எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
திண்டுக்கல், நவ.14- எங்களால் தான் சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. மகத்தான வெற்றி பெற்றது என்று இருமாப்பு காட்டிய எதிர்க்கட்சிகளுக்கு உள்ளாட்சி தேர்தல் முடிவின் மூலம் மக்கள் அதற்கு சரியான பதிலளித்துள்ளனர் என்று திண்டுக்கல்லில் நடந்த கூட்டத்தில் மாவட்ட அவைத்தலைவரும், முன்னாள் எம்.பியுமான சி.சீனிவாசன் விளக்கம் அளித்து பேசினார். திண்டுக்கல் வி.கே.எஸ். மகாலில் தி.மு.க., தே.மு.தி.க., ம.தி.மு.க. கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகள் அக்கட்சிகளில் இருந்து விலகி அ.தி.மு.க.வில் இணையும் விழா நடைபெற்றது. மாவட்டச் செயலாளரும், மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் இரா.விசுவநாதன் தலைமை தாங்கி கட்சியில் புதிதாக இணைந்தவர்களுக்கு சால்வை அணிவித்து வாழ்த்துக்களைத் தெரிவித்து சிறப்புரையாற்றினார்.
கூட்டத்தில் மாவட்ட அவைத்தலைவரும், முன்னாள் எம்.பியுமான திண்டுக்கல் சி.சீனிவாசன் சிறப்புரையாற்றுகையில், நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் தமிழக முதல்வர் ஜெயலலிதா அரசியல் சாணக்கியத்துடன் செயல்பட்டு தனியாக போட்டியிட முடிவெடுத்தார். உள்ளாட்சி தேர்தலில் தனித்து நின்று பரீட்சித்து பார்க்க வேண்டும். கடந்த 5 மாத அ.தி.மு.க. நல்லாட்சிக்கு மக்கள் என்ன பரிசு வழங்கப் போகிறார்கள்? என்பதற்காகவே கூட்டணி வேண்டாமென முதல்வர் ஜெயலலிதா முடிவெடுத்தார். நமது கட்சியில் உள்ள தலைவர்கள் கூட்டணியை எதிர்பார்த்தார்கள். ஆனால் தனித்துப் போட்டியிட வேண்டும் என கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயலலிதா தீர்க்கமான முடிவெடுத்து அறிவிப்பை வெளியிட்டார்.
அதன் பலனாக 10 மாநகராட்சி மேயர் பதவிகள், ஏராளமான இடங்களில் நகர்மன்றத் தலைவர், பேரூராட்சி தலைவர் பதவிகள், மாவட்ட ஊராட்சித் தலைவர் பதவிகள், மாநகராட்சி மற்றும் நகராட்சி கவுன்சிலர் பதவிகளை அ.தி.மு.க. கைப்பற்றி மகத்தான வெற்றியைப் பெற்றது. நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. எங்களால் தான் மகத்தான வெற்றியைப் பெற முடிந்தது என பல்வேறு எதிர்க்கட்சிகள் இருமாப்பு செய்து வந்தனர். அவர்களுக்கு உள்ளாட்சி தேர்தல் முடிவின் மூலம் சரியான பாடம் புகட்டப்பட்டுள்ளது. அ.தி.மு.க.விற்கு 37 சதவீத மக்கள் வாக்குகளை வழங்கியுள்ளனர். தேர்தலின் போது முதல்வர் ஜெயலலிதா எடுத்த மிகச்சரியான முடிவே இதற்கு காரணமாக அமைந்தது. இன்று பல்வேறு கட்சிகளில் இருந்து அ.தி.மு.க.வில் இணைந்து வருகின்றனர். அக்கட்சியின் தலைவர்களும் கட்சியைக் கலைத்து விட்டு முதல்வர் ஜெயலிலதாவை நோக்கி வரும் நாள் வெகு தொலைவில் இல்லை. இனி யாராலும் அ.தி.மு.க.வை வீழ்த்த முடியாது என்பதை உள்ளாட்சி தேர்தல் நிரூபித்துள்ளது. புதிதாக இணைபவர்களுக்கு அ.தி.மு.க.வில் உரிய மரியாதையும் கட்சி பொறுப்பும் வழங்கப்படும் என்று பேசினார்.
இந்நிகழ்ச்சியில் மதுரை மாநகராட்சி துணை மேயர் கோபாலகிருஷ்ணன், வேடசந்தூர் எம்.எல்.ஏ. தென்னம்பட்டி பழனிச்சாமி, நகர்மன்றத் தலைவர் வி.மருதராஜ், நகரச் செயலாளர் ராமுத்தேவர், நத்தம் தொகுதி செயலாளர் கண்ணன், நகர்மன்ற துணைத் தலைவர் பி.ஜி.எம்.துளசிராம், பேரவை செயலாளர் பாரதிமுருகன், எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் திவான்பாட்ஷா, வழக்கறிஞர் பிரிவு செயலாளர் ஜெயபால், தொழிற்சங்க செயலாளர் ஜெயராமன், ஒன்றிய செயலாளர் ஜெயசீலன், நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவர் நாகரத்தினம், அ.தி.மு.க. கவுன்சிலர்கள் பழக்கடை நாகராஜன், சுப்பிரமணி, அப்துல் ரஹீம், இக்பால், சேவியர், ராமலிங்கம், வி.டி.ராஜன், சோனா சுருளி, சக்திவேல் மற்றும் அகரம் பேரூராட்சி துணைத்தலைவர் சக்திவேல், கவுன்சிலர் அமாவாசை, தாடிக்கொம்பு பேரூர் கழக செயலாளர் முத்துராஜ், பொதுக்குழு உறுப்பினர் நெப்போலியன் உள்ளிட்ட மாவட்ட, நகர ஒன்றியக் கிளைக்கழக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஸ்வீட் உருளைக்கிழங்கு கேக்1 day 12 hours ago |
பெப்பர் சிக்கன்5 days 12 hours ago |
ஹனி பட்டர் சிக்கன்1 week 1 day ago |
-
கெஜ்ரிவால் விவகாரத்தை தொடர்ந்து காங்கிரஸ் வங்கி கணக்கு குறித்து கருத்து தெரிவித்த அமெரிக்கா
28 Mar 2024வாஷிங்டன், டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் விவகாரத்தை தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்கு முடக்கம் குறித்து அமெரிக்கா கருத்து தெரிவித்துள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 28-03-2024.
28 Mar 2024 -
தி.மு.க., காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று தர்மபுரியில் பிரச்சாரம்
28 Mar 2024தர்மபுரி, தர்மபுரி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் தி.மு.க.
-
குன்றத்தில் வெகுவிமர்சையாக நடந்த சுப்பிரமணிய சுவாமி - தெய்வானை அம்மன் திருக்கல்யாண வைபவம்
28 Mar 2024மதுரை, மீனாட்சியம்மன், சுந்தரேஸ்வரர் பிரியாவிடை முன்னிலையில் திருப்பரங்குன்றத்தில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை அம்மன் திருக்கல்யாண வைபவம் வெகுவிமர்சையாக நேற்று நடைபெற்
-
முக்கிய வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்பு: தமிழகத்தில் வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை முடிந்தது: இறுதி வேட்பாளர்கள் பட்டியல் நாளை வெளியீடு
28 Mar 2024சென்னை, தமிழ்நாடு முழுவதும் வேட்புமனு தாக்கல் செய்த முக்கிய தலைவர்கள் அனைவரின் வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டுள்ளது.
-
5 நாள் பயணமாக கவர்னர் ரவி நாளை ஊட்டி செல்கிறார்
28 Mar 2024ஊட்டி, 5 நாள் பயணமாக கவர்னர் ஆர்.என். ரவி நாளை ஊட்டிக்கு புறப்பட்டு செல்கிறார்.
-
தாய்லாந்தில் ஓரின சேர்க்கையாளர் திருமணத்துக்கு சட்டப்பூர்வ அனுமதி
28 Mar 2024பாங்காங்க், ஓரின சேர்க்கையாளர் திருமணத்திற்கான சட்ட மசோதா தாய்லாந்து பாராளுமன்றத்தில் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது.
-
தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின், ராகுல் காந்தி இணைந்து பிரச்சாரம்: செல்வப்பெருந்தகை தகவல்
28 Mar 2024சென்னை, முதல்வர் மு.க.ஸ்டாலினும், ராகுல் காந்தியும் ஒன்றாக சேர்ந்து தமிழகத்தில் இண்டியா கூட்டணி வேட்பாளர்களுக்கு சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வாக்கு சேகரிக்க
-
வேட்புமனு தாக்கல் செய்ய ஏப். 3-ல் கேரளா செல்கிறார் ராகுல் காந்தி
28 Mar 2024திருவனந்தபுரம், ஏப்ரல் 3-ம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்ய கேரளா செல்கிறார். அதை தொடர்ந்து கல்பெட்டா கலெக்டர் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்கிறார்.
-
2-ம் கட்ட தேர்தல்: 13 மாநிலங்களில் உள்ள 89 மக்களவை தொகுதிகளில் மனு தாக்கல் தொடங்கியது
28 Mar 2024புது டெல்லி, நாடு முழுவதும் பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்படும் நிலையில், இரண்டாவது கட்டமாக ஏப்ரல் 26-ம் தேதி 13 மாநிலங்களில் உள்ள 89 மக்களவை தொகுதிகளில் வாக்க
-
ஈரோடு எம்.பி. கணேசமூர்த்தி மறைவு: முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல்
28 Mar 2024சென்னை, ஈரோடு மக்களவை உறுப்பினர் கணேசமூர்த்தி மறைவுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
-
ஏப். 4-ல் டெல்லியில் கூடுகிறது காவிரி மேலாண்மை ஆணையம்
28 Mar 2024புது டெல்லி, காவிரி மேலாண்மை ஆணையத்தின் 29-வது கூட்டம் ஏப்ரல் 4-ம் தேதி டெல்லியில் நடைபெற உள்ளது.
-
ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பி.எஸ். பெயரில் தாக்கலான 6 பேரின் வேட்புமனுவும் ஏற்பு
28 Mar 2024ராமநாதபுரம், பாராளுமன்ற மக்களவைத் தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பன்னீர் செல்வம் எனும் பெயரில் வேட்புமனு தாக்கல் செய்த 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டுள்ளது.
-
ஏப்.4-ல் மத்திய அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகை: சென்னை, மதுரை, சிவகங்கையில் பிரச்சாரம்
28 Mar 2024சென்னை, தேர்தல் பிரச்சாரத்துக்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஏப்ரல் 4-ம் தேதி தமிழகம் வரவுள்ளார். அவர் மதுரை, சிவகங்கை, சென்னையில் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.
-
அடுத்த தலைமுறைக்கான பயணிகள் விமானத்தை உருவாக்கும் ஜப்பான்
28 Mar 2024டோக்கியோ, ஹைட்ரஜன் எரிபொருள் என்ஜினை பயன்படுத்தி அடுத்த தலைமுறைக்கான பயணிகள் விமானத்தை ஜப்பான் உருவாக்க உள்ளது.
-
புதுச்சேரியில் உதயநிதி 31-ம் தேதி பிரச்சாரம்
28 Mar 2024புதுச்சேரி, காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கத்துக்கு ஆதரவாக அமைச்சர் உதயநிதி வருகிற 31-ம் தேதி புதுச்சேரியில் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.
-
தமிழகத்தில் 1-ம் தேதி வரை வெப்பநிலை அதிகரிக்க கூடும்: சென்னை வானிலை மையம் தகவல்
28 Mar 2024சென்னை, தமிழகத்தில் வரும் 01-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2 டிகிரி செல்சியஸ் வரை படிப்படியாக அதிகரிக்கக் கூடும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்
-
இந்தியாவின் பணக்கார பெண்மணி சாவித்ரி ஜிண்டால் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகல்
28 Mar 2024புது டெல்லி, அரியானா முன்னாள் அமைச்சரும், பிரபல தொழில் நிறுவனமான ஓ.பி.
-
கெஜ்ரிவாலை பதவியிலிருந்து நீக்க கோரிய மனு தள்ளுபடி
28 Mar 2024புது டெல்லி, அரவிந்த் கெஜ்ரிவாலை முதல்வர் பதவியில் இருந்து நீக்க கோரி தொடரப்பட்ட பொதுநல மனுவை தள்ளுபடி செய்து டெல்லி ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
-
கிறிஸ்தவ ஆலயங்களில் இன்று புனித வெள்ளி சிறப்பு வழிபாடு
28 Mar 2024சென்னை, தமிழகம் முழுவதும் கிறிஸ்தவ ஆலயங்களில் இன்று புனித வெள்ளி சிறப்பு வழிபாடு நடத்தப்படுகிறது.
-
அருணாச்சலில் போட்டியின்றி தேர்வாகும் முதல்வர் காண்டு உள்ளிட்ட 5 பா.ஜ.க. வேட்பாளர்கள்
28 Mar 2024ஈடாநகர், எதிர்க்கட்சிகள் தரப்பில் வேட்பாளர்கள் யாரும் மனு தாக்கல் செய்யாததால் அருணாசல பிரதேசத்தில் முதல்வர் பிமா காண்டு உள்ளிட்ட 5 பா.ஜ.க.
-
அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனை 3-வது முறையாக நிராகரித்தார் மொய்த்ரா
28 Mar 2024புது டெல்லி, திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளர் மஹுவா மொய்த்ரா மூன்றாவது முறையாக அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனை நிராகரித்துள்ளார்.
-
டி.என்.பி.எஸ்.சி. குரூப் 1 தேர்வு நடைபெறும் தேதி அறிவிப்பு: ஏப். 27 வரை விண்ணப்பிக்கலாம்
28 Mar 2024சென்னை, 90 காலிபணியிடங்களுக்கான குரூப் 1 தேர்வு அறிவிப்பை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.
-
செந்தில் பாலாஜியின் புதிய மனு ஏப். 4-ம் தேதிக்கு தள்ளி வைப்பு
28 Mar 2024சென்னை, சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த புதிய மனுவுக்கு அமலாக்கத்துறை பதிலளிக்கும் படி உத்தரவிட்டு ஏப்ரல் 4-ம் தேதி
-
பார்லி. தேர்தலுக்கு பின் விடுபட்ட அனைவருக்கும் உரிமைத்தொகை: அமைச்சர் உதயநிதி வாக்குறுதி
28 Mar 2024ஸ்ரீபெரும்புதூர், பாராளுமன்ற மக்களவை தேர்தலுக்கு பின்னர் விடுபட்ட அனைவருக்கும் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.