முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இடைத்தேர்தலில் இடத்தை பிடிக்க மதிமுக தீவிரம்

செவ்வாய்க்கிழமை, 15 நவம்பர் 2011      அரசியல்
Image Unavailable

 

சங்கரன்கோவில்.நவ.15 - சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் இரண்டாம் இடத்தை பிடிக்க ம.தி.மு.க. தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளது. ​நெல்லை மாவட்டத்தில் உள்ள இரண்டு தனித்தொகுதிகளில் சங்கரன்கோவில் தொகுதியும் ஒன்று. இங்குள்ள சங்கரநாராயணர் திருக்கோவில் இந்திய அளவில் புகழ்பெற்றது. இந்த தொகுதியின் அமைச்சரும் தமிழகத்திற்கே செல்லப்பிள்ளையாக இருந்த கருப்பசாமி திடீர் உடல் நலக்குறைவால் மரணமடைந்தார். அதனால் வரும் ஜனவரி மாதத்திற்குள் இங்கு இடைத்தேர்தல் நடக்க வாய்ப்பு உள்ளது. ஏற்கனவே கடந்த நான்கு முறை அ.தி.மு.க. இங்கு வெற்றி பெற்று கருப்பசாமி எம்.எல்.ஏ. வாக இருந்து அ.தி.மு.க.வின் கோட்டையாக சங்கரன்கோவில் தொகுதியை மாற்றிக்காட்டியுள்ளார். இந்த சூழ்நிலையில் சங்கரன்கோவில் தொகுதியில் தமிழக முதல்வர் ஜெயலலிதா சுட்டிக்காட்டும் நபர் எம்.எல்.ஏ. வாக வெற்றி பெறுவது உறுதியாகிவிட்டது. ஆனாலும் சங்கரன்கோவில் தொகுதியில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோவின் சொந்த ஊர் கலிங்கப்பட்டி உள்ளது. எனவே கட்சியின் செல்வாக்கை நிரூபித்துக் காட்ட வேண்டிய சூழ்நிலையில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ உள்ளார். நேற்று குருவிகுளம் ஒன்றியத்தில் உள்ள மைப்பாறை கிராமத்தில் ம.தி.மு.க. வின் செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. அதில் பேசிய வைகோ, சங்கரன்கோவில் தொகுதியில் கட்சியின் செல்வாக்கை நிரூபிக்கும் வகையில் தானே வீடு வீடாக சென்று ஓட்டுக் கேட்கப்போவதாக தெரிவித்தார். வைகோவின் இந்த திடீர் அறிவிப்பால் தி.மு.க. வினர் கதிகலங்கிப் போய் உள்ளனர். ஏனெனில் ம.தி.மு.க.வின் இந்த தீவிர முயற்சியால் தி.மு.க. மூன்றாவது இடத்திற்கு தள்ளப்படும் சூழ்நிலை ஏற்பட்டு விடுமோ என்ற அச்சத்தில் அக்கட்சியின் தொண்டர்கள் உள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்