தென்கிழக்கு நிலக்கரி வயல்கள் நிறுவனத்தில் உள்ள 'முழு நேர ஆலோசகர்' பணிக்கு காலியிடம் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சென்னை, நவ.17 - 7 புதிய போக்குவரத்து காவல் நிலையங்கள் அமைக்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இதுத்தொடர்பாக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:- சாலைப் போக்குவரத்தை முறைப்படுத்தும் வகையிலும், சாலை விபத்தினால் ஏற்படும் உயிரிழப்புகளை தடுக்கும் வகையிலும், சாலை விதிகள் கடைபிடிக்கப்படுவதை உறுதி செய்தல் மற்றும் சாலை விதிமுறைகளை கடைபிடிப்பதால் ஏற்படும் பயன்களையும், அவற்றை மீறினால் நேரும் இழப்புகளையும் மக்களிடையே எடுத்துச் செல்லுதல்; சாலை விதிகள் கடைபிடிப்பது குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துதல் ஆகியவற்றை செயல்படுத்துவதற்காக காவல்துறையில் தனியே போக்குவரத்து பிரிவு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
தற்போது தமிழகம் முழுவதும் மாநகரங்கள் மற்றும் மாவட்ட தலைநகரங்களில் 206 போக்குவரத்து காவல் நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. தமிழ்நாட்டில் தற்போது பெருகி வரும் வாகனங்களின் எண்ணிக்கையையும், மக்கள் பெருக்கத்தையும், அதனால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலையும் கருத்தில் கொண்டு, போக்குவரத்து தொடர்பான காவல் பணிகளை மேலும் செம்மையாக செய்வதற்கு ஏற்ற வகையில் போதிய காவல் நிலையங்ளை முக்கிய நகர் பகுதிகளில் ஏற்படுத்திட தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
இதன்படி, காஞ்சிபுரம் மாவட்டம் மாமல்லபுரத்தில் ஒரு போக்குவரத்து காவல் நிலையமும், திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்ண்டியில் ஒரு போக்குவரத்து காவல் நிலையமும், விருதுநகர் மாவட்டத்தில் திருத்தங்கலில் ஒரு போக்குவரத்து காவல் நிலையமும், தேனி மாவட்டம் போடிநாயக்கனூரில் ஒரு போக்குவரத்து காவல் நிலையமும், கன்னியாகுமரி மாவட்டம் பத்மநாபபுரத்தில் ஒரு போக்குவரத்து காவல் நிலையமும், ஆக மொத்தம் 5 புதிய போக்குவரத்து காவல் நிலையங்கள் அமைத்திட தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா ஆணையிட்டுள்ளார்.
இக்காவல் நிலையங்களில் பணிபுரிவதற்காக 5 ஆய்வாளர்கள், 10 சார் ஆய்வாளர்கள், 15 தலைமை காவலர்கள், 15 கிரேடுஐ காவலர்கள், 30 கிரேடுஐஐ காவலர்கள், 5 கிரேடுஐஐ ஒட்டுநர்கள், ஆக மொத்தம் 80 புதிய பணியிடங்களை உருவாக்கிடவும் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இதனால் அரசுக்கு ஆண்டொன்றுக்கு 2 கோடியே 71 லட்சம் ரூபாய் செலவு ஏற்படும்.
சென்னையில் உள்ள வளசரவாக்கம் பகுதி தற்போது விருகம்பாக்கம் போக்குவரத்து காவல் நிலைய கட்டுப்பாட்டு எல்லைக்குள் அமைந்துள்ளது. வளசரவாக்கம் பகுதியில் அடுக்குமாடி குடியிருப்புகள், கல்வி நிலையங்கள், வியாபார நிறுவனங்கள், கடைகள், போன்றவை பெருகி உள்ள காரணத்தால், இந்தப் பகுதியில் வாகனப் போக்குவரத்து அதிக அளவில் உள்ளது. இதனைக் கருத்தில் கொண்டு தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா வளசரவாக்கம் பகுதிக்கென தனியே ஒரு போக்குவரத்து காவல் நிலையத்தினை ஏற்படுத்த ஆணையிட்டுள்ளார்.
மேலும், பழைய மகாபலிபுரம் சாலையை ஞஙத) ஒட்டியுள்ள செம்மஞ்சேரி பகுதியில், பல தொழில்நுட்ப நிறுவனங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அடுக்குமாடி குடியிருப்புகள், கல்வி நிறுவனங்கள், விடுதிகள் மற்றும் உணவகங்களின் எண்ணிக்கை வெகுவாக உயர்ந்துள்ளது. இதன் காரணமாக, இந்தப் பகுதியில் போக்குவரத்து பல்கிப் பெருகி உள்ளது. இதனால், போக்குவரத்து காவல் பணிகளை துரைப்பாக்கம் போக்குவரத்து காவல் நிலையத்தால், செவ்வனே செய்ய இயலவில்லை. இதனை அறிந்த தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா செம்மஞ்சேரி பகுதிக்கென ஒரு புதிய போக்குவரத்து காவல் நிலையத்தை ஏற்படுத்த உத்திரவிட்டுள்ளார்.
இக்காவல் நிலையங்களில் பணிபுரிவதற்காக, 2 ஆய்வாளர்கள், 4 சார் ஆய்வாளர்கள். 6 தலைமை காவலர்கள், 6 கிரேடுஐ காவலர்கள், 12 கிரேடுஐஐ காவலர்கள், 2 கிரேடுஐஐ ஒட்டுநர்கள், ஆக மொத்தம் 32 புதிய பணியிடங்களை உருவாக்கிடவும் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்கள் உத்தரவிட்டுள்ளார்கள். இதற்காக அரசுக்கு ஆண்டொன்றுக்கு 1 கோடியே 5 லட்சத்து 9 ஆயிரம் ரூபாய் தொடர் செலவினமும், 1 லட்சத்து 88 ஆயிரத்து 600 ரூபாய் தொடரா செலவினமும் கூடுதலாக ஏற்படும்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
முட்டை வறுவல்![]() 1 day 6 hours ago |
கருவேப்பிலை குழம்பு.![]() 4 days 2 hours ago |
முருங்கைப்பூ பாயாசம்.![]() 1 week 1 day ago |
-
டெல்டா மாவட்ட பயிர் சேதங்களை பார்வையிட அமைச்சர்கள் குழு: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
04 Feb 2023டெல்டா பகுதி மாவட்டங்களில் பயிர் சேதங்களைப் பார்வையிட அமைச்சர்கள் குழு அனுப்பி வைக்கப்படுகிறது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
-
வாணி ஜெயராம் இனிமையான குரலால் நினைவுகூரப்படுவார்: பிரதமர் மோடி
04 Feb 2023வாணி ஜெயராம் தனது இனிமையான குரலால் நினைவுகூரப்படுவார் என பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
-
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட்: ஸ்ரேயஸ் அய்யர் இடத்தில் இவரை களம் இறக்குங்கள்: தினேஷ் கார்த்திக்
04 Feb 20234 டெஸ்ட் மற்றும் 3 ஒரு நாள் போட்டிகளில் விளையாடுவதற்காக ஆஸ்திரேலிய அணி இந்தியா வந்துள்ளது.
-
அப்ரிடியின் மகளை மணந்தார் பாக். வேகப்பந்து வீச்சாளர் ஷாகீன்ஷா அப்ரிடி
04 Feb 2023பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து வீரர்களில் ஒருவர் ஷாகீன் ஷா அப்ரிடி.
-
பிக் பாஷ் லீக் போட்டி: பிரிஸ்பேனை வீழ்த்தி 5வது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றிய பெர்த் ஸ்கார்ச்சர்ஸ்பெர்த்,
04 Feb 2023இந்தியாவில் நடைபெற்று வரும் ஐபிஎல் தொடர் போல் பல்வேறு நாடுகளி 20 ஓவர் தொடர்கள் நடைபெற்று வருகின்றன.
-
இந்திய அணியின் பேட்டிங் முதுகெலும்பு இவர் தான் - ரவிச்சந்திரன் அஷ்வின்
04 Feb 2023இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி 4 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடுகிறது.
-
ரஞ்சி டிராபி: பஞ்சாபை வீழ்த்தியது சவுராஷ்டிரா - அரையிறுதியில் கர்நாடக அணியுடன் மோதல்
04 Feb 2023ரஞ்சி கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. விறுவிறுப்பாக நடந்து வரும் இந்த தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.
-
சுப்ரீம் கோர்ட்டில் 5 புதிய நீதிபதிகள் நியமனம் கொலிஜியம் பரிந்துரைக்கு மத்திய அரசு ஒப்புதல்
04 Feb 2023சுப்ரீம் கோர்ட்டில் 5 புதிய நீதிபதிகள் நியமனத்துக்கு கொலிஜியம் பரிந்துரைத்துள்ளதற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம்-05-02-2023
05 Feb 2023 -
பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஷ் முஷாரப் காலமானார்
05 Feb 2023இஸ்லமபாத் : பாகிஸ்தானின் முன்னாள் அதிபர் பர்வேஷ் முஷாரப் காலமானார். அவருக்கு வயது 79.
-
இன்று முதல் 9-ம் தேதி வரை தமிழகத்தில் வறண்ட வானிலை : ஆய்வு மையம் தகவல்
05 Feb 2023சென்னை : கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில் இன்று முதல் 9-ம் தேதி வரை வறண்ட வானிலை நிலவக் கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
சீனாவுடன் தொடர்புடைய 138 சூதாட்ட செயலிகளுக்கு தடை: மத்திய அரசு அறிவிப்பு
05 Feb 2023புதுடெல்லி : சீனாவுடன் தொடர்புடைய 138 சூதாட்ட செயலிகள் மற்றும் 94 கடன் வழங்கும் செயலிகளை தடை செய்யும் பணியை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது.
-
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்: மகாபாரத கிருஷ்ணரோடு ஸ்டாலினை ஒப்பிட்டு கே.எஸ்.அழகிரி கூறிய உவமை
05 Feb 2023கும்பகோணம் : முதல்வர் மு.க.ஸ்டாலின் மகாபாரதத்தில் கிருஷ்ணர் தேரை ஓட்டி, மாபெரும் வெற்றியை போர்க்களத்தில் கொடுத்தது போல், அவர் எங்களுக்குக் கொடுத்து கொண்டிருக்கின்றார் எ
-
ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ராக்கெட் மார்ச்சில் விண்ணில் செலுத்தப்படும் : எலான் மஸ்க் தகவல்
05 Feb 2023வாஷிங்டன் : எலோன் மஸ்கின் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனமானது ஸ்டார்ஷிப் என்ற ராக்கெட் அமைப்பை உருவாக்கி சோதித்து வருகிறது.
-
உளவு பலூனை சுட்டு வீழ்த்தியது அமெரிக்கா : சீனா கண்டனம்
05 Feb 2023வாஷிங்டன் : அட்லாண்டிக் பெருங்கடலின் மீது பறந்த சீன உளவு பலூனை அமெரிக்கா சுட்டு வீழ்த்தியது. இதற்கு சீனா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
-
நாட்டில் புதிதாக 113 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
05 Feb 2023புதுடெல்லி : இந்தியாவில் புதிதாக 113 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறி உள்ளது.
-
ராணுவம் பற்றி அவதூறு பரப்பினால் 5 ஆண்டு சிறை : பாகிஸ்தான் அரசு அறிவிப்பு
05 Feb 2023இஸ்லாமாபாத் : ராணுவம் பற்றி அவதூறு பரப்பினால் 5 ஆண்டு ஜெயில் தண்டனை விதிக்கப்படும் என்று பாகிஸ்தான் அரசு அறிவித்துள்ளது.
-
அக்னிபாத் வீரர் பணியிடங்களுக்கு இனிமேல் முதலில் நுழைவுத்தேர்வு : ராணுவ வட்டாரங்கள் தகவல்
05 Feb 2023புதுடெல்லி : அக்னிபாத் வீரர் பணியிடங்களுக்கு இனி மேல் முதலில் நுழைவுத் தேர்வு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
-
குஜராத்தின் மோா்பி பால விபத்து: 9 பேரின் ஜாமீன் மனு நிராகரிப்பு
05 Feb 2023காந்திநகர் : குஜராத்தின் மோர்பியில் நிகழ்ந்த பால விபத்தில் கைதான 9 பேரின் ஜாமின் மனுக்களை கோர்ட் நிராகரித்து விட்டது.
-
22 சதவீதம் வரை ஈரப்பதம் உள்ள நெல்லை விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்ய அனுமதிக்க வேண்டும் : பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்
05 Feb 2023சென்னை : காவிரி டெல்டா பகுதிகளில் அறுவடைக்கு தயாரான நிலையில் இருந்த சம்பா பயிர்கள் பருவம் தவறிப் பெய்த மழையின் காரணமாக நீரில் மூழ்கியுள்ள காரணத்தால், நெல் கொள்முதல் வித
-
கர்நாடகாவில் ஹெலிகாப்டர் உற்பத்தி தொழிற்சாலை: பிரதமர் மோடி இன்று திறந்து வைக்கிறார்
05 Feb 2023பெங்களூரு : கர்நாடகாவிற்கு இன்று வருகை தரும் பிரதமர் மோடி துமகூருவில் எச்.ஏ.எல்.
-
5 ஆண்டுகளில் 5 லட்சம் வேலைவாய்ப்புகள் : மேகாலயா முதல்வர் தேர்தல் வாக்குறுதி
05 Feb 2023ஷில்லாங் : தேசிய மக்கள் கட்சி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அடுத்த ஐந்து ஆண்டுகளில் 5 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்று மேகாலயா முதல்வர் வாக்குறுதி அளித்துள்ளார
-
பாகிஸ்தானில் மீண்டும் குண்டு வெடிப்பு சம்பவம்
05 Feb 2023இஸ்லாபாத் : பாகிஸ்தானில் உள்ள குவெட்டா நகரில் மீண்டும் ஒரு குண்டு வெடிப்பு சம்பவம் நடந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
-
சேலை வழங்கும் நிகழ்வில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு தலா ரூ. 10 லட்சம் வழங்க எடப்பாடி வலியுறுத்தல்
05 Feb 2023சென்னை : வாணியம்பாடியில் சேலை வழங்கும் நிகழ்வில் உயிரிழந்த பெண்களின் குடும்பத்தாருக்கு தலா ரூ.
-
இமாச்சலில் திடீர் நிலச்சரிவு: பாலம் இடிந்து விழுந்ததால் போக்குவரத்து நிறுத்தம்
05 Feb 2023சம்பா : இமாச்சலப் பிரதேசத்தின் சம்பாவில் ஏற்பட்ட நிலச்சரிவால் பாலம் இடிந்து போக்குவரத்து நிறுத்தப்பட்டது.