்பு: தமிழகத்தில் வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை முடிந்தது: இறுதி வேட்பாளர்கள் பட்டியல் நாளை வெளியீடு
28 Mar 2024சென்னை, தமிழ்நாடு முழுவதும் வேட்புமனு தாக்கல் செய்த முக்கிய தலைவர்கள் அனைவரின் வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டுள்ளது.
-
தி.மு.க., காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று தர்மபுரியில் பிரச்சாரம்
28 Mar 2024தர்மபுரி, தர்மபுரி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் தி.மு.க.
-
குன்றத்தில் வெகுவிமர்சையாக நடந்த சுப்பிரமணிய சுவாமி - தெய்வானை அம்மன் திருக்கல்யாண வைபவம்
28 Mar 2024மதுரை, மீனாட்சியம்மன், சுந்தரேஸ்வரர் பிரியாவிடை முன்னிலையில் திருப்பரங்குன்றத்தில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை அம்மன் திருக்கல்யாண வைபவம் வெகுவிமர்சையாக நேற்று நடைபெற்
-
தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின், ராகுல் காந்தி இணைந்து பிரச்சாரம்: செல்வப்பெருந்தகை தகவல்
28 Mar 2024சென்னை, முதல்வர் மு.க.ஸ்டாலினும், ராகுல் காந்தியும் ஒன்றாக சேர்ந்து தமிழகத்தில் இண்டியா கூட்டணி வேட்பாளர்களுக்கு சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வாக்கு சேகரிக்க
-
ஆஸ்திரேலியா ஒப்பந்த பட்டியல்: முக்கிய வீரர்களுக்கு இடமில்லை
28 Mar 2024மெல்போர்ன், ஆஸ்திரேலிய ஆடவர் கிரிக்கெட் அணிக்கு மத்திய ஒப்பந்தப் பட்டியல் வெளியாகியுள்ளது. இதில் பல முக்கிய வீரர்களுக்கு இடமில்லை.
-
தாய்லாந்தில் ஓரின சேர்க்கையாளர் திருமணத்துக்கு சட்டப்பூர்வ அனுமதி
28 Mar 2024பாங்காங்க், ஓரின சேர்க்கையாளர் திருமணத்திற்கான சட்ட மசோதா தாய்லாந்து பாராளுமன்றத்தில் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது.
-
5 நாள் பயணமாக கவர்னர் ரவி நாளை ஊட்டி செல்கிறார்
28 Mar 2024ஊட்டி, 5 நாள் பயணமாக கவர்னர் ஆர்.என். ரவி நாளை ஊட்டிக்கு புறப்பட்டு செல்கிறார்.
-
ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பி.எஸ். பெயரில் தாக்கலான 6 பேரின் வேட்புமனுவும் ஏற்பு
28 Mar 2024ராமநாதபுரம், பாராளுமன்ற மக்களவைத் தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பன்னீர் செல்வம் எனும் பெயரில் வேட்புமனு தாக்கல் செய்த 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டுள்ளது.
-
வேட்புமனு தாக்கல் செய்ய ஏப். 3-ல் கேரளா செல்கிறார் ராகுல் காந்தி
28 Mar 2024திருவனந்தபுரம், ஏப்ரல் 3-ம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்ய கேரளா செல்கிறார். அதை தொடர்ந்து கல்பெட்டா கலெக்டர் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்கிறார்.
-
ஏப். 4-ல் டெல்லியில் கூடுகிறது காவிரி மேலாண்மை ஆணையம்
28 Mar 2024புது டெல்லி, காவிரி மேலாண்மை ஆணையத்தின் 29-வது கூட்டம் ஏப்ரல் 4-ம் தேதி டெல்லியில் நடைபெற உள்ளது.
-
2-ம் கட்ட தேர்தல்: 13 மாநிலங்களில் உள்ள 89 மக்களவை தொகுதிகளில் மனு தாக்கல் தொடங்கியது
28 Mar 2024புது டெல்லி, நாடு முழுவதும் பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்படும் நிலையில், இரண்டாவது கட்டமாக ஏப்ரல் 26-ம் தேதி 13 மாநிலங்களில் உள்ள 89 மக்களவை தொகுதிகளில் வாக்க
-
ஈரோடு எம்.பி. கணேசமூர்த்தி மறைவு: முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல்
28 Mar 2024சென்னை, ஈரோடு மக்களவை உறுப்பினர் கணேசமூர்த்தி மறைவுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
-
ஏப்.4-ல் மத்திய அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகை: சென்னை, மதுரை, சிவகங்கையில் பிரச்சாரம்
28 Mar 2024சென்னை, தேர்தல் பிரச்சாரத்துக்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஏப்ரல் 4-ம் தேதி தமிழகம் வரவுள்ளார். அவர் மதுரை, சிவகங்கை, சென்னையில் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.
-
கெஜ்ரிவாலை பதவியிலிருந்து நீக்க கோரிய மனு தள்ளுபடி
28 Mar 2024புது டெல்லி, அரவிந்த் கெஜ்ரிவாலை முதல்வர் பதவியில் இருந்து நீக்க கோரி தொடரப்பட்ட பொதுநல மனுவை தள்ளுபடி செய்து டெல்லி ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
-
கிறிஸ்தவ ஆலயங்களில் இன்று புனித வெள்ளி சிறப்பு வழிபாடு
28 Mar 2024சென்னை, தமிழகம் முழுவதும் கிறிஸ்தவ ஆலயங்களில் இன்று புனித வெள்ளி சிறப்பு வழிபாடு நடத்தப்படுகிறது.
-
அடுத்த தலைமுறைக்கான பயணிகள் விமானத்தை உருவாக்கும் ஜப்பான்
28 Mar 2024டோக்கியோ, ஹைட்ரஜன் எரிபொருள் என்ஜினை பயன்படுத்தி அடுத்த தலைமுறைக்கான பயணிகள் விமானத்தை ஜப்பான் உருவாக்க உள்ளது.
-
தமிழகத்தில் 1-ம் தேதி வரை வெப்பநிலை அதிகரிக்க கூடும்: சென்னை வானிலை மையம் தகவல்
28 Mar 2024சென்னை, தமிழகத்தில் வரும் 01-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2 டிகிரி செல்சியஸ் வரை படிப்படியாக அதிகரிக்கக் கூடும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்
-
அருணாச்சலில் போட்டியின்றி தேர்வாகும் முதல்வர் காண்டு உள்ளிட்ட 5 பா.ஜ.க. வேட்பாளர்கள்
28 Mar 2024ஈடாநகர், எதிர்க்கட்சிகள் தரப்பில் வேட்பாளர்கள் யாரும் மனு தாக்கல் செய்யாததால் அருணாசல பிரதேசத்தில் முதல்வர் பிமா காண்டு உள்ளிட்ட 5 பா.ஜ.க.
-
இந்தியாவின் பணக்கார பெண்மணி சாவித்ரி ஜிண்டால் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகல்
28 Mar 2024புது டெல்லி, அரியானா முன்னாள் அமைச்சரும், பிரபல தொழில் நிறுவனமான ஓ.பி.
-
முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தர்மபுரி வருகை: இன்டியா கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரிக்கிறார்
28 Mar 2024தர்மபுரி, முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தருமபுரி வருகையையொட்டி அதற்கான முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
-
செந்தில் பாலாஜியின் புதிய மனு ஏப். 4-ம் தேதிக்கு தள்ளி வைப்பு
28 Mar 2024சென்னை, சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த புதிய மனுவுக்கு அமலாக்கத்துறை பதிலளிக்கும் படி உத்தரவிட்டு ஏப்ரல் 4-ம் தேதி
-
டி.என்.பி.எஸ்.சி. குரூப் 1 தேர்வு நடைபெறும் தேதி அறிவிப்பு: ஏப். 27 வரை விண்ணப்பிக்கலாம்
28 Mar 2024சென்னை, 90 காலிபணியிடங்களுக்கான குரூப் 1 தேர்வு அறிவிப்பை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.
-
பார்லி. தேர்தலுக்கு பின் விடுபட்ட அனைவருக்கும் உரிமைத்தொகை: அமைச்சர் உதயநிதி வாக்குறுதி
28 Mar 2024ஸ்ரீபெரும்புதூர், பாராளுமன்ற மக்களவை தேர்தலுக்கு பின்னர் விடுபட்ட அனைவருக்கும் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.