முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நில மோசடி வழக்கில் எடியூரப்பாவுக்கு முன்ஜாமீன்

வியாழக்கிழமை, 17 நவம்பர் 2011      ஊழல்
Image Unavailable

பெங்களூரு, நவ.17 -நில மோசடி புகார் தொடர்பான இரண்டு புகார்கள் குறித்த வழக்கில் எடியூரப்பாவுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் கர்நாடக ஐகோர்ட்டு நேற்று முன்ஜாமீன் வழங்கியது. அரசு நிலத்தை குறைந்த விலைக்கு விற்று மோசடி செய்ததாக கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பா, அவரது மகன்கள் ராகவேந்திரா, விஜயேந்திரா மற்றும் மருமகன் சோகன்குமார் ஆகியோர் மீது லோக் அயுக்தா நீதிமன்றத்தில் புதிதாக இரண்டு புகார் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இந்த வழக்கில் தாங்கள் கைது செய்யப்படலாம் என்ற அச்சத்தில் இவர்கள் நான்குபேரும் தங்களுக்கு முன்ஜாமீன் வழங்க வேண்டும் என்று கோரி கர்நாடக ஐகோர்ட்டில் மனுத் தாக்கல் செய்திருந்தனர்.
இந்த மனுக்கள் மீதான விசாரணை இன்று நடைபெற்றது. மனுக்களை விசாரணை செய்த ஐகோர்ட்டு நீதிபதி எச்.பில்லப்பா, இவர்கள் 4 பேருக்கும் முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். ரூ. 2 லட்சம் சொந்த ஜாமீனிலும், அதே தொகைக்கு வேறு இரு நபர்களின் உத்தரவாதத்தின் பேரிலும் இவர்களுக்கு முன்ஜாமீன் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார். எடியூரப்பா மீது ஏற்கனவே 5 வழக்குகள் உள்ளன. இந்த வழக்குகளில் அவருக்கு ஜாமீன் கிடைத்துள்ளது. இந்த நிலையில் மேலும் இரண்டு வழக்குகளில் அவருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் தற்போது முன்ஜாமீன் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago