எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, நவ.19 - டி.என்.பி.எஸ்.சி.யில் நடந்த முறைகேடு தொடர்பாக சேர்மன் செல்லமுத்து உள்பட 14 பேர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர். தமிழக அரசு ஊழியர் தேர்வாணையமான டி.என்.பி.எஸ்.சியில் முறைகேடுகள் நடப்பதாக லஞ்ச ஒழிப்புத் துறைக்கு ஆதாரங்களுடன் ஏராளமான புகார்கள் வந்தன. அதன் பேரில் கடந்த மாதம் 14ந் தேதி டி.என்.பி. எஸ்.சி. சேர்மன் செல்லமுத்து உள்பட உறுப்பினர்கள் 14 பேர் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை நடத்தினார்கள். 14 பேர் வீடுகளில் இருந்து ஏராளமான ஆவணங்கள், சொத்து ஆவணங்கள், தங்க நகைகளை லஞ்ச ஒழிப்பு போலீசார் பறிமுதல் செய்தனர். அந்த ஆவணங்கள் அனைத்தும் தொகுக்கப்பட்டு லஞ்ச ஒழிப்பு சிறப்புக் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டன. இது தொடர்பான வழக்கு விசாரணை கோர்ட்டில் நடந்து வருகிறது. விரைவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிகிறது.இந்த நிலையில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று (வெள்ளிக்கிழமை) மீண்டும் அதிரடி வேட்டையில் ஈடுபட்டனர். தேர்வாணைய உறுப்பினர்கள் 14 பேர் வீடுகளில் பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்களில் உள்ள தகவல்களின் அடிப்படையில் இந்த சோதனை நடத்தப்பட்டதாக தெரிய வந்துள்ளது.சோதனைக்குள்ளான 14 அதிகாரிகள் பெயர் மற்றும் அவர்கள் டி.என்.பி.எஸ்.சி.யில் வகித்து வரும் பதவி விவரம் வருமாறு: 1. மைக்கேல் ஜெரால்டு, டி.என்.பி.எஸ்.சி. இணைச் செயலாளர், லாயிட்ஸ் காலனி, ராயப்பேட்டை. 2. சுகுமார், டி.என்.பி.எஸ்.சி., அண்டர் செகரட்டரி, ராஜா அண்ணாமலைபுரம். 3. ரவி, டி.என்.பி.எஸ்.சி., அண்டர் செகரட்டரி, ராஜாஜி நகர், மடிப்பாக்கம். 4. உஷா (பிரிவு அதிகாரி), அண்ணா நகர். 5. ராமமூர்த்தி (உதவி பிரிவு அதிகாரி), சாந்தி காலனி, அண்ணா நகர். 6. குமரேசன் (உதவிப் பிரிவு அதிகாரி), அயப்பாக்கம். 7. சதீஷ்குமார் (உதவிப் பிரிவு அதிகாரி), திருவல்லிக்கேணி. 8. முருகன் (உதவிப்பிரிவு அதிகாரி), திருவல்லிக்கேணி. 9. ரவிச்சந்திரன் (உதவிப்பிரிவு அதிகாரி), அயன்புரம். 10. லோகநாதன் (உதவிப்பிரிவு அதிகாரி), அண்ணா நகர். 11. சையது (உதவிப்பிரிவு அதிகாரி), அண்ணா சாலை. 12. ராதாகிருஷ்ணன்(உதவிப்பிரிவு அதிகாரி), திருமங்கலம் காலனி, அண்ணா நகர் மேற்கு 13. பிரபாகரன்(உதவிப்பிரிவு அதிகாரி), பழைய வண்ணாரப்பேட்டை. 14. பாலாஜி (உதவிப்பிரிவு அதிகாரி), பேங்க் காலனி, மாதவரம் பால்பண்ணை காலனி. லஞ்ச ஒழிப்பு கூடுதல் டி.ஜி.பி. மகேந்திரன் உத்தரவின் பேரில் ஐ.ஜி.குணசீலன், டி.ஐ.ஜி. வெங்கட்ராமன் மேற்பார்வையில் கூடுதல் டி.எஸ்.பி. ஜெயலட்சுமி தலைமையில் 14 போலீஸ் துணை சூப்பிரண்டுகள் பொறுப்பேற்று இந்த அதிரடி சோதனையை நடத்தினார்கள். இந்த சோதனையில் டி.என்.பி.எஸ்.சி. முறைகேடுகளுக்கான சில முக்கிய ஆவணங்கள் சிக்கி உள்ளதாக தெரிகிறது. இது தொடர்பாக காவல்துறை விடுத்துள்ள விளக்கம் வருமாறு: சட்டவிதி முறைகளை பின்பற்றி தமிழ்நாடு தேர்வாணையத்தின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் மீது ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறையால் சென்னை தலைமையக குற்ற எண்.22/2011, தேதி 13102011, ஊழல் தடுப்புச் சட்டம் 1988ன் பிரிவுகள் 13(2), 13(1)(டி), மற்றும் 15 மற்றும் பிரிவுகள் 120 (பி), 175 மற்றும் 186 இந்திய தண்டனைச் சட்டங்களில் கீழ்க்கண்ட குற்றச்சாட்டுகளுக்காக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 1. உதவி பல்மருத்துவர் பணிக்கு தேர்வு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்களின் பெயர் பட்டியலை அதிகாரnullர்வமாக வெளியிடுவதற்கு முன்பு பார்வையிட கோரிய தன் மூலம் குற்ற அலுவலர்கள் குற்றமுறு நடவடிக்கை புரிய முயன்று தவறான வழிகளில் பணப்பயன் பெற முயற்சித்தமைக்காக பிரிவுகள் 15, 13(1)(டி) ஊழல் தடுப்பு சட்டம் 1988ன்படி குற்றம் சாட்டப்பட்டவர்களாவர். 2. 2006 முதல் 2008ம் ஆண்டுக்கான மோட்டார் வாகன ஆய்வாளர்கள் காலி பணியிடங்களுக்கு நடைபெற்ற தேர்வில், தகுதியற்ற பணியாளர்களை தேர்வு செய்த ஊழல் தொடர்பான குற்றச்சாட்டை அதிகாரவரம்புக்கு உட்பட்டு விசாரணைக்கு அனுமதி மறுத்து அதிகாரதுஷ்பிரயோகம் செய்ததன் மூலம் குற்ற அலுவலர்கள் பிரிவுகள் 13(2), 13(1)(டி) ஊழல் தடுப்பு சட்டம் 1988ன்படி குற்றம் சாட்டப்பட்டவர்களாகின்றனர். 3. தொகுதி1 அலுவலர் தேர்வுகளில் லஞ்ச லாவண்யங்களில் ஈடுபடாமல் தடுக்கும் பொருட்டு இ.ஆ.ப. அலுவலரான செயலர், தமிழ்நாடு தேர்வாணையம் அவர்கள் செயல்பட முடியாமல் குற்ற அலுவலர்கள் தடுத்ததன் மூலம் இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 186ன் படி குற்றம் சாட்டப்பட்டவர்களாவர். 4. ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறை சட்டவரமுறைக்கு உட்பட்டு விசாரணை மேற்கொண்டு ஆவணங்களை விசாரணைக்கு ஆஜர்படுத்த கோரிய போது ஆவணங்களை விசாரணைக்கு ஆஜர்படுத்த மறுத்ததன் மூலம் இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 175ன்படி அதிகார துஷ்பிரயோகம் செய்தமைக்காக குற்றம் சாட்டப்பட்டவர்களாகிறார்கள். வழக்கு விசாரணைக்கு முக்கிய கட்டமாக தமிழ்நாடு தேர்வாணையத்தின் தலைவர் மற்றும் உறுப்பினர்களின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் 14102011 அன்று சோதனை நடைபெற்றது. அச்சோதனையில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. தற்போது அடுத்தகட்டமாக அதிகாரிகள் மற்றும் ஊழியர்களின் வீடுகளிலும் அலுவலகத்திலும் சோதனை நடைபெற்று வருகிறது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
சூப்பர் சாஃப்ட் இட்லி2 days 52 sec ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி5 days 23 hours ago |
ரவா பர்பி1 week 2 days ago |
-
தமிழ்நாட்டில் இன்றும் 108 டிகிரி பாரன்ஹீட் வெயில் கொளுத்தும்: சென்னை வானிலை மையம் தகவல்
18 Apr 2024சென்னை, தமிழகத்தில் இன்று 108 டிகிரி பாரன்ஹீட் வெயில் கொளுத்தும்' என சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
-
மீனாட்சி அம்மன் கோவில் செங்கோல் விவகாரம்: ஆகம விதிகள் குறித்து ஒரே நாளில் நீதிபதிகள் முடிவுக்கு வர இயலாது: உயர் நீதிமன்ற மதுரை கிளை கருத்து
18 Apr 2024மதுரை, மீனாட்சி அம்மன் கோவில் செங்கோல் விவகாரத்தில் நீதிபதிகள் ஆகம விதி நிபுணர்கள் அல்ல என்று கருத்து தெரிவித்துள்ள மதுரை ஐகோர்ட், நீதிபதிகள் ஆகம விதி நிபுணர்கள் அல்ல எ
-
பாராளுமன்ற தேர்தல் எதிரொலி: ரயில், பேருந்து நிலையங்களில் அலை மோதிய மக்கள் கூட்டம்
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தல் காரணமாக நேற்று ரெயில், பஸ் நிலையங்களில் பயணிகள் கூட்டம் அலைமோதியது.
-
'சப்சோனிக்' ஏவுகணை வெற்றிகரமாக சோதனை
18 Apr 2024புவனேஸ்வரம், தரையிலிருந்து குறுகிய தூரம் சென்று இலக்கை தாக்கும் சப்சோனிக் ஏவுகணை நேற்று வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டதாக டி.ஆர்.டி.ஓ. தகவல் வெளியிட்டுள்ளது.
-
மருத்துவர்கள் இன்று தயார் நிலையில் இருக்க வேண்டும்: பொது சுகாதாரத்துறை உத்தரவு
18 Apr 2024சென்னை, மருத்துவர்கள் இன்று தயார் நிலையில் இருக்க வேண்டும் என்று பொது சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.
-
சி.எஸ்.கே. அணியின் தொடக்க ஆட்டக்காரராக ரிச்சர்டு க்ளீசன்
18 Apr 2024சென்னை:சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர் டெவான் கான்வேவுக்குப் பதிலாக மாற்று வீரரை சிஎஸ்கே அணி நிர்வாகம் அறிவித்துள்ளது.
-
ஆல் ரவுண்டர்களுக்கு பாதிப்பு:இம்பேக்ட் விதிமுறையை எதிர்க்கும் ரோகித் சர்மா
18 Apr 2024மும்பை:இம்பேக்ட் விதிமுறையால் ஆல் ரவுண்டர்கள் தங்களது முக்கியதுவத்தை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக வெளிப்படையாக கருத்து தெரிவித்துள்ளார் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்
-
நாட்டில் உள்ள ஒவ்வொரு மொழியும் முக்கியமானது ராகுல் காந்தி பேச்சு
18 Apr 2024திருவனந்தபுரம்: இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மொழியும் மற்ற மொழிகளை போல முக்கியமானது.
-
மழை, வெள்ள பாதிப்பு: துபாய் இந்தியர்களுக்கு உதவி எண்கள் அறிவிப்பு
18 Apr 2024துபாய்:துபாயில் பெய்த வரலாறு காணாத கனமழையால், அங்கு வசிக்கும் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
-
இமாச்சல்லில் உலகிலேயே மிக உயரமான வாக்குச்சாவடி
18 Apr 2024சிம்லா:இமாச்சல பிரதேசத்தில் 52 வாக்காளர்களுக்காக மலைகளுக்கு இடையே உலகின் மிக உயரமான பள்ளத்தாக்கு பகுதியில் வாக்குச்சாவடி அமைக்கப்பட்டிருக்கிறது.
-
இஸ்ரேல் சரக்கு கப்பலில் சிக்கிய 17 இந்தியர்களில் கேரள பெண் மீட்பு
18 Apr 2024புதுடில்லி:ஈரானால் கைப்பற்றப்பட்ட, இஸ்ரேல் சரக்கு கப்பலில் இருந்த இந்திய பணியாளர்கள், 17 பேரில் கேரளாவை சேர்ந்த டெஸ்ஸா ஜோசப் என்ற பெண் நேற்று (ஏப்ரல் 18) விடுவிக்கப்பட்
-
குஜராத்தை வீழ்த்தியது டெல்லி
18 Apr 2024அகமதாபாத்:குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 6 விக்கெட் வித்தியாத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி அபார வெற்றி பெற்றது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 19-04-2024.
19 Apr 2024 -
ஆர்வமுடன் வாக்களித்த உலகின் குள்ளமான பெண்
19 Apr 2024நாக்பூர், நாக்பூரில் உள்ள வாக்குச்சாவடியில் உலகின் குள்ளமான பெண்மணியான ஜோதி ஆம்ஜி என்பவர் வாக்களித்தார்.
-
கடற்படையின் அடுத்த தளபதியாக தினேஷ் குமார் திரிபாதி நியமனம்
19 Apr 2024புது டெல்லி, கடற்படைத் துணைத் தளபதியாக தற்போது பணியாற்றி வரும் வைஸ் அட்மிரல் தினேஷ் குமார் திரிபாதியை வரும் 30-ம் தேதி முதல் கடற்படையின் அடுத்த தளபதியாக அரசு நியமித்துள
-
பார்லி. தேர்தல்: வாக்களிக்க சென்ற 3 பேர் மயங்கி விழுந்து உயிரிழப்பு
19 Apr 2024சென்னை, தமிழகத்தில் நேற்று நடந்த பாராளுமன்ற தேர்தலில் வாக்களிக்க சென்ற 3 பேர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
ஸ்காட்லாந்தில் அருவியில் குளித்த இந்திய மாணவர்கள் 2 பேர் தவறி விழுந்து உயிரிழப்பு
19 Apr 2024லண்டன், ஸ்காட்லாந்தில் அருவியில் குளித்து மகிழ்ந்த 2 இந்திய மாணவர்கள் தவறி விழுந்து உயிரிழந்தனர்.
-
மாலத்தீவு முன்னாள் அதிபரின் 11 ஆண்டு சிறை தண்டனை ரத்து: மறுவிசாரணைக்கு நீதிமன்றம் உத்தரவு
19 Apr 2024மாலே, மாலத்தீவு முன்னாள் அதிபரின் 11 ஆண்டு சிறை தண்டனையை ரத்து செய்து உத்தரவிட்ட நீதிமன்றம் இந்த வழக்கில் மறுவிசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.
-
பார்லி. தேர்தல்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாக்களித்தார்
19 Apr 2024சென்னை : தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளில் பாராளுமன்ற தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி நேற்று நடைபெற்றது. இந்த தேர்தலை
-
பாராளுமன்ற தேர்தல்: ஜனநாயக கடமையாற்றிய திரை பிரபலங்கள்
19 Apr 2024சென்னை : தமிழகத்தில் நேற்று நடந்த பாராளுமன்ற தேர்தலில் திரை பிரபலங்கள் பலரும் தங்களது ஜனநாயக கடமையையாற்றினர்.
-
புதுச்சேரியில் மோட்டார் சைக்கிளில் சென்று வாக்களித்த முதல்வர் ரங்கசாமி
19 Apr 2024புதுச்சேரி, புதுச்சேரியில் மோட்டார் சைக்கிளில் சென்று தனது வாக்கினை பதிவு செய்தார் அம்மாநில முதல்வர் ரங்காசமி.
-
பாகிஸ்தானில் ஜப்பானியர்கள் சென்ற வாகனம் மீது தற்கொலை படை தாக்குதல்
19 Apr 2024இஸ்லாமாபாத், பாகிஸ்தானின் கராச்சியில் நேற்று ஜப்பானியர்கள் சென்ற வாகனம் மீது தற்கொலைப் படைத் தாக்குதல் நடத்தப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
சைக்கிள் ஓட்டிச்சென்று நடிகர் விஷால் வாக்களிப்பு
19 Apr 2024சென்னை : நடிகர் விஷால் சைக்கிள் ஓட்டிச்சென்று வாக்களித்தது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
-
ஐ.நா.வில் பாலஸ்தீனத்தை உறுப்பினராக்கும் தீர்மானம்: வீட்டோ அதிகாரம் மூலம் முறியடித்த அமெரிக்கா
19 Apr 2024நியூயார்க், 193 உறுப்பினர்களைக் கொண்ட ஐ.நா.
-
கர்நாடகாவில் காங்கிரசில் இணைந்த முன்னாள் எம்.எல்.ஏ.-க்கள் 2 பேர்
19 Apr 2024பெங்களூர், கர்நாடகா மாநிலத்தின் முன்னாள் பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் இருவர் மலிகாய்யா கட்டேதார், சாரதா மோகன் ஷெட்டி ஆகியோர் நேற்று காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர்.