எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பாலசோர், நவ.16 - அணு ஆயுதங்களை சுமந்து கொண்டு 3,000 கி.மீ.தூரம் பாய்ந்து சென்று தாக்கும் அக்னி - 4 ஏவுகணை சோதனை நேற்று வெற்றிகரமாக நடத்தப்பட்டது. உலகில் பல்வேறு நாடுகளும் ஏவுகணை தொழில்நுட்பத்தில் வெற்றி கண்டு வரும் நிலையில் இந்தியாவும் ஏவுகணை உற்பத்தியில் பீடு நடை போட்டு வருகிறது. என்றாலும் சீனா போன்ற நாடுகளுடன் போட்டி போடும் அளவுக்கு இந்தியா தனது ஏவுகணை தொழில் நுட்பத்தை அவ்வப்போது அபிவிருத்தி செய்து வருகிறது. ஏற்கனவே பல்வேறு ரக அக்னி ஏவுகணைகளை தயாரித்து வெற்றி கண்டுள்ள இந்திய விஞ்ஞானிகள் தற்போது புதிய தொழில்நுட்பத்துடன் கூடிய அதி நவீன அக்னி - 4 என்ற ஏவுகணையை தயாரித்துள்ளனர். இந்த அக்னி - 4 ஏவுகணை சோதனை நேற்று ஒரிஸ்ஸா மாநிலம் பாலசோர் அருகில் வங்கக்கடலில் வீலர்ஸ் தீவில் உள்ள ஒருங்கிணைந்த சோதனை தளத்தில் இருந்து வெற்றிகரமாக நடத்தப்பட்டது.
இந்த ஏவுகணை 3000 கி.மீ.தூரம் பறந்து சென்று எதிரியின் இலக்கை துல்லியமாக தாக்கும் வல்லமை கொண்டது.
அணு ஆயுதத்தை சுமந்து சென்று தாக்கும் இந்த ஏவுகணை தரையிலிருந்து தரைக்கே பாய்ந்து சென்று தாக்கும் திறன் கொண்டது. இதன் எடை 17 டன். இதன் நீளம் 20 மீட்டர்.
இந்த அக்னி 4 ஏவுகணை ஒரு மேம்படுத்தப்பட்ட தொழில் நுட்பத்தை கொண்டது. எனவே இந்த ஏவுகணை இனி அக்னி 4 என்று அழைக்கப்படும் என்று இந்திய விஞ்ஞானிகள் கூறினர். நேற்று இந்த ஏவுகணை சர்வதேச கடல் பகுதியில் தயாராக வைக்கப்பட்டிருந்த இலக்கை துல்லியமாக தாக்கி வெற்றி வாகை சூடியது.
சீனாவின் ஏவுகணை தொழில்நுட்பத்திற்கு ஈடு கொடுக்கும் வகையில் இந்த ஏவுகணை அதி நவீன தொழில்நுட்பங்களை கொண்டுள்ளதாக டெல்லியில் உள்ள பாதுகாப்பு துறை அமைச்சக அதிகாரி ஒருவர் கூறினார்.
இந்திய விஞ்ஞானிகளின் இந்த இமாலய வெற்றிக்கு இஸ்ரோ விஞ்ஞானிகள் பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொண்டனர். இதே போல 5,000 கி.மீ. தூரம் சென்று தாக்கும் திறன் கொண்ட அக்னி ஏவுகணையும் விரைவில் சோதிக்கப்படும் என்று மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ஏ.கே.அந்தோணி தெரிவித்தார்.
இந்த ஏவுகணைகள் அனைத்துமே உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டவை என்று பாதுகாப்பு துறை வட்டாரங்கள் கூறியுள்ளன.
சோதனை செய்யப்பட்டு வெற்றி கண்ட ஏவுகணைகள் விரைவில் ராணுவத்தில் இணைக்கப்படும் என்றும் அந்த வட்டாரங்கள் கூறியுள்ளன. அக்னி 1 ஏவுகணை 800 கி.மீட்டர் தூரம் சென்று தாக்கக்கூடிய திறனையும், அக்னி- 2 2500கி.மீட்டர் தொலைவு சென்று தாக்கக்கூடிய திறனையும் பெற்றிருந்தன. தற்போது வெற்றிகரமாக ஏவப்பட்ட அக்னி 4 ஏவுகணை 3000 கி.மீட்டருக்கு அப்பாலும் சென்று தாக்கக்கூடிய வல்லமை படைத்தது. இந்த ஏவுகணையின் மூலம் சீனாவில் உள்ள முக்கிய நகரங்களான பீஜிங் மற்றும் ஷாங்காய் நகரங்களையும் தாக்க முடியும் என்பது குறிப்பிடத் தக்கது. இந்திய விஞ்ஞானிகள் அடுத்ததாக அக்னி 5 என்ற ஏவுகணையை தயாரிக்க உள்ளனர். அணு ஆயுதங்களை தாங்கிச் செல்லக்கூடிய இத்தகைய ஏவுகணைகள் 6000 கி.மீட்டர் தொலைவிற்கும் சென்று தாக்கும் வல்லமை பெற்றவை. இவை கண்டம் விட்டு கண்டம் பாயக்கூடியவையாக இருக்கும் என்றும் பாதுகாப்பு துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
தற்போது வெற்றிகரமாக சோதிக்கப்பட்ட அக்னி 4 ஏவுகணையைப் போன்ற அதி நவீன ஏவுகணைகள் அமெரிக்கா, ரஷ்யா, பிரான்ஸ், சீனா ஆகிய நாடுகளிடம் மட்டுமே இதுவரை இருந்துவந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
சூப்பர் சாஃப்ட் இட்லி2 days 6 hours ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி6 days 5 hours ago |
ரவா பர்பி1 week 2 days ago |
-
கடற்படையின் அடுத்த தளபதியாக தினேஷ் குமார் திரிபாதி நியமனம்
19 Apr 2024புது டெல்லி, கடற்படைத் துணைத் தளபதியாக தற்போது பணியாற்றி வரும் வைஸ் அட்மிரல் தினேஷ் குமார் திரிபாதியை வரும் 30-ம் தேதி முதல் கடற்படையின் அடுத்த தளபதியாக அரசு நியமித்துள
-
ஆர்வமுடன் வாக்களித்த உலகின் குள்ளமான பெண்
19 Apr 2024நாக்பூர், நாக்பூரில் உள்ள வாக்குச்சாவடியில் உலகின் குள்ளமான பெண்மணியான ஜோதி ஆம்ஜி என்பவர் வாக்களித்தார்.
-
மாலத்தீவு முன்னாள் அதிபரின் 11 ஆண்டு சிறை தண்டனை ரத்து: மறுவிசாரணைக்கு நீதிமன்றம் உத்தரவு
19 Apr 2024மாலே, மாலத்தீவு முன்னாள் அதிபரின் 11 ஆண்டு சிறை தண்டனையை ரத்து செய்து உத்தரவிட்ட நீதிமன்றம் இந்த வழக்கில் மறுவிசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.
-
பார்லி. தேர்தல்: சொந்த கிராமத்தில் வாக்களித்த எடப்பாடி பழனிசாமி
19 Apr 2024சேலம், தமிழகம் முழுவதும் நேற்று பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது.
-
சைக்கிள் ஓட்டிச்சென்று நடிகர் விஷால் வாக்களிப்பு
19 Apr 2024சென்னை : நடிகர் விஷால் சைக்கிள் ஓட்டிச்சென்று வாக்களித்தது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
-
புதுச்சேரியில் மோட்டார் சைக்கிளில் சென்று வாக்களித்த முதல்வர் ரங்கசாமி
19 Apr 2024புதுச்சேரி, புதுச்சேரியில் மோட்டார் சைக்கிளில் சென்று தனது வாக்கினை பதிவு செய்தார் அம்மாநில முதல்வர் ரங்காசமி.
-
பார்லி. தேர்தல்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாக்களித்தார்
19 Apr 2024சென்னை : தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளில் பாராளுமன்ற தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி நேற்று நடைபெற்றது. இந்த தேர்தலை
-
பார்லி. தேர்தல்: வாக்களிக்க சென்ற 3 பேர் மயங்கி விழுந்து உயிரிழப்பு
19 Apr 2024சென்னை, தமிழகத்தில் நேற்று நடந்த பாராளுமன்ற தேர்தலில் வாக்களிக்க சென்ற 3 பேர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
கர்நாடகாவில் காங்கிரசில் இணைந்த முன்னாள் எம்.எல்.ஏ.-க்கள் 2 பேர்
19 Apr 2024பெங்களூர், கர்நாடகா மாநிலத்தின் முன்னாள் பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் இருவர் மலிகாய்யா கட்டேதார், சாரதா மோகன் ஷெட்டி ஆகியோர் நேற்று காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர்.
-
ம.பி.யில் காங்கிரசின் நகுல் நாத்துக்கு வாக்களிக்க கோரிய பா.ஜ.க. மேயர்
19 Apr 2024சிந்த்வாரா, மத்தியப் பிரதேசத்தின் நட்சத்திர தொகுதியான சிந்த்வாராவில் நேற்று முதல்கட்ட வாக்குப்பதிவு நடந்தது.
-
அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்: கட்காரி
19 Apr 2024நாக்பூர், நாக்பூரில் வாக்களித்த பின், தேர்தலில் நான் நிச்சயம் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்தார்.
-
பாராளுமன்ற தேர்தல்: ஜனநாயக கடமையாற்றிய திரை பிரபலங்கள்
19 Apr 2024சென்னை : தமிழகத்தில் நேற்று நடந்த பாராளுமன்ற தேர்தலில் திரை பிரபலங்கள் பலரும் தங்களது ஜனநாயக கடமையையாற்றினர்.
-
ஸ்காட்லாந்தில் அருவியில் குளித்த இந்திய மாணவர்கள் 2 பேர் தவறி விழுந்து உயிரிழப்பு
19 Apr 2024லண்டன், ஸ்காட்லாந்தில் அருவியில் குளித்து மகிழ்ந்த 2 இந்திய மாணவர்கள் தவறி விழுந்து உயிரிழந்தனர்.
-
இ.வி.எம். குறித்த அச்சம் தேவையில்லை: வாக்குகள் பத்திரமாகவும், பாதுகாப்பாகவும் இருக்கும் : தலைமை தேர்தல் ஆணையர் உறுதி
19 Apr 2024புதுடெல்லி : மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்த அச்சங்களை மறுத்துள்ள இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், “மக்களின் வாக்குகள் பத்திரமாகவும் பாதுகாப்பாகவும
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 19-04-2024.
19 Apr 2024 -
நீங்கள் நினைப்பது போல இந்தியாவிற்கு வெற்றிதான் : வாக்களித்தப்பின் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேட்டி
19 Apr 2024சென்னை : நீங்கள் நினைப்பது போல இந்தியாவிற்கு வெற்றி தான் என வாக்களித்த பின் முதல்வர் மு.க.ஸ்டாலின் என தெரிவித்தார்.
-
மதுரை சித்திரை திருவிழா: வைகை அணையில் இருந்து தண்ணீர் திறப்பு
19 Apr 2024தேனி : மதுரை சித்திரை திருவிழாவையொட்டி கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்திற்காக வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
-
பாராளுமன்ற தேர்தல்: காலையிலேயே வாக்களித்த தமிழக அரசியல் தலைவர்கள்
19 Apr 2024சென்னை, வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன்பே அரசியல் கட்சி தலைவர்கள் காத்திருந்து முதல் ஆளாக தங்களது ஜனநாயக கடமையை ஆற்றினர்.
-
102 பார்லி. தொகுதிகளில் முதல் கட்ட வாக்குப்பதிவு நிறைவு: தமிழகம், புதுச்சேரியில் விறுவிறு வாக்குப்பதிவு : புதுச்சேரியில் 72.84 சதவீதம் - தமிழகத்தில் 66 சதவீதம் வாக்குப்பதிவு
19 Apr 2024சென்னை : தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது.
7 கட்டங்களாக...
-
சென்னையில் வாக்களித்த கவர்னர் ஆர்.என்.ரவி மகிழ்ச்சி
19 Apr 2024சென்னை : ஜனநாயகத்தின் மிகப் பெரிய திருவிழா இது.
-
இன்று திக் விஜயம்: மதுரையில் நாளை மீனாட்சி, சுந்தரேசுவரர் திருக்கல்யாணம்
19 Apr 2024மதுரை : சித்திரை திருவிழாவையொட்டி மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் இன்று திக் விஜயம் நடக்கிறது.
-
காந்திநகரில் அமித்ஷா வேட்புமனு தாக்கல்
19 Apr 2024காந்திநகர், குஜராத் மாநிலத்தில் உள்ள 26 தொகுதிகளுக்கும் 3-வது கட்டமாக மே 7-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 12-ம் தேதி தொடங்கியது.
-
புறக்கணிப்பை கைவிட்டு வாக்களித்த வேங்கைவயல் மக்கள்
19 Apr 2024புதுக்கோட்டை : புதுக்கோட்டை அருகே உள்ள வேங்கைவயல் கிராமத்தைச் சேர்ந்த மக்கள் புறக்கணிக்கும் முடிவைக் கைவிட்டு நேற்று வாக்களித்தனர்.
-
ஐ.நா.வில் பாலஸ்தீனத்தை உறுப்பினராக்கும் தீர்மானம்: வீட்டோ அதிகாரம் மூலம் முறியடித்த அமெரிக்கா
19 Apr 2024நியூயார்க், 193 உறுப்பினர்களைக் கொண்ட ஐ.நா.
-
ராமநாதபுரம் தொகுதியில் எனது வெற்றிவாய்ப்பு பிரகாசமாக உள்ளது : வாக்களித்த பிறகு ஓ.பன்னீர்செல்வம் பேட்டி
19 Apr 2024தேனி : கருத்துக்கணிப்புகள் அனைத்தும் பொய்யாகும் என்று தெரிவித்த ஓ.பன்னீர்செல்வம், கருத்துக்கணிப்புகள் அனைத்தும் பொய்யாகும் என்றும் அவர் தெரிவித்தார்.