முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உ.பி. மாநிலத்தை நான்காக பிரிக்கும் திட்டத்திற்கு ஒப்புதல்

புதன்கிழமை, 16 நவம்பர் 2011      இந்தியா
Image Unavailable

 

லக்னோ, நவ.16 - நிர்வாக வசதிக்காகவும், வளர்ச்சி நோக்கத்திற்காகவும் உத்தரபிரதேச மாநிலத்தை நான்கு பகுதிகளாக பிரிக்கும் உத்தேச திட்டத்திற்கு அம்மாநில முதல்வர் மாயாவதி நேற்று ஒப்புதல் வழங்கியுள்ளார். நிர்வாக வசதிக்காக ஏற்கனவே சில பெரிய மாநிலங்கள் சிறிய மாநிலங்களாக பிரிக்கப்பட்டுள்ளன. ஜார்க்கண்ட், சட்டீஸ்கர், உத்ராஞ்சல் போன்ற மாநிலங்கள் எல்லாம் புதிதாக உருவாக்கப்பட்டவைதான். தற்போது நாட்டின் மிகப்பெரிய மாநிலமாக இருப்பது உத்தரபிரதேச மாநிலம். இம்மாநிலத்தை நிர்வாக மற்றும் வளர்ச்சி நோக்கங்களுக்காக நான்கு பகுதிகளாக பிரிக்க முதல்வர் மாயாவதி தலைமையிலான பகுஜன் சாமாஜ் அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி பூர்வாஞ்சல், குந்தல்காண்ட், ஆவத்பிரதேஷ், பஸ்சின்பிரதேஷ் என்று உத்தரபிரதேசத்தை நான்கு பகுதிகளாகப் பிரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. 

இந்த உத்தேச திட்டத்திற்கான ஒப்புதலுக்கு முதல்வர் மாயாமதி தனது ஒப்புதலை வழங்கியுள்ளார். இந்த உத்தேச திட்டம் மாநில சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு தீர்மானமாக கொண்டுவந்து நிறைவேற்றப்படும் என்று முதல்வர் மாயாவதி கூறியுள்ளார். இந்த உத்தேச திட்டம் வருகிற குளிர்கால சட்டமன்ற கூட்டத் தொடரிலேயே தீர்மானமாக கொண்டுவரப்படும் என்றும் அவர் கூறினார். உத்தரபிரதேச சட்டமன்ற குளிர்கால கூட்டத் தொடர் இம்மாதம் 21 ம் தேதி கூடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்