முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நேரு பிறந்தநாள்: அமைச்சர்கள் மலர்தூவி மரியாதை

செவ்வாய்க்கிழமை, 15 நவம்பர் 2011      அரசியல்
Image Unavailable

 

சென்னை, நவ. 15 - ஜவஹர்லால் நேருவின் 123 வது பிறந்த நாள் விழா நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. சென்னையில் கிண்டி, கத்திபாரா சந்திப்பில் உள்ள அவரது சிலை மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் நேற்று மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. சிலைக்கு கீழே நேருவின் உருவப்படம் வைக்கப்பட்டு அவற்றிக்கு மாலை அணிவிக்கப்பட்டிருந்தது. நேற்று காலை 9 மணியளவில் தமிழக கவர்னர் ரோசைய்யா அவரது படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். அவருடன் தமிழக அமைச்சர்கள் ராஜேந்திர பாலாஜி, ரமணா, சின்னைய்யா, கோகுல இந்திரா மற்றும் சென்னை மாநர மேயர் சைதை துரைசாமி ஆகியோர் நேரு படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.

அதைத் தொடர்ந்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டிக்கு புதிதாக தலைவர் பொறுப்பேற்றுள்ள ஞானதேசிகன் நேரு படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். அவருடன் குமரி அனந்தன், வசந்தகுமார், திருநாவுக்கரசு, கத்திபாரா ஜனார்த்தனம், சேம.நாராயணன், கிருஷ்ணசாமி, நாஞ்சில் பிரசாத், ஜே.எம்.ஆரூண் எம்.பி., எஸ்.எச்.அலி, வி.பி.ஜவஹர்பாபு, சிவபாலன், அய்யம் பெருமாள், என்.சீதாபதி, ஆலந்தூர் பாஸ்கர், போரூர் சவுந்திரபாண்டியன், ஏ.ஆனந்தநாராயணன், பி.கே.கிருஷ்ணன், முனைவர் பாஷா, துல்கருணை உள்பட ஏராளமான காங்கிரசார் அவரது படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்