முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தவறி விழுந்து பெண் பலி: முதல்வர் நிதி உதவி

சனிக்கிழமை, 19 நவம்பர் 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, நவ.19 - பாலத்திலிருந்து தவறி விழுந்த பெண் பரிதாபமாக உயிரிழந்தார். இவரது குடும்பத்திற்கு முதல்வர் ஜெயலலிதா ஒரு லட்சம் நிதி உதவி வழங்கியுள்ளார். இது குறித்து  முதல்வர் ஜெயலலிதா விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- சேலம் மாவட்டம், மேட்டூர் வட்டம், தொட்டில்பட்டியைச் சேர்ந்த பெருமாள் என்பவரின் மகள் செல்வி ராதிகா மேட்டூர் அனல் மின்நிலையத்திற்கு செல்லும் பாதையில் காவேரி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள பாலத்தின் மீது நடந்து செல்லும் போது, பாலத்தில் இருந்த கிமெண்ட் பலகை துவாரத்தில் தவறி விழுந்ததில் உயிரிழந்தார் என்ற செய்தியை அறிந்து நான் மிகவும் துயருற்றேன்.

இந்த விபத்தில் அகால மரணமடைந்த செல்வி ராதிகாவின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்தத் துயரச் சம்பவத்தில் காலமான செல்வி ராதிகாவின் குடும்பத்திற்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ஒரு லட்சம் ரூபாய் வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன்.

மேலும், ஆற்றுப் பாலங்களின் மீது போடப்பட்டிருக்கும் சிமெண்ட் பலகைகல் சிதிலமடைந்திருந்தால் அவைகளை உடனடியாக செப்பனிடுமாறு நெடுஞ்சாலை துறை அதிகாரிகளுக்கு நான் உத்தரவிட்டுள்ளேன்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்