முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கடலில் மூழ்கி இறந்த கார்த்திக் குடும்பத்திற்கு நிதியுதவி

புதன்கிழமை, 16 நவம்பர் 2011      தமிழகம்
Image Unavailable

சென்னை, நவ.17 - கடலில் மூழ்கி இறந்த கார்த்திக் குடும்பத்திற்கு ரூ.1 லட்சம் நிதியுதவி வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து முதல்வர் ஜெயலலிதா விடுத்துள்ள அறிக்கை வருமாறு:- திருவண்ணாமலை மாவட்டம், செய்யார் வட்டம், தூசி அனுமந்தப்பேட்டை கிராமத்தைச் சேர்ந்த கருணாநகரன் என்பவரின் மகன் கார்த்திக் 13.11.11 அன்று மாமல்லபுரம் கடலில் குளித்து கொண்டிருக்கும்போது நீரில் மூழ்கி உயிரிழந்தார் என்ற செய்தியை அறிந்து நான் மிகவும் துயறுற்றேன்.
இந்த விபத்தில் அகால மரணமடைந்த கார்த்திக் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த துயரச் சம்பவத்தில் காலமான கார்த்திக் குடும்பத்திற்கு முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து ஒரு லட்சம் ரூபாய் வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன்.
இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்