இந்திய அஞ்சல் துறையில் உள்ள 'கிளை போஸ்ட் மாஸ்டர், உதவி கிளை போஸ்ட் மாஸ்டர் மற்றும் டக் சேவக்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது

சென்னை, நவ.14-கால்நடை அமைச்சராக பதவி ஏற்றவுடன் எனக்கு முதல்வரின் பெயரில் உள்ள அறக்கட்டளையில் பேச வாய்ப்பு கிடைத்தற்கு பெருமகிழ்ச்சி அடைகிறேன் என்று கால்நடைதுறை அமைச்சர் சின்னையா பெருமிதத்துடன் குறிப்பிட்டார். தமிழக விவசாயிகளின் வாழ்வோடும் வளத்தோடும் பின்னிப் பிணைந்திருப்பது கால்நடை வளர்ப்பாகும். பலவித இடையூறுகளால் விவசாயம் சரிவர நடக்காத காலங்களில் விவசாயிகளுக்கு நிரந்தர வருமானம் கொடுப்பதும், விளைச்சல் நல்லபடியாக இருக்கும்போது கூடுதல் வருமானம் ஈட்டு தருவதும் கால்நடைகளே. கால்நடை உற்பத்தித் தொழில் சிறு விவசாயிகள் மற்றும் நிலமற்ற விவசாயிகளின் கையில் உள்ளது. அதிலும் குறிப்பாக கால்நடை வளர்ப்பில் பெண்களே தொடர்ந்து சிறப்பான பங்கு வகிக்கிறார்கள். எனவே, தமிழக கிராமப்புற பொருளாதார முன்னேற்றத்தில் கால்நடை வளர்ப்பு பெரும் பங்கு வகிக்கிறது. இனி வரும் காலங்களில் விவசாயத் துறையில் எட்ட வேண்டிய வளர்ச்சியில் தற்போது 37 விழுக்காடுகள் அளவில் உள்ள கால்நடை மற்றும் மீன் வளர்ப்பின் பங்களிப்பு 50 விழுக்காடுகளுக்கு மேல் அதிகரிக்குமென கருதப்படுகிறது. ஆகவே, கால்நடை வளர்ப்பில் தேவையான முன்னேற்றத்தை அடைய புதிய தொழில்நுட்பங்கள், புதிய கால்நடை மற்றும் கோழியின ரகங்கள், சிறந்த மேலாண்மை முறைகள், தீவன முறைகள், நோய் தடுப்பு முறைகள் போன்றவை அவ்வப்போது கால்நடை வளர்ப்போரை சென்றடைய வேண்டும். ஆகவே முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான இந்த அரசு கால்நடை வளர்ப்புக்கு மிகுந்த முக்கியத்துவம் அளித்து முனைப்பாக செயல்பட்டு வருகிறது. பால் உற்பத்தியில் இரண்டாவது வெண்மை புரட்சியை உருவாக்க வறுமையில் வாடும் 60,000 குடும்பங்களுக்கு கறவை மாடுகளும் மற்றும் வறுமைக் கோட்டிற்குக் கீழ் வாழும் 7 லட்சம் ஏழை குடும்பங்களுக்கு, குறிப்பாக விவசாய கூலி தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு தலா 4 வெள்ளாடுகள் அல்லது செம்மறியாடுகளும் வழங்க ஆணையிட்டு அண்ணாவின் பிறந்த நாளான செப்டம்பர் திங்கள் 15 ஆம் நாள் அன்று இத்திட்டம் தமிழக முதல்வர் ஜெயலலிதாவால் திருவள்ளூரில் சிறப்பாக தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
நாட்டின் பால் மற்றும் கோழியின துறைகளில் மிக வேகமான வளர்ச்சி காரணமாக எதிர்காலத்தில் அதிக எண்ணிக்கையிலான கால்நடை மருத்துவ பட்டதாரிகள் தேவைப்படுவார்கள் என்பதை கருத்தில் கொண்டு, தமிழக முதல்வர் ஜெயலலிதா 2011-2012 ஆம் ஆண்டில் திருநெல்வேலி மாவட்டம் ராமையன்பட்டி, தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு ஆகிய இரு இடங்களில் புதிய கால்நடை மருத்துவக் கல்லூரிகள் துவங்கப்படும் என்று அறிவித்து அதற்கான அரசாணைகளும் ஏற்படுத்தி நிதி ஒதுக்கியுள்ளார். மேலும், முதல்வர் ஜெயலலிதா, கோழியின உற்பத்தி மேலாண்மையில் உயர்தர ஆராய்ச்சி மேற்கொள்ளும் பொருட்டு கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் நவீன கோழியின உற்பத்தி மற்றும் மேலாண்மை நிலையம் ஒன்றையும் அறிவித்துள்ளார்.
பசுந்தீவனங்களின் பற்றாக்குறை, கறவை மாடுகளில் பால் உற்பத்தி திறன் குறைவதற்கும் ஒரு முக்கிய காரணமாக உள்ளது. தமிழ்நாட்டில் பசுந்தீவன பற்றாக்குறை 20 விழுக்காடாக உள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. எனவே அரசு பசுந்தீவன உற்பத்தியை மேம்படுத்த 24,000 ஏக்கரில் பசுந்தீவன வளர்ப்பிற்கு சிறப்புத் திட்டம் ஒன்றை தொடங்கவும் இந்த ஆண்டு நிதி ஒதுக்கியுள்ளது.
மேலும் மனித மருத்துவத்திற்கு இணையான சிகிச்சைகள் கால்நடைகளுக்கும் கிடைக்கச் செய்ய வேண்டும் என்பதில் முதல்வர் ஜெயலலிதா உறுதியாக உள்ளார். இதற்காக கால்நடை மருத்துவமனைகளின் கட்டமைப்பை மேம்படுத்தவும் முதல்வர் ஜெயலலிதா ஆணையிட்டுள்ளார்.
இத்தகைய அனைத்து வசதிகளையும் கால்நடைகளுக்கு ஏற்படுத்திக் கொடுத்த முதல்வர் ஜெயலலிதா, அவர் பெயரில் கால்நடை மருத்துவ பல்கலைக்கழகத்தில் ஒரு அறக்கட்டளை ஏற்படுத்தி சொற்பொழிவுகளை நடத்தி வருவது மிகவும் பொருத்தமான ஒன்று. மேலும் இந்த வருடம் இந்த சொற்பொழிவை நிகழ்த்த வந்திருப்பவர் மத்திய அரசின் திட்டக்குழுவின் வேளாண்மை ஆலோசகர் முனைவர் வி.வி.சதாமத்தே என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இன்றைய தேவையான `கால்நடை உற்பததியை பெருக்குவதற்கான விரிவாக்க வழிமுறைகள்' என்ற தலைப்பில் இந்த சொற்பொழிவு அமைந்திருப்பது இன்னும் சிறப்பானதாகும். நமது தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் தமது விரிவாக்கப் பணிகளை, மாவட்ட அளவில் 15 பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையங்கள், 3 உழவர் பயிற்சி நிலையங்கள், 3 வேளாண் அறிவியல் நிலையங்கள், ஒரு மண்டல ஆராய்ச்சி நிலையம், ஒரு சிறிய அசைபோடும் பிராணிகள் ஆராய்ச்சி மையம், ஒரு கோழியின ஆராய்ச்சி நிலையம் மற்றும் 4 ஆராய்ச்சி பண்ணைகள் அமைத்து, கால்நடை, கோழி மற்றும் மீன்தொழில் பண்ணையாளர்களுக்கு புதிய தொழில் நுட்பங்களை இலவச பயிற்சிகள், ஆலோசனைகள், வானொலி பள்ளிகள், தொலைநிலைக் கல்வி, செயல்திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள் மற்றும் சுய வேலைவாய்ப்புப் பயிற்சிகள் வாயிலாக தொடர்ந்து வழங்கி வருகிறது.
மேலும் இப்பல்கலைக்கழகம் கால்நடை பராமரிப்பு துறை, ஆவின், மீன்வளத்துறை மற்றும் அனைத்து கால்நடை சார்ந்த துறைகளுடன் ஒருங்கிணைந்து செயல்பட்டு வருவது மிகுந்த பாராட்டுதலுக்கு உரியதாகும். இந்த சொற்பொழிவு பல்கலைக்கழகம் மற்றும் கால்நடை பராமரிப்பு, ஆவின் போன்ற துறைகள் இன்னும் சிறப்பாக செயல்பட உதவும் என்று கூறி இந்த அருமையான அறக்கட்டளையை ஏற்படுத்திய `பெரியக்காள்- பரமசிவம்' குடும்பத்தினரை வாழ்த்தி, இதனை சிறப்பாக நடத்திக் கொண்டிருக்கும் தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தினையும் பாராட்டுகிறேன். அமைச்சராக பதவியேற்ற பின் எனது முதல் பல்கலைக்கழக நிகழ்ச்சியே முதல்வர் ஜெயலலிதாவின் பெயரில் நடக்கும் இந்த நிகழ்ச்சி என்பதையும் மகிழ்ச்சியுடன் தெரிவித்து, வாய்ப்புக்கு நன்றி கூறி அமைகிறேன்.
இவ்வாறு டி.கே.எம்.சின்னைய்யா பேசினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
முருங்கைப்பூ பாயாசம்.![]() 1 day 12 hours ago |
அகத்திக்கீரை சாம்பார்![]() 4 days 12 hours ago |
ராகி அடை![]() 1 week 1 day ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம்-29-01-2023
29 Jan 2023 -
ஜெப ஆலய தாக்குதல்: இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு கண்டனம்
29 Jan 2023ஜெருசலேம் ; ஜெருசலேமில் யூத வழிபாட்டு தலத்தில் நடந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில் 7 பேர் உயிரிழந்த சம்பவத்திற்கு இஸ்ரேல் பிரதமர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
-
செக் குடியரசில் புதிய அதிபர் தேர்வு
29 Jan 2023பராக் ; செக் குடியரசு நாட்டில் நடந்த அதிபர் தேர்தலில் ஓய்வு பெற்ற ராணுவ ஜெனரல் பீட்டர் பாவெல் புதிய அதிபராக தேர்வு செய்யப்பட்டார்.
-
நவாஸ் மகள் மரியம் ; நாடு திரும்பினார்
29 Jan 2023லாகூர், ஜன.
-
வங்க கடலில் நீடிக்கும் காற்றழுத்த தாழ்வு பகுதி: தமிழகத்தில் 2-ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்
29 Jan 2023சென்னை : தென் கிழக்கு வங்க கடல் மற்றும் இந்திய பெருங்கடலின் கிழக்கு பகுதியில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று அதே பகுதியில
-
மருத்துவ துறையில் தன்னிறைவு பெற்ற மாநிலமாக தமிழ்நாடு விளங்குகிறது : முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
29 Jan 2023சென்னை : மருத்துவத் துறையில் தன்னிறைவு பெற்ற மாநிலமாக தமிழ்நாடு விளங்கிக் கொண்டு இருக்கிறது என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறினார்.
-
நாக்பூரில் இருந்து மும்பை சென்ற விமானத்தின் அவசர கதவை திறக்க முயன்றவர் மீது வழக்கு
29 Jan 2023மும்பை : நாக்பூரில் இருந்து மும்பைக்கு இண்டிகோ விமானம் ஒன்று சென்று கொண்டிருந்தது.
-
பெண்கள் பல்கலைக்கழக நுழைவுத்தேர்வு எழுத தடை : ஆப்கனில் தலிபான்கள் அறிவிப்பு
29 Jan 2023xகாபூல் ; பெண்கள் பல்கலைக் கழக நுழைவு தேர்வை எழுத தடை விதித்து ஆப்கன் அரசு உத்தரவிட்டுள்ளது.
-
50 ஆயிரம் ஆண்டுகளுக்கு பின் மீண்டும் பூமிக்கு அருகே நெருங்கி வரும் அரிய வால் நட்சத்திரம்
29 Jan 2023கலிபோர்னியா ; 50,000 ஆண்டுகளில் முதன்முறையாக பூமியை நெருங்கும் ஒரு பச்சை நிற வால் நட்சத்திரத்தை வானியலாளர்கள் சமீபத்தில் கண்டுபிடித்துள்ளனர்.
-
ராகுலின் பாதயாத்திரை இன்று நிறைவு: ஸ்ரீநகரில் பிரம்மாண்ட பொதுக்கூட்ட ஏற்பாடுகள்: 21கட்சிகளுக்கு அழைப்பு
29 Jan 2023புதுடெல்லி : ராகுல் காந்தியின் ஒற்றுமை யாத்திரை இன்றுடன் நிறைவு பெறுகிறது. இதையொட்டி ஸ்ரீநகரில் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
-
2 நாட்களே அவகாசம்: மின் இணைப்புடன் ஆதார் இணைக்கப்பட்டதை சரிபார்ப்பது எப்படி?
29 Jan 2023சென்னை : மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண் இணைக்கப்பட்டுள்ளதை சரிபார்க்கும் வசதியை மின்சார வாரியம் அறிமுகம் செய்துள்ளது.
-
காவல்துறை குறித்த அவதூறு பேச்சு: கூட்டணி கட்சியினர் மீது நடவடிக்கை எடுக்க அரசுக்கு அண்ணாமலை கோரிக்கை
29 Jan 2023சென்னை : காவல் துறை குறித்து அவதூறாக கோஷமிட்ட கூட்டணி கட்சியினர் மீது முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அண்ணாமலை கோரிக்கை விடுத்துள்ளார்.
-
மருத்துவமனை மீது உக்ரைன் நடத்திய குண்டு வீச்சு தாக்குதல் 14 பேர் பலி: ரஷ்யா குற்றச்சாட்டு
29 Jan 2023நொவைடர் ; ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் உள்ள நொவைடர் நகர் மருத்துவமனை மீது உக்ரைன் நடத்திய குண்டுவீச்சு தாக்குதலில் 14 பேர் பலியானார்கள்.
-
நீட் தேர்வு விலக்கு மசோதா குறித்து பார்லி.யில் குரல் எழுப்ப வேண்டும் : தி.மு.க. எம்.பி.க்களுக்கு ஸ்டாலின் அறிவுறுத்தல்
29 Jan 2023சென்னை : நீட் தேர்வுக்கு விலக்களிக்கும் மசோதாவிற்கு ஜனாதிபதியின் ஒப்புதலைப் பெறுவது குறித்து பாராளுமன்ற கூட்டத்தில் இரு அவைகளிலும் குரல் எழுப்பி வலியுறுத்த வேண்டும் என்
-
நீதிமன்றம் உத்தரவு எதிரொலி: ஹூரியத் அலுவலகத்துக்கு சீல் வைத்த என்.ஐ.ஏ. அதிகாரிகள்
29 Jan 2023ஜம்மு ; டெல்லி கோர்ட்டின் உத்தரவை தொடர்ந்து ஹூரியத் அலுவலகத்திற்கு என்.ஐ.ஏ. அதிகாரிகள் சீல் வைத்தனர்.
-
முதியோர்களுக்கான உதவி தொகையை நிறுத்தி விட்டது : தி.மு.க. அரசு மீது எடப்பாடி குற்றச்சாட்டு
29 Jan 2023சேலம் : முதியோர்களுக்கு வழங்கப்பட்ட உதவித் தொகையை தி.மு.க. அரசு நிறுத்தி விட்டது என்று எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டி உள்ளார்.
-
பாரம்பரியங்களை பாதுகாப்பதில் பழங்குடி சமூகத்தினர் ஆர்வம் : மான் கீ பாத்தில் பிரதமர் மோடி பேச்சு
29 Jan 2023புதுடெல்லி : பழங்குடி சமூகத்தினர் பலர் இந்த முறை பத்ம விருதுகளை பெற்றுள்ளனர் என்றும், தங்களது பாரம்பரியங்களை பாதுகாப்பதில் பழங்குடி சமூகத்தினர் எப்போதும் ஆர்வமுடன் உள்ள
-
ஜனநாயகத்தை பறைசாற்றும் உத்திரமேரூர் கல்வெட்டு : மான் கீ பாத் நிகழ்வில் பிரதமர் மோடி பெருமிதம்
29 Jan 2023புது டெல்லி : இந்தியா ஜனநாயகத்தின் தாய் என்பதை தமிழ்நாட்டின் உத்திரமேரூர் கல்வெட்டுகள் பறைசாற்றுவதாக பிரதமர் நரேந்திர மோடி நேற்று நடந்த மான் கீ பாத் நிகழ்ச்சியில் தெரிவ
-
அமைச்சராவேன் என்று கனவு கூட கண்டதில்லை வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் பேச்சு புனே ; நான் அமைச்சராவேன் என்று ஒருபோதும் கனவு கூட கண்டதில்லை என்று மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் பேசினார். மகராஷ்டிரா மாநிலம் புனே நகரில் நடந்த நிகழ்ச்சியில் ஒன்றிய வெளி
29 Jan 2023அமைச்சராவேன் என்று கனவு கூட கண்டதில்லை வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் பேச்சு
-
குடியரசு தினத்தின் நிறைவாக டெல்லியில் முப்படை வீரர்கள் பாசறை திரும்பும் நிகழ்ச்சி
29 Jan 2023புதுடெல்லி : குடியரசு தினத்தின் நிறைவாக, டெல்லியில் நேற்று முப்படை வீரர்கள் பாசறை திரும்பும் நிகழ்ச்சி நடந்தது.
-
திரிபுரா சட்டசபை தேர்தல்: வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட காங்., பா.ஜ.க,
29 Jan 2023அகர்தலா : திரிபுரா சட்டசபை தேர்தல் நடைபெறுவதையொட்டி பா.ஜ.க. மற்றும் காங்கிரஸ் கட்சிகள் முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளன.
-
வடலூர் சத்திய ஞான சபையில் தைப்பூச ஜோதி தரிசன விழா வரும் 5-ம் தேதி நடக்கிறது
29 Jan 2023வடலூர் : வடலூர் சத்திய ஞான சபையில் தைப்பூச ஜோதி தரிசன விழா 5-ம் தேதி நடக்கிறது.
-
அண்ணா நினைவு நாள்: வரும் 3-ம் தேதி சென்னையில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் அமைதி பேரணி
29 Jan 2023சென்னை : பேரறிஞர் அண்ணாவின் நினைவு நாளையொட்டி வரும் 3-ம் தேதி சென்னையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் அமைதி பேரணி நடத்தப்படுகிறது.
-
இளவரசி டயானாவின் ஆடை ரூ. 4.9 கோடிக்கு விற்பனை
29 Jan 2023நியூயார்க் ; சாத்பைஸ் நிறுவனம் நடத்திய ஏலத்தில் இளவரசி டயானாவின் ஆடை 6 லட்சம் அமெரிக்க டாலருக்கு (இந்திய மதிப்பில் சுமார் 4.9 கோடி ரூபாய்) விற்பனை ஆகியுள்ளது.
-
இந்தியாவில் புதிதாக 109 பேருக்கு கொரோனா: குஜராத்தில் ஒருவர் பலி
29 Jan 2023புது டெல்லி ; இந்தியாவில் புதிதாக 109 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.