முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சத்துணவு சாப்பிட்ட 21 குழந்தைகளுக்கு வாந்தி மயக்கம்

வெள்ளிக்கிழமை, 11 மார்ச் 2011      தமிழகம்
Image Unavailable

திருவாடானை,மார்ச்.11 -  திருவாடானை அருகே சத்துணவு சாப்பிட்ட 21 குழந்தைகளுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டதை தொடர்ந்து அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். திருவாடானை, ஆர்.எஸ். மங்களம் தாலுகாவுக்கு உட்பட்டது செவ்வாய்பேட்டை. இந்த கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி ஒன்று உள்ளது. 5 ம் வகுப்பு வரை உள்ள இந்த பள்ளியில் 25 க்கும் மேற்பட்ட குழந்தைகள் படித்து வருகின்றனர். இந்த குழந்தைகளுக்கு நேற்று மதியம் சத்துணவு வழங்கப்பட்டது. இதனை சாப்பிட்ட சில நிமிடங்களில் குழந்தைகளுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டது. உடனடியாக குழந்தைகள் திருவாடானை அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்சு மூலம் கொண்டு செல்லப்பட்டு அனுமதிக்கப்பட்டனர். இது குறித்த தகவல் அறிந்த கிராம பொதுமக்கள் மருத்துவமனை முன்பு பெருந்திரளாக கூடினர். ஆனால் மருத்துவமனையில் டாக்டர்கள் இல்லாததால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் கலவரத்தில் ஈடுபட்டனர். இது குறித்து காவல்துறை கண்காணிப்பாளர் மோகன்ராஜ், சப் இன்ஸ்பெக்டர் முத்துசெல்வம் மற்றும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்