முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விபத்தில் குழந்தைகள் மரணம்: முதல்வர் நிதி உதவி

சனிக்கிழமை, 19 நவம்பர் 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, நவ.19 - கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் வட்டம, சானமாவு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவர்கள் 16.11.11 அன்று பள்ளி முடிந்து, சாலையை கடக்க முயற்சித்தபோது டாடா சுமோ வாகனம் ஒன்று மோதியதில் ராஜப்பா என்பவரின் மகன் சிறுவன் மாதேஷ் மற்றும் மகள் சிறுமி ராஜேஸ்வரி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் என்ற செய்தியை அறிந்து நான் மிகவும் துயருற்றேன்.இந்த விபத்தில் அகால மரணமடைந்த குழந்தைகளின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

மேலும், இத்துயரச் சம்பவத்தில் சாம்ராஜ் என்பவரின் மகன் சிறுவன் நாகேஷ், படுகாயமடைந்தார் என்பதை அறிந்து நான் மிகவும் வருத்தமடைந்தேன். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வரும் அச்சிறுவனுக்கு நல்லமுறையில் சிகிச்சை அளிக்க மருத்துவமனை அதிகாரிகளுக்கும், கிருஷ்ணகிரி மாவட்ட நிருவாகத்திற்கும் நான் உத்தரவிட்டுள்ளேன். அவர் விரைவில் பூரணகுணமடைய வேண்டும் என்ஹ என்னுடைய விருப்பத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்தத் துயரச் சம்பவத்தில் உயிரிழந்த சிறுவன் மாதேஷ் மற்றும் சிறுமி ராஜேஸ்வரியின் குடும்பத்திற்கு இரண்டு லட்சம் ரூபாயும், பலத்தகாயமடைந்த சிறுவன் நாகேஷுக்கு 25 ஆயிரம் ரூபாயும், முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன்.

இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்