முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அ.தி.மு.க. நிர்வாகிகள் மரணம் - இரங்கல்

செவ்வாய்க்கிழமை, 15 நவம்பர் 2011      அரசியல்
Image Unavailable

 

சென்னை, நவ.16 - தூத்துக்குடி, விருதுநகர், திருவள்ளூர் மாவட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள் மறைவுக்கு முதல்வர் ஜெயலலிதா இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதா விடுத்துள்ள இரங்கல் செய்தி வருமாறு:- தூத்துக்குடி மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற துணை செயலாளர் செ.குலசேகர பாண்டின், திருவள்ளூர் தெற்கு மாவட்டம், மதுரவாயல் தொகுதி அ.தி.மு.க. இணைச் செயலாளர் எஸ்.ராமு, விருதுநகர் மாவட்டம், வெம்பக்கோட்டை ஒன்றிய அ.தி.மு.க. முன்னாள் செயலாளரும், நதிக்குடி ஊராட்சிமன்ற தலைவரும்,கிளை அ.தி.மு.க. செயலாளருமான எம்.குருசாமி ஆகியோர் மரணமடைந்து விட்டனர் என்ற செய்தி கேட்டு மிகுந்த வருத்தமுற்றேன்.   

குலசேகர பாண்டியன், ராமு மற்றும் குருசாமி ஆகியோரை இழந்து வாடும் அவர்களது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதுடன், மரணமடைந்தோர்களது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் அமைதி பெற எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன். 

இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா தனது இரங்கல் செய்தியில் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்