எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, நவ. 14 - மலேசியாவுக்கு கடத்த இருந்த ரூ.6.5 கோடி மதிப்புள்ள ஹெராயினை சென்னை ஏர்போர்ட்டில் மத்திய வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகள் நேற்று பறிமுதல் செய்தனர். கடத்தலில் ஈடுபட்ட தனியார் விமான நிறுவனத்தின் பஸ் டிரைவர் மற்றும் இளம்பெண் உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர். சென்னையில் இருந்து மலேசியாவுக்கு போதைப்பொருள் கடத்தப்படுவதாக மத்திய வருவாய் புலனாய்வு துறைக்கு (டிஆர்ஐ) ரகசிய தகவல் கிடைத்தது. உஷாரான அதிகாரிகள் நேற்று முன்தினம் இரவு முதல் விமான நிலையத்தில் தீவிரமாக கண்காணித்து வந்தனர். மலேசிய தலைநகர் கோலாலம்nullருக்கு செல்லும் ஜெட் ஏர்வேஸ் விமானம், நேற்று அதிகாலை ஒரு மணிக்கு புறப்பட தயாராக இருந்தது. அதில் செல்லவிருந்த பயணிகள் அனைவரிடமும் பாதுகாப்பு மற்றும் சுங்க சோதனைகள் நடத்தி முடிக்கப்பட்டு உள்ளே அனுமதிக்கப்பட்டனர். அவர்கள் ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் பஸ்கள் மூலம் விமானம் அருகே அழைத்து வரப்பட்டனர்.
அந்த விமானத்தில் போதைப் பொருள் கடத்தப்படலாம் என்ற சந்தேகம் எழுந்ததால் பயணிகளை டிஆர்ஐ அதிகாரிகள் உன்னிப்பாக கவனித்து வந்தனர். பயணிகள் அனைவரும் விமானத்துக்குள் ஏறுவதற்கு ஆயத்தமாகினர். அப்போது பயணிகளை ஏற்றி வந்த ஒரு பஸ்சின் டிரைவர், அங்கிருந்த மூன்று பேரிடம் ஒரு பார்சலை கொடுத்தார். இதைப் பார்த்த டிஆர்ஐ அதிகாரிகள், விரைந்து சென்று பயணிகளையும் பஸ் டிரைவரையும் மடக்கிப் பிடித்தனர். அவர்கள் வைத்திருந்த பார்சலை பறிமுதல் செய்தனர். பிரித்து பார்த்தபோது, அதில் ஹெராயின் போதைப் பொருள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. விமானம் புறப்படுவதற்கு முன்பு நடந்த இந்த சம்பவத்தால் பயணிகள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
பிடிபட்ட பயணிகளை உடனடியாக டிஆர்ஐ அதிகாரிகள் விமான நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். அவர்கள் திருச்சியை சேர்ந்த முகமது மசூர் (40), ஹத்தாரியா (35) என்ற பெண் மற்றும் இலங்கையை சேர்ந்த அப்துல் காதர் அலீம் (35) என்பதும், ஹெராயினை அவர்களிடம் ஒப்படைத்த பஸ் டிரைவர் வண்டலூர் வெங்கம்பாக்கத்தை சேர்ந்த பாலகுமார் (30) என்பதும் தெரியவந்தது.
பார்சலில் மொத்தம் 6 கிலோ 380 கிராம் ஹெராயின் இருந்தது. இதன் சர்வதேச மதிப்பு ரூ.6 கோடியே 50 லட்சம் ஆகும். அவர்கள் 4 பேரையும் கைது செய்து, தி.நகரில் உள்ள டிஆர்ஐ தலைமை அலுவலகத்துக்கு கொண்டு சென்று விசாரித்து வருகின்றனர். அவர்கள் கொடுத்த தகவலின்பேரில் ஹெராயினை கடத்த சொன்ன கிண்டியை சேர்ந்த ஜாகீர் (40), மணிகண்டன் (35) ஆகியோரை கிண்டி அருகே அதிகாரிகள் மடக்கி பிடித்து கைது செய்தனர்.
சென்னை விமான நிலையத்தில் கடும் சோதனைகளை கடந்து போதைப் பொருள் கடத்தப்படுவதும், கடத்தல்காரர்கள் பிடிபடுவதும் அடிக்கடி நடக்கும் சம்பவங்கள். இதுபோன்ற கடத்தல்கள், சிறு அளவில்தான் நடந்து வந்தது. தற்போது ஏர்போர்ட்டில் பயணிகளை அழைத்து செல்லும் பஸ் மூலம் போதைப் பொருள் கடத்தப்பட்டு, விமானத்துக்குள் கொண்டு செல்ல முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இது பற்றி பிடிபட்டவர்களை அதிகாரிகள் விசாரித்தனர்.
விசாரணையின்போது, பிடிபட்ட கடத்தல்காரர்கள் கூறியதாவது:
போதைப் பொருளை பணத்துக்காகவே கடத்தினோம். இதுபற்றி முழுமையாக எங்களுக்கு தெரியாது. சென்னை கிண்டியை சேர்ந்த ஜாகீர், மணிகண்டன் இருவரும்தான் எங்களிடம் இதை தந்தனர். கோலாலம்nullர் ஏர்போர்ட்டில் அவர்கள் சொன்னவரிடம் ஒப்படைத்தால் பணம் தருவதாக கூறினர். பணத்துக்கு ஆசைப்பட்டு பார்சலை எடுத்து செல்ல ஒப்புக் கொண்டோம். பார்சலை விமானம் அருகே கொண்டு வந்து தருவதற்காக, பஸ் டிரைவரை அவர்கள்தான் ஏற்பாடு செய்தனர்.
விமான நிலைய பஸ் டிரைவர்கள் வருவதற்கென தனி வழி உள்ளது. அதன் வழியாகவே இந்த பார்சலை டிரைவர் உள்ளே எடுத்து வந்து பஸ்சில் வைத்தார். நாங்களும் அந்த டிரைவர் ஓட்டிய பஸ்சில் சென்று ஏறிக் கொண்டோம். விமானம் அருகே வந்தபோது, யாருக்கும் சந்தேகம் வராதபடி எங்களிடம் அந்த பார்சலை தந்தார். பத்திரமாக எங்களிடம் பார்சல் ஒப்படைக்கப்பட்டு விட்டது என தெரிந்ததும் ஜாகீரும் மணிகண்டனும் புறப்பட்டு சென்று விட்டனர்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
பாதுகாப்பு விஷயத்தில் அதிர்ச்சி
மத்திய வருவாய் புலனாய்வு துறை கூடுதல் தலைமை இயக்குனர் ராஜன், நிருபர்களிடம் கூறியதாவது:-
மலேசியாவுக்கு போதை பொருள் கடத்த முயன்ற சம்பவத்தில் 6 பேரை கைது செய்துள்ளோம். இதற்கு பயன்படுத்தப்பட்ட ஜெட் ஏர்வேஸ் நிறுவன பஸ்சையும் பறிமுதல் செய்துள்ளோம். சென்னை விமான நிலையத்தில் போதை பொருள் கடத்தல்காரர்கள் கைதான சம்பவம் பலமுறை நடந்துள்ளது. ஆனால், ஏர்லைன்ஸ் ஊழியர் ஒருவரின் நேரடி தொடர்புடன் நடந்த சம்பவம் இதுதான். சென்னை விமான நிலைய வரலாற்றிலேயே முதன்முறையாக தனியார் விமான நிறுவன வாகனம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பாதுகாப்பு விஷயத்தில் அதிகாரிகளுக்கு அதிர்ச்சி அளித்திருக்கிறது.
போதைப் பொருள் கடத்துவதாக கிடைத்த தகவலையடுத்து நேற்று முன்தினம் முதல் தீவிர சோதனை நடத்தி வந்தோம். இவ்வளவு பெரிய கடத்தல் கும்பல் பிடிபடும் என எதிர்பார்க்கவில்லை. விமான நிறுவன பஸ் டிரைவர்கள் ஏர்போர்ட்டுக்குள் வருவதற்கு தனி கேட் உள்ளது. அங்கும் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். ஊழியர்களை தீவிரமாக சோதனை செய்தபிறகே அனுப்புவார்கள். அடையாள அட்டையை பார்த்து, உடலை தடவிப் பார்த்துதான் அனுப்புவார்கள். அப்படி இருந்தும் எப்படி இந்த பார்சலை டிரைவர் எடுத்து வந்தார் என்பது மர்மமாக உள்ளது. அவரிடம் சோதனை நடத்தவில்லையா என்பது பற்றியும் விசாரிக்கிறோம். இது பாதுகாப்பு சம்பந்தபட்ட விவகாரம். போதை பொருள் கடத்தி செல்வது போன்று ஆயுதங்கள் மற்றும் வெடிகுண்டுகளை எடுத்து சென்றிருந்தால் என்னவாயிருக்கும். எனவே, இதுகுறித்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இவ்வாறு ராஜன் கூறினார்.
இந்த விவகாரத்தில் போதை பொருள் இதுபோல் எத்தனை முறை கடத்தப்பட்டுள்ளது. ஜாகீர்உசேன் தவிர வேறு பெறும் நெட்வொர்க் உள்ளதா? தனியார் விமான நிறுவன ஊழியர்கள் இதற்கு முன்பு இவ்வா கடத்தலில் ஈடுபட்டார்களா? என்று மத்திய வருவாய் புலனாய்வு துறையினர் தீவிவரமாக விசாரித்து வருகின்றனர். செனனை விமான நிலையத்தில் ரூ.6 1/2 கோடி மதிப்புள்ள ஹெராயின் சிக்கியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு டோனட்17 hours 59 min ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்4 days 18 hours ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி1 week 12 hours ago |
-
தங்கம் விலை மீண்டும் உயர்வு
24 Apr 2024சென்னை, சென்னையில் நேற்று ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ரூ.53.840-க்கு விற்பனையானது.
-
தனியார் பள்ளிகளில் இடஒதுக்கீடு நிறைவேற்றப்படுகிறதா? கண்காணிக்க அரசுக்கு செல்வப்பெருந்தகை கோரிக்கை
24 Apr 2024சென்னை, தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் கல்வி உரிமைச் சட்டப்படி தனியார் பள்ளிகளில் 25 சதவிகித இடஒதுக்கீடு முழுமையாக நிறைவேற்றப்படுகிறதா என்பதை நாள்தோறும் கண்காணித்து உரிய த
-
பாகிஸ்தான் செல்லுமா இந்தியா?
24 Apr 2024சாம்பியன் டிராபி போட்டி பாகிஸ்தானில் நடப்பதால் இந்திய அணி அங்கு சென்று விளையாட வாய்ப்பு இல்லை என தகவல் வெளியாகி உள்ளது.
-
பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்ன ஆகும்? இளையராஜா தரப்புக்கு உயர் நீதிமன்றம் கேள்வி
24 Apr 2024சென்னை, இளையராஜா பாடலை பயன்படுத்த விதித்த இடைக்கால தடையை நீக்கக்கோரி நிறுவனங்கள் தொடர்ந்த மேல்முறையீடு வழக்கில் பாடலுக்கு பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்ன ஆகும்? 
-
சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தல் எதிரொலி: பெரிய அளவில் விளம்பரம் வெளியிட்டு மன்னிப்பு கோரியது பதஞ்சலி நிறுவனம்
24 Apr 2024புதுடெல்லி, சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தலை அடுத்து 67 தேசிய செய்தித்தாள்களில் பெரிய அளவில் விளம்பரம் வெளியிட்டு நிபந்தனையற்ற பொதுமன்னிப்பு கோரியது பதஞ்சலி நிறுவனம்.
-
நாட்டின் கவனத்தை திசை திருப்புவதே பாஜக தலைவர்களின் பாணி: பிரியங்கா
24 Apr 2024திருவனந்தபுரம், உண்மையான பிரச்சினைகளில் இருந்து நாட்டின் கவனத்தை திசை திருப்புவதே பா.ஜ.க.
-
தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம்: கவர்னர் ஆர்.என்.ரவி வாழ்த்து
24 Apr 2024சென்னை, ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 24-ம் தேதி தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம் கொண்டாடப்படுகிறது. அதன்படி நேற்று தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம் கொண்டாடப்பட்டது.
-
தீர்ப்பு தாமதம்: சுப்ரீம் கோர்ட்டில் ஹேமந்த் சோரன் மனு தாக்கல்
24 Apr 2024புது டெல்லி, பணமோசடி வழக்கில் அமலாக்கத் துறையின் கைது நடவடிக்கையை எதிர்த்து தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பை ஐகோர்ட் தாமதப்படுத்துவதாகக் கூறி, ஜார்கண்ட் முன்னாள் முதல்
-
வண்டியூர் தேனூர் மண்டபத்தில் மண்டூக மகரிஷிக்கு சாப விமோசனம் அளித்த கள்ளழகர்: ராமராயர் மண்டகப்படியில் விடிய, விடிய தசாவதாரம்
24 Apr 2024மதுரை, வண்டியூர் தேனூர் மண்டபத்தில் கருட வாகனத்தில் எழுந்தருளிய கள்ளழகர் அங்கு மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் அளித்தார்.
-
போர் தொடங்கியதில் இருந்து தற்போது வரை உக்ரைனில் 5 லட்சம் ராணுவ வீரர்கள் உயிரிழப்பு: ரஷ்யா
24 Apr 2024மாஸ்கோ, போர் தொடங்கியதில் இருந்து தற்போது வரை 5 லட்சம் ராணுவ வீரர்களை உக்ரைன் இழந்துள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது
-
கஷ்டப்பட்டு உழைத்து சேர்த்த உங்கள் செல்வத்தை காங்கிரஸ் பறித்துவிடும்: சத்தீஷ்கரில் பிரதமர் மோடி பேச்சு
24 Apr 2024புதுடெல்லி, நீங்கள் கஷ்டப்பட்டு உழைத்து சேர்த்த செல்வத்தை உங்கள் பிள்ளைகள் பெறமாட்டார்கள், அதை காங்கிரஸ் கட்சி பறித்துவிடும் என்று சத்தீஷ்கர் மாநிலத்தில் நடந்த கூட்டத்த
-
இன்டியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து வடமாநிலங்களில் தேர்தல் பிரசாரம் செய்ய முதல்வர் ஸ்டாலின் திட்டம்
24 Apr 2024சென்னை, இன்டியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து டெல்லி உள்ளிட்ட மாநிலங்களுக்கு சென்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரசாரம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
-
வி.வி.பாட் வழக்கில் தேர்தல் ஆணையம் விளக்கம்:தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தது சுப்ரீம் கோர்ட்
24 Apr 2024புதுடெல்லி:வி.வி.பாட் தொடர்பான வழக்கில் தேர்தல் ஆணையம் விளக்கமளித்ததை அடுத்து தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை சுப்ரீம் கோர்ட் ஒத்திவைத்தது.
-
ஸ்மோக்கிங் பிஸ்கட்டை உட்கொள்ள வேண்டாம்: மாநில உணவு பாதுகாப்புத்துறை எச்சரிக்கை
24 Apr 2024சென்னை, ஸ்மோக்கிங் பிஸ்கட்டை உட்கொள்ள வேண்டாம் என மாநில உணவு பாதுகாப்புத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
-
நீர்மட்டம் தொடர் சரிவு: மேட்டூர் அணை பகுதியில் வெளியே தெரியும் நந்தி சிலை, தேவாலயம்
24 Apr 2024சேலம், மேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து வருவதால் நந்தி சிலை, கிறிஸ்தவ தேவாலயம் முழுவதும் வெளியே தெரிகிறது.
-
நாளை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் மணிப்பூரில் அடுத்தடுத்து குண்டுவெடிப்பு சம்பவம்
24 Apr 2024இம்பால், மணிப்பூரின் 2ம் கட்ட தேர்தல் நாளை நடைபெறவுள்ள நிலையில், அங்கு குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
மஞ்சுமெல் பாய்ஸ் பட நடிகரை கரம் பிடித்தார் அபர்ணா தாஸ்
24 Apr 2024திருவனந்தபுரம், கேரள மாநிலம், வடக்கஞ்சேரியில் மஞ்சுமெல் பாய்ஸ் பட நடிகர் தீபக் பரம்போல்,நடிகை அபர்ணாதாஸ் ஆகியோரது திருமணம் நேற்று நடைபெற்றது.
-
தமிழ்நாட்டில் ஈரோடு, சேலம் உள்ளிட்ட 15 மாவட்டங்களுக்கு வெப்ப அலைக்கான மஞ்சள் அலர்ட் வட உள்மாவட்டங்களில் 5 டிகிரி வரை வெப்பம் உயரும்
24 Apr 2024புதுடில்லி, ஏப். 25- தமிழகத்தில் ஈரோடு, சேலம் உட்பட 15 மாவட்டங்களுக்கு வெப்ப அலைக்கான மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
-
செல்போன் டவரில் ஏறி தமிழக விவசாயிகள் திடீர் போராட்டம் : தலைநகர் டெல்லியில் பரபரப்பு
24 Apr 2024புதுடெல்லி, டெல்லி ஜந்தர் மந்தரில் செல்போன் டவர், மரத்தின் மீது ஏறி தமிழ்நாட்டை சார்ந்த விவசாயிகள் போராட்டம் நடத்தியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
-
கிர்கிஸ்தானில் நீர் வீழ்ச்சியில் விழுந்து இந்திய மாணவர் பலி
24 Apr 2024கிர்கிஸ்தான், கிர்கிஸ்தானில் உள்ள நீர்வீழ்ச்சியில் விழுந்து ஆந்திர மாணவர் பலியானார்.
-
கேரளாவில் சக்திவாய்ந்த வெடிகுண்டுகள் கண்டெடுப்பு
24 Apr 2024திருவனந்தபுரம், கேரள மாநிலம், கண்ணூர் மாவட்டம் மட்டன்னூரில் உள்ள ஒரு வயலில் சக்திவாய்ந்த வெடிகுண்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வரு
-
இட ஒதுக்கீட்டை அதிகரிக்க இண்டியா கூட்டணி நடவடிக்கை எடுக்கும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிக்கை
24 Apr 2024சென்னை, ஓ.பி.சி., எஸ்.சி./எஸ்.டி. மக்களின் இட ஒதுக்கீட்டை அதிகரிக்க இண்டியா கூட்டணி நடவடிக்கை எடுக்கும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
விமான பயணத்தின்போது பெற்றோருக்கு அருகிலேயே குழந்தைகளுக்கு இருக்கை டி.ஜி.சி.ஏ. புதிய உத்தரவு
24 Apr 2024புதுடெல்லி, விமானங்களில் 12 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு அவர்களின் பெற்றோர் ஒருவருடன் இருக்கை ஒதுக்க வேண்டும் என்று விமான நிறுவனங்களுக்கு விமான போக்குவரத்து தலைமை இயக்க
-
தென் தமிழகத்தில் இன்று லேசான மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்
24 Apr 2024சென்னை, தென் தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
கூவாகம் கூத்தாண்டவர் கோயில் தேரோட்டம் கோலாகலம்: ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு
24 Apr 2024கள்ளக்குறிச்சி, கள்ளக்குறிச்சி மாவட்டம் பிரசித்தி பெற்ற கூவாகம் கூத்தாண்டவர் கோயிலில் நடைபெற்ற தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.