எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புதுடெல்லி,மார்ச்.10 - தமிழக சட்டசபை தேர்தலின்போது பண பலத்தை கொண்டும் ரவுடிகளை ஏவி விட்டும் வன்முறையில் ஈடுபட தி.மு.க. அரசு திட்டமிட்டிருப்பதாக தேர்தல் கமிஷனிடம் அ.தி.மு.க. புகார் மனு கொடுத்துள்ளது. தமிழகம், புதுவை,கேரளம், மேற்குவங்காளம், அசாம் ஆகிய 5 மாநிலங்களின் சட்டசபை தேர்தல் மே மாதத்துடன் முடிவடைகிறது. இதனையொட்டி இந்த 5 மாநிலங்களிலும் தேர்தல் தேதியை தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது. தமிழகம், புதுவை, கேரளம் ஆகிய 3 மாநிலங்களில் ஒரே கட்டமாக வருகின்ற ஏப்ரல் மாதம் 13-ம் தேதி தேர்தல் நடக்கிறது. அசாமில் 2 கட்டமாகவும் மேற்குவங்காளத்தில் 6 கட்டமாகவும் தேர்தல் நடக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்படும் முன்னரே தேர்தலுக்கான ஆயத்த பணியில் அரசியல் கட்சிகள் ஈடுபடத்துவங்கிவிட்டன. அ.தி.மு.க. கூட்டணியில் விஜயகாந்த் தலைமையிலான தே.மு.தி.க. சேர்ந்துள்ளது. அதேசமயத்தில் தி.மு.க.வுக்கும் காங்கிரசுக்கும் கூட்டணி ஏற்படாமல் போய்விட்டது. பின்னர் தி.மு.க.வினர் டெல்லி சென்று காங்கிரஸ் கட்சியிடம் சரணாகதி அடைந்த பின்னர் தி.மு.க. வுடன் காங்கிரஸ் கூட்டணி வைத்துள்ளது. இந்த கூட்டணியை தமிழக மக்கள் விரும்பவில்லை. இது ஒருபுறம் இப்படி இருக்க மறுபுறத்தில் முதலில் தேர்தல் நடக்கும் தமிழகம் உள்பட 3 மாநிலங்களில் தேர்தல் பாதுகாப்பு ஏற்பாடுகளை ஒரு மாத காலத்திற்கு முன்பாகவே தேர்தல் கமிஷன் தொடங்கிவிட்டது. தமிழகத்திற்கு துணை ராணுத்தினர்களும் மத்திய படையினரும் அனுப்பப்பட்டு வருகிறார்கள். வாக்காளர்களுக்காக காரில் பணம் கொண்டு செல்கிறார்களா என்பதையெல்லாம் துணை ராணுவத்தினர் சோதித்து வருகிறார்கள். அதாவது தேர்தலில் பணம் விளையாடாமல் இருக்க தேர்தல் கமிஷன் கிடுக்கிப்பிடி போட்டு வருகிறது. தமிழ்நாட்டில் பதட்டம் நிறைந்த பகுதிகளுக்கு பாதுகாப்பு படையினர் அனுப்பப்பட்டு வருகிறார்கள்.
இந்தநிலையில் தமிழகம், கேரளம், புதுவை, அசாம், மேற்குவங்காளம் ஆகிய 5 மாநிலங்களில் தேர்தல் ஆயத்த பணி குறித்த ஆய்வுக்கூட்டம் நேற்று தலைமை தேர்தல் ஆணையர் எஸ்.ஒய் குரேஷி தலைமையில் டெல்லியில் நடந்தது. கூட்டத்தில் தேர்தல் கமிஷனர்கள் கலந்துகொண்டனர். மேலும் தேர்தல் நடக்கும் 5 மாநிலங்களை சேர்ந்த முக்கிய அரசியல் கட்சி தலைவர்கள் கலந்துகொண்டனர். தமிழகத்தில் இருந்து அ.தி.மு.க. சார்பாக நாடாளுமன்ற உறுப்பினர் செம்மலை கலந்துகொண்டார். கூட்டத்தின்போது 5 மாநிலங்களிலும் தேர்தல் ஏற்பாடுகள் குறித்து விரிவான முறையில் ஆய்வு செய்யப்பட்டது. மேலும் தேர்தல் பாதுகாப்பை வலுப்படுத்த வேண்டும் என்றும் அரசியல் கட்சிகள் குறிப்பாக அ.தி.மு.க. போன்ற கட்சிகள் வலியுறுத்தின.
அ.தி.மு.க. சார்பாக தேர்தல் கமிஷனிடம் ஒரு புகார் மனுவும் அளிக்கப்பட்டது. அந்த புகார் மனுவில் கூறப்பட்டிருப்பதாவது:-
தமிழகத்தில் தி.மு.க. மைனாரிட்டி ஆட்சி இந்த தேர்தலுக்கு பின்னர் நீடிக்காது. அதை கருத்தில் கொண்டு தி.மு.க.வினர் வன்முறையில் ஈடுபட திட்டமிட்டுள்ளனர். தி.மு.க. வினர் முறைகேடாக கோடிக்கணக்கில் பணத்தை சேர்த்து வைத்திருப்பதாக தெரிகிறது. இந்த பணத்தை பயன்படுத்தியும் அதிகார துஷ்பிரயோகம் செய்யவும் தி.மு.க. வினர் சதித்திட்டம் தீட்டியுள்ளனர். மேலும் தேர்தலின்போது ரவுடிகளின் துணையுடன் கலவரத்தில் ஈடுபட செய்யவும் திட்டமிட்டுள்ளனர். கலவரம் நடந்தால் பெண்கள், அப்பாவி மக்கள் பயந்துகொண்டு போய்விடுவார்கள். அதை பயன்படுத்தி கள்ள ஓட்டு போடவும் தி.மு.க. வினர் கருதியுள்ளதாக தெரிகிறது. இதை தடுக்க தேர்தல் கமிஷன் தமிழகத்தில் தேவையான இடங்கள், பதட்டம் நிறைந்த பகுதிகளில் பாதுகாப்பை பலப்படுத்தவும் தேர்தல் நியாயமாகவும் நேர்மையாகவும் அமைதியாகவும் நடக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தேர்தலின் போது வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதையும் தேர்தல் கமிஷன் தடுத்து நிறுத்த வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
கூட்டத்திற்கு பின்னர் செம்மலை நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில் தமிழகத்தில் தேர்தலின்போது தி.மு.க.வினர் பணத்தை நடமாட விட்டும் ரவுகளை ஏவியும் அதிகார துஷ்பிரயோகம் செய்தும் கலவரத்தில் ஈடுபட திட்டமிட்டுள்ளனர் என்று தேர்தல் கமிஷனிடம் புகார் செய்துள்ளோம் என்றார். இதை தடுக்க தமிழகத்திற்கு கூடுதல் துணை ராணுவம்,மத்தியப்படையை அனுப்ப வேண்டும் என்றார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஸ்வீட் உருளைக்கிழங்கு கேக்1 day 12 hours ago |
பெப்பர் சிக்கன்5 days 12 hours ago |
ஹனி பட்டர் சிக்கன்1 week 1 day ago |
-
கெஜ்ரிவால் விவகாரத்தை தொடர்ந்து காங்கிரஸ் வங்கி கணக்கு குறித்து கருத்து தெரிவித்த அமெரிக்கா
28 Mar 2024வாஷிங்டன், டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் விவகாரத்தை தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்கு முடக்கம் குறித்து அமெரிக்கா கருத்து தெரிவித்துள்ளது.
-
முக்கிய வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்பு: தமிழகத்தில் வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை முடிந்தது: இறுதி வேட்பாளர்கள் பட்டியல் நாளை வெளியீடு
28 Mar 2024சென்னை, தமிழ்நாடு முழுவதும் வேட்புமனு தாக்கல் செய்த முக்கிய தலைவர்கள் அனைவரின் வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டுள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 28-03-2024.
28 Mar 2024 -
தி.மு.க., காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று தர்மபுரியில் பிரச்சாரம்
28 Mar 2024தர்மபுரி, தர்மபுரி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் தி.மு.க.
-
குன்றத்தில் வெகுவிமர்சையாக நடந்த சுப்பிரமணிய சுவாமி - தெய்வானை அம்மன் திருக்கல்யாண வைபவம்
28 Mar 2024மதுரை, மீனாட்சியம்மன், சுந்தரேஸ்வரர் பிரியாவிடை முன்னிலையில் திருப்பரங்குன்றத்தில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை அம்மன் திருக்கல்யாண வைபவம் வெகுவிமர்சையாக நேற்று நடைபெற்
-
தாய்லாந்தில் ஓரின சேர்க்கையாளர் திருமணத்துக்கு சட்டப்பூர்வ அனுமதி
28 Mar 2024பாங்காங்க், ஓரின சேர்க்கையாளர் திருமணத்திற்கான சட்ட மசோதா தாய்லாந்து பாராளுமன்றத்தில் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது.
-
தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின், ராகுல் காந்தி இணைந்து பிரச்சாரம்: செல்வப்பெருந்தகை தகவல்
28 Mar 2024சென்னை, முதல்வர் மு.க.ஸ்டாலினும், ராகுல் காந்தியும் ஒன்றாக சேர்ந்து தமிழகத்தில் இண்டியா கூட்டணி வேட்பாளர்களுக்கு சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வாக்கு சேகரிக்க
-
5 நாள் பயணமாக கவர்னர் ரவி நாளை ஊட்டி செல்கிறார்
28 Mar 2024ஊட்டி, 5 நாள் பயணமாக கவர்னர் ஆர்.என். ரவி நாளை ஊட்டிக்கு புறப்பட்டு செல்கிறார்.
-
ஏப். 4-ல் டெல்லியில் கூடுகிறது காவிரி மேலாண்மை ஆணையம்
28 Mar 2024புது டெல்லி, காவிரி மேலாண்மை ஆணையத்தின் 29-வது கூட்டம் ஏப்ரல் 4-ம் தேதி டெல்லியில் நடைபெற உள்ளது.
-
வேட்புமனு தாக்கல் செய்ய ஏப். 3-ல் கேரளா செல்கிறார் ராகுல் காந்தி
28 Mar 2024திருவனந்தபுரம், ஏப்ரல் 3-ம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்ய கேரளா செல்கிறார். அதை தொடர்ந்து கல்பெட்டா கலெக்டர் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்கிறார்.
-
ஏப்.4-ல் மத்திய அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகை: சென்னை, மதுரை, சிவகங்கையில் பிரச்சாரம்
28 Mar 2024சென்னை, தேர்தல் பிரச்சாரத்துக்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஏப்ரல் 4-ம் தேதி தமிழகம் வரவுள்ளார். அவர் மதுரை, சிவகங்கை, சென்னையில் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.
-
2-ம் கட்ட தேர்தல்: 13 மாநிலங்களில் உள்ள 89 மக்களவை தொகுதிகளில் மனு தாக்கல் தொடங்கியது
28 Mar 2024புது டெல்லி, நாடு முழுவதும் பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்படும் நிலையில், இரண்டாவது கட்டமாக ஏப்ரல் 26-ம் தேதி 13 மாநிலங்களில் உள்ள 89 மக்களவை தொகுதிகளில் வாக்க
-
ஈரோடு எம்.பி. கணேசமூர்த்தி மறைவு: முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல்
28 Mar 2024சென்னை, ஈரோடு மக்களவை உறுப்பினர் கணேசமூர்த்தி மறைவுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
-
ஆஸ்திரேலியா ஒப்பந்த பட்டியல்: முக்கிய வீரர்களுக்கு இடமில்லை
28 Mar 2024மெல்போர்ன், ஆஸ்திரேலிய ஆடவர் கிரிக்கெட் அணிக்கு மத்திய ஒப்பந்தப் பட்டியல் வெளியாகியுள்ளது. இதில் பல முக்கிய வீரர்களுக்கு இடமில்லை.
-
ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பி.எஸ். பெயரில் தாக்கலான 6 பேரின் வேட்புமனுவும் ஏற்பு
28 Mar 2024ராமநாதபுரம், பாராளுமன்ற மக்களவைத் தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பன்னீர் செல்வம் எனும் பெயரில் வேட்புமனு தாக்கல் செய்த 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டுள்ளது.
-
கிறிஸ்தவ ஆலயங்களில் இன்று புனித வெள்ளி சிறப்பு வழிபாடு
28 Mar 2024சென்னை, தமிழகம் முழுவதும் கிறிஸ்தவ ஆலயங்களில் இன்று புனித வெள்ளி சிறப்பு வழிபாடு நடத்தப்படுகிறது.
-
அடுத்த தலைமுறைக்கான பயணிகள் விமானத்தை உருவாக்கும் ஜப்பான்
28 Mar 2024டோக்கியோ, ஹைட்ரஜன் எரிபொருள் என்ஜினை பயன்படுத்தி அடுத்த தலைமுறைக்கான பயணிகள் விமானத்தை ஜப்பான் உருவாக்க உள்ளது.
-
கெஜ்ரிவாலை பதவியிலிருந்து நீக்க கோரிய மனு தள்ளுபடி
28 Mar 2024புது டெல்லி, அரவிந்த் கெஜ்ரிவாலை முதல்வர் பதவியில் இருந்து நீக்க கோரி தொடரப்பட்ட பொதுநல மனுவை தள்ளுபடி செய்து டெல்லி ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
-
இந்தியாவின் பணக்கார பெண்மணி சாவித்ரி ஜிண்டால் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகல்
28 Mar 2024புது டெல்லி, அரியானா முன்னாள் அமைச்சரும், பிரபல தொழில் நிறுவனமான ஓ.பி.
-
அருணாச்சலில் போட்டியின்றி தேர்வாகும் முதல்வர் காண்டு உள்ளிட்ட 5 பா.ஜ.க. வேட்பாளர்கள்
28 Mar 2024ஈடாநகர், எதிர்க்கட்சிகள் தரப்பில் வேட்பாளர்கள் யாரும் மனு தாக்கல் செய்யாததால் அருணாசல பிரதேசத்தில் முதல்வர் பிமா காண்டு உள்ளிட்ட 5 பா.ஜ.க.
-
தமிழகத்தில் 1-ம் தேதி வரை வெப்பநிலை அதிகரிக்க கூடும்: சென்னை வானிலை மையம் தகவல்
28 Mar 2024சென்னை, தமிழகத்தில் வரும் 01-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2 டிகிரி செல்சியஸ் வரை படிப்படியாக அதிகரிக்கக் கூடும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்
-
செந்தில் பாலாஜியின் புதிய மனு ஏப். 4-ம் தேதிக்கு தள்ளி வைப்பு
28 Mar 2024சென்னை, சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த புதிய மனுவுக்கு அமலாக்கத்துறை பதிலளிக்கும் படி உத்தரவிட்டு ஏப்ரல் 4-ம் தேதி
-
அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனை 3-வது முறையாக நிராகரித்தார் மொய்த்ரா
28 Mar 2024புது டெல்லி, திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளர் மஹுவா மொய்த்ரா மூன்றாவது முறையாக அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனை நிராகரித்துள்ளார்.
-
புதுச்சேரியில் உதயநிதி 31-ம் தேதி பிரச்சாரம்
28 Mar 2024புதுச்சேரி, காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கத்துக்கு ஆதரவாக அமைச்சர் உதயநிதி வருகிற 31-ம் தேதி புதுச்சேரியில் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.
-
டி.என்.பி.எஸ்.சி. குரூப் 1 தேர்வு நடைபெறும் தேதி அறிவிப்பு: ஏப். 27 வரை விண்ணப்பிக்கலாம்
28 Mar 2024சென்னை, 90 காலிபணியிடங்களுக்கான குரூப் 1 தேர்வு அறிவிப்பை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.