முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கூடங்குளம் போராட்டம் உள்நோக்கம் கொண்டது: கிருஷ்ணசாமி

செவ்வாய்க்கிழமை, 15 நவம்பர் 2011      தமிழகம்
Image Unavailable

 

மதுரை,நவ. 15 - கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கு எதிராக நடத்தப்பட்டு வரும் போராட்டங்கள் உள்நோக்கம் கொண்டது என்று புதிய தமிழகம் கட்சியின் நிறுவனர் டாக்டர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார். மதுரையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் மேலும் கூறுகையில், கூடங்குளத்தில் அணுமின் நிலையத்துக்கு எதிராக நடத்தப்பட்டு வரும் போராட்டம் அங்குள்ள மக்களால் நடத்தப்பட்டு வருவது அல்ல. வெளிநாட்டு நிறுவனங்களில் நிதி பெற்று வரும் தொண்டு நிறுவனங்களால்தான் நடத்தப்பட்டு வருகிறது. இப்போராட்டத்துக்கு புதிய தமிழகம் ஆதரவு அளிக்காது. 

நாட்டில் பல்வேறு இடங்களில் அணுமின் நிலையங்கள் உள்ள நிலையில் கூடங்குளத்துக்கு எதிராக மட்டும் ஏன் போராட்டம் நடத்தப்பட வேண்டும். வெளிநாட்டினர் தூண்டுதலின் பேரிலேயேயும், அவர்களிடம் இருந்து நிதியுதவி பெற்றுக் கொண்டுதான் இந்த போராட்டங்களை சிலர் நடத்தி வருகிறார்கள். நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் அதிக நம்பிக்கையுடன் மக்கள் அ.தி.மு.க.வுக்கு வாக்களித்து வெற்றி பெற செய்தனர். அ.தி.மு.க. தலைமையிலான ஆட்சியில் நில மோசடி புகார்கள் மீது அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்