முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சேனா கட்சிகள் மீது முலாயம் சிங் யாதவ் கடும் தாக்கு

செவ்வாய்க்கிழமை, 15 நவம்பர் 2011      இந்தியா
Image Unavailable

 

மும்பை, நவ.15 - மும்பை சோமையா மைதானத்தில் நடந்த சமாஜ்வாடி கட்சி கூட்டம் ஒன்றில் அக்கட்சியின் தேசிய தலைவர் முலாயம் சிங் யாதவ் கலந்து கொண்டு பேசினார். அப்போது வட இந்தியர்களுக்கு எதிராக செயல்பட்டு வரும் சிவசேனா, மகாராஷ்டிர நவ நிர்மான் சேனா  கட்சிகளை அவர் கடுமையாக சாடினார். இந்த இரு கட்சிகளையம் சேர்ந்த தலைவர்களும் அவர்களது  கட்சியினரும் வட இந்தியர்களுக்கு எதிராக  செயல்பட்டு வருகிறார்கள்.

வட இந்தியர்கள் மீது இவர்கள் தாக்குதல்களையும் நடத்தி வருகிறார்கள். இவர்களின் இந்த போக்கு நாட்டின் வளர்ச்சிக்கு எதிரானது என்றும் முலாயம் சிங் யாதவ் குற்றம்சாட்டினார்.

இந்த கட்சிகளின் இந்த போக்கை முறியடித்து நடைபெற இருக்கும் மும்பை மாநகராட்சி தேர்தலில் தனது கட்சி மாபெரும் வெற்றியை  பெறும் என்றும் அவர் உறுதி கூறினார்.மற்ற கட்சிகளைப் போல் அல்லாமல் தனது கட்சி ஜாதி , மத பேதம் இல்லாமல் செயல்படும் என்றும்  தனது  கட்சிக்கு இந்த தேர்தலில் வெற்றி கிட்டுவது நிச்சயம் என்றும் அவர் கூறினார். மகாராஷ்டிர சட்டசபையில் சமாஜ்வாடி  கட்சியைச்  சேர்ந்த எம்.எல்.ஏ.  அபு ஆசிம் ஆஸ்மி  இந்தியில் பதவி ஏற்றார் என்பதற்காக அவரை குறிவைத்து மகாராஷ்டிர நவ நிர்மாண் சேனா கட்சியினர்  செயல்பட்டு வருகின்றனர் என்றும் அவர் குற்றம்சாட்டினார். 

இந்த கூட்டத்தில் சமாஜ்வாடி  கட்சி எம்.எல்.ஏ.வும் மாநில சமாஜ்வாடி  கட்சி தலைவருமான அபு ஆசிம் ஆஸ்மியும் பங்கேற்று பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்