எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புது டெல்லி, நவ. - 24 - 2 ஜி ஸ்பெக்ட்ரம் இமாலய ஊழல் வழக்கில் முதல் முறையாக 5 நிறுவன அதிகாரிகளுக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. இவர்களை திகார் சிறைச்சாலையில் இருந்து விடுவிக்க சுப்ரீம் கோர்ட் நேற்று உத்தரவிட்டது. இவ்வாறு இவர்களுக்கு ஜாமீன் கிடைத்திருப்பதன் மூலம் டெல்லி திகார் சிறையில் கிட்டத்தட்ட 6 மாதங்களுக்கு மேலாக அடைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ஆ. ராசா, தி.மு.க. எம்.பி. கனிமொழி ஆகியோருக்கும் விரைவில் ஜாமீன் கிடைக்கலாம் என்று கருதப்படுகிறது. 5 நிறுவன அதிகாரிகளுக்கு ஜாமீன் கிடைத்திருப்பதால் தங்களுக்கும் ஜாமீன் கிடைக்கும் என்ற நம்பிக்கை கனிமொழிக்கும், ராசாவுக்கும் வந்திருப்பதாக டெல்லி வட்டாரங்கள் தெரிவித்தன. முன்னதாக, சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் ஜி.எஸ். சிங்வி, ஹெச்.எல். தத்தூ ஆகியோர் அடங்கிய பெஞ்ச் ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பாக சிறையில் அடைக்கப்பட்டிருந்த 5 நிறுவன அதிகாரிகளையும் நிபந்தனை ஜாமீனில் விடுவிக்க உத்தரவிட்டனர். யுனிடெக் லிமிடெட் நிர்வாக இயக்குனர் சஞ்சய் சந்திரா, ஸ்வான் டெலிகாம் நிறுவன இயக்குனர் வினோத்கோயங்கா, ரிலையன்ஸ் அனில் திருபாய் அம்பானி குழுமத்தை சேர்ந்த நிர்வாகிகள் ஹரிநாயர், கவுதம் தோஷி, சுரேந்திர பிப்பாரா ஆகிய 5 பேரையும் ஜாமீனில் விடுவிக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர். ஒவ்வொருவரும் தலா ரூ. 5 லட்சம் மதிப்புள்ள 2 உத்தரவாதங்களை அளிக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். இந்த தீர்ப்பை நீதிபதி தத்தூ வாசித்தார். முன்னதாக, மேற்கண்ட 5 பேரும் தங்களை ஜாமீனில் விடுவிக்க கோரி விசாரணை நீதிமன்றத்திலும், டெல்லி ஐகோர்ட்டிலும் மனுத்தாக்கல் செய்திருந்தனர். ஆனால் இரண்டு நீதிமன்றங்களும் இவர்களது ஜாமீன் மனுக்களை நிராகரித்து விட்ட நிலையில் மேற்கண்ட ஐவரும் சுப்ரீம் கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்திருந்தார்கள். ஆனால் சி.பி.ஐ. இவர்களை ஜாமீனில் விடுவிக்க கடும் எதிர்ப்பு தெரிவித்து இருந்தது. ஆனால் குற்றம் சாட்டப்பட்டவர்களோ, தங்களுக்கு ஜாமீன் வழங்கப்பட வேண்டும். காரணம், இந்த வழக்கில் குற்றச்சாட்டுகள் ஏற்கனவே பதிவு செய்யப்பட்டுவிட்டன. எனவே சாட்சிகளை கலைக்க இனி சந்தர்ப்பமில்லை என்று அவர்கள் தரப்பில் வாதிடப்பட்டது. இதை ஏற்றுக் கொண்ட சுப்ரீம் கோர்ட் 5 நிறுவன அதிகாரிகளுக்கும் நிபந்தனை ஜாமீன் வழங்கி அவர்களை சிறையில் இருந்து விடுவிக்க உத்தரவிட்டது. ஸ்பெக்ட்ரம் வழக்கில் முதல் முறையாக இவர்களுக்குத்தான் ஜாமீன் கிடைத்துள்ளது. அதனால் தங்களுக்கும் ஜாமீன் கிடைத்து விடும் என்ற நம்பிக்கை இதே வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள கனிமொழி மற்றும் ராசாவுக்கும் வந்திருப்பதாக டெல்லி வட்டாரங்கள் தெரிவித்தன. தன்னை ஜாமீனில் விடக் கோரி கனிமொழி தாக்கல் செய்திருந்த மனுக்கள் ஏற்கனவே 4 முறை நிராகரிக்கப்பட்டு விட்டன. தற்போது அவர் டெல்லி ஐகோர்ட்டில் மீண்டும் ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்துள்ளார். அவரது ஜாமீன் மனுவை சி.பி.ஐ. கூட எதிர்க்கவில்லை. எனவே கடந்த முறையே அவருக்கு ஜாமீன் கிடைத்து விடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நீதிபதியோ, ஒரு பெண் என்பதற்காக ஜாமீனில் விடுதலை செய்ய முடியாது என்று திட்டவட்டமாக மறுத்து விட்டார். இந்த நிலையில்தான் டெல்லி ஐகோர்ட்டில் டிசம்பர் 1 ம் தேதி கனிமொழியின் ஜாமீன் மனு மீதான விசாரணை வரவிருக்கிறது. கனிமொழி மட்டுமின்றி மேலும் நால்வரின் ஜாமீன் மனுக்களும் டிசம்பர் 1 ம் தேதி டெல்லி ஐகோர்ட்டில் விசாரணைக்கு வருகிறது. இதனிடையே கனிமொழிக்காக வாதாடும் சில வழக்கறிஞர்களை மாற்றி விட்டு திறமையான வழக்கறிஞர்களை நியமிக்க தி.மு.க. மேலிடம் முடிவு செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது. எது எப்படியோ, வரும் டிசம்பர் 1 ம் தேதி கனிமொழிக்கு ஜாமீன் கிடைக்குமா, கிடைக்காதா என்பது தெரிந்து விடும். அதே வேளையில் 5 நிறுவன அதிகாரிகளுக்கு முதல் முதலாக ஜாமீன் கிடைத்திருப்பதால் கனிமொழிக்கு இம்முறை ஜாமீன் கிடைக்க வாய்ப்பு இருப்பதாகவும் கருதப்படுகிறது. ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கு தொடர்பாக முதன்முதலில் கைது செய்யப்பட்டவர் முன்னாள் தொலைத் தொடர்பு துறை அமைச்சர் ஆ. ராசாதான். பிறகு அவரது அந்தரங்க உதவியாளர் ஆர்.கே. சந்தோலியா, முன்னாள் தொலைத் தொடர்பு செயலாளர் சித்தார்த்த பெகுரா ஆகியோரும் கைது செய்யப்பட்டார்கள். அதன் பிறகு கலைஞர் தொலைக்காட்சிக்கு ரூ. 200 கோடி கைமாறிய விவகாரம் தொடர்பாக அந்த டி.வியின் பங்குதாரர்களில் முக்கியமானவராக கருதப்படும் கனிமொழி எம்.பி. மற்றும் அந்த டி.வியின் நிர்வாக இயக்குனர் சரத்குமார் ஆகியோரும் கைது செய்யப்பட்டார்கள். கடந்த மே மாதத்தில் இருந்து கனிமொழி டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அதாவது கிட்டத்தட்ட 7 மாதங்களாக கனிமொழி திகார் சிறையில் இருந்து வருகிறார். அவரை மு.க. அழகிரி, மு.க. ஸ்டாலின் மற்றும் தி.மு.க. தலைவர் கருணாநிதி, அவரது குடும்பத்தார் மற்றும் கட்சி பிரமுகர்கள் இதுவரை பலமுறை சந்தித்து ஆறுதல் கூறி விட்டனர். அதே போல கனிமொழியும் தன் தந்தைக்கு தன்னை சந்தித்த போதெல்லாம் ஆறுதல் கூறி தேற்றினார். இந்த நிலையில்தான் வரும் டிசம்பர் 1 ம் தேதி அவரது ஜாமீன் மனு விசாரணைக்கு வருகிறது. ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் ஷாகித் உஸ்மான் பல்வா, அவரது உறவினர் ஆசிப் பல்வா மற்றும் ராஜீவ் அகர்வால், மும்பை திரைப்பட தயாரிப்பாளர் கரீம் மொரானி ஆகியோரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு டோனட்23 hours 59 min ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்5 days 42 min ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி1 week 18 hours ago |
-
தங்கம் விலை மீண்டும் உயர்வு
24 Apr 2024சென்னை, சென்னையில் நேற்று ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ரூ.53.840-க்கு விற்பனையானது.
-
பாகிஸ்தான் செல்லுமா இந்தியா?
24 Apr 2024சாம்பியன் டிராபி போட்டி பாகிஸ்தானில் நடப்பதால் இந்திய அணி அங்கு சென்று விளையாட வாய்ப்பு இல்லை என தகவல் வெளியாகி உள்ளது.
-
தனியார் பள்ளிகளில் இடஒதுக்கீடு நிறைவேற்றப்படுகிறதா? கண்காணிக்க அரசுக்கு செல்வப்பெருந்தகை கோரிக்கை
24 Apr 2024சென்னை, தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் கல்வி உரிமைச் சட்டப்படி தனியார் பள்ளிகளில் 25 சதவிகித இடஒதுக்கீடு முழுமையாக நிறைவேற்றப்படுகிறதா என்பதை நாள்தோறும் கண்காணித்து உரிய த
-
பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்ன ஆகும்? இளையராஜா தரப்புக்கு உயர் நீதிமன்றம் கேள்வி
24 Apr 2024சென்னை, இளையராஜா பாடலை பயன்படுத்த விதித்த இடைக்கால தடையை நீக்கக்கோரி நிறுவனங்கள் தொடர்ந்த மேல்முறையீடு வழக்கில் பாடலுக்கு பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்ன ஆகும்? 
-
சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தல் எதிரொலி: பெரிய அளவில் விளம்பரம் வெளியிட்டு மன்னிப்பு கோரியது பதஞ்சலி நிறுவனம்
24 Apr 2024புதுடெல்லி, சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தலை அடுத்து 67 தேசிய செய்தித்தாள்களில் பெரிய அளவில் விளம்பரம் வெளியிட்டு நிபந்தனையற்ற பொதுமன்னிப்பு கோரியது பதஞ்சலி நிறுவனம்.
-
நாட்டின் கவனத்தை திசை திருப்புவதே பாஜக தலைவர்களின் பாணி: பிரியங்கா
24 Apr 2024திருவனந்தபுரம், உண்மையான பிரச்சினைகளில் இருந்து நாட்டின் கவனத்தை திசை திருப்புவதே பா.ஜ.க.
-
தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம்: கவர்னர் ஆர்.என்.ரவி வாழ்த்து
24 Apr 2024சென்னை, ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 24-ம் தேதி தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம் கொண்டாடப்படுகிறது. அதன்படி நேற்று தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம் கொண்டாடப்பட்டது.
-
தீர்ப்பு தாமதம்: சுப்ரீம் கோர்ட்டில் ஹேமந்த் சோரன் மனு தாக்கல்
24 Apr 2024புது டெல்லி, பணமோசடி வழக்கில் அமலாக்கத் துறையின் கைது நடவடிக்கையை எதிர்த்து தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பை ஐகோர்ட் தாமதப்படுத்துவதாகக் கூறி, ஜார்கண்ட் முன்னாள் முதல்
-
செல்போன் டவரில் ஏறி தமிழக விவசாயிகள் திடீர் போராட்டம் : தலைநகர் டெல்லியில் பரபரப்பு
24 Apr 2024புதுடெல்லி, டெல்லி ஜந்தர் மந்தரில் செல்போன் டவர், மரத்தின் மீது ஏறி தமிழ்நாட்டை சார்ந்த விவசாயிகள் போராட்டம் நடத்தியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
-
வண்டியூர் தேனூர் மண்டபத்தில் மண்டூக மகரிஷிக்கு சாப விமோசனம் அளித்த கள்ளழகர்: ராமராயர் மண்டகப்படியில் விடிய, விடிய தசாவதாரம்
24 Apr 2024மதுரை, வண்டியூர் தேனூர் மண்டபத்தில் கருட வாகனத்தில் எழுந்தருளிய கள்ளழகர் அங்கு மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் அளித்தார்.
-
போர் தொடங்கியதில் இருந்து தற்போது வரை உக்ரைனில் 5 லட்சம் ராணுவ வீரர்கள் உயிரிழப்பு: ரஷ்யா
24 Apr 2024மாஸ்கோ, போர் தொடங்கியதில் இருந்து தற்போது வரை 5 லட்சம் ராணுவ வீரர்களை உக்ரைன் இழந்துள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது
-
கஷ்டப்பட்டு உழைத்து சேர்த்த உங்கள் செல்வத்தை காங்கிரஸ் பறித்துவிடும்: சத்தீஷ்கரில் பிரதமர் மோடி பேச்சு
24 Apr 2024புதுடெல்லி, நீங்கள் கஷ்டப்பட்டு உழைத்து சேர்த்த செல்வத்தை உங்கள் பிள்ளைகள் பெறமாட்டார்கள், அதை காங்கிரஸ் கட்சி பறித்துவிடும் என்று சத்தீஷ்கர் மாநிலத்தில் நடந்த கூட்டத்த
-
இன்டியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து வடமாநிலங்களில் தேர்தல் பிரசாரம் செய்ய முதல்வர் ஸ்டாலின் திட்டம்
24 Apr 2024சென்னை, இன்டியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து டெல்லி உள்ளிட்ட மாநிலங்களுக்கு சென்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரசாரம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
-
ஸ்மோக்கிங் பிஸ்கட்டை உட்கொள்ள வேண்டாம்: மாநில உணவு பாதுகாப்புத்துறை எச்சரிக்கை
24 Apr 2024சென்னை, ஸ்மோக்கிங் பிஸ்கட்டை உட்கொள்ள வேண்டாம் என மாநில உணவு பாதுகாப்புத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
-
வி.வி.பாட் வழக்கில் தேர்தல் ஆணையம் விளக்கம்:தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தது சுப்ரீம் கோர்ட்
24 Apr 2024புதுடெல்லி:வி.வி.பாட் தொடர்பான வழக்கில் தேர்தல் ஆணையம் விளக்கமளித்ததை அடுத்து தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை சுப்ரீம் கோர்ட் ஒத்திவைத்தது.
-
இந்திய வம்சாவளியை சேர்ந்தவர்: 3-வது முறையாக விண்வெளிக்கு செல்கிறார் சுனிதா வில்லியம்ஸ்
24 Apr 2024வாஷிங்டன், பூமி உள்ளிட்ட பிற கிரகங்களை ஆய்வு செய்வதற்காக ரஷியா, அமெரிக்க உள்ளிட்ட நாடுகள் விண்வெளியில் சர்வதேச விண்வெளி மையத்தை அமைத்துள்ளன.
-
நாளை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் மணிப்பூரில் அடுத்தடுத்து குண்டுவெடிப்பு சம்பவம்
24 Apr 2024இம்பால், மணிப்பூரின் 2ம் கட்ட தேர்தல் நாளை நடைபெறவுள்ள நிலையில், அங்கு குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
நீர்மட்டம் தொடர் சரிவு: மேட்டூர் அணை பகுதியில் வெளியே தெரியும் நந்தி சிலை, தேவாலயம்
24 Apr 2024சேலம், மேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து வருவதால் நந்தி சிலை, கிறிஸ்தவ தேவாலயம் முழுவதும் வெளியே தெரிகிறது.
-
மஞ்சுமெல் பாய்ஸ் பட நடிகரை கரம் பிடித்தார் அபர்ணா தாஸ்
24 Apr 2024திருவனந்தபுரம், கேரள மாநிலம், வடக்கஞ்சேரியில் மஞ்சுமெல் பாய்ஸ் பட நடிகர் தீபக் பரம்போல்,நடிகை அபர்ணாதாஸ் ஆகியோரது திருமணம் நேற்று நடைபெற்றது.
-
தமிழ்நாட்டில் ஈரோடு, சேலம் உள்ளிட்ட 15 மாவட்டங்களுக்கு வெப்ப அலைக்கான மஞ்சள் அலர்ட் வட உள்மாவட்டங்களில் 5 டிகிரி வரை வெப்பம் உயரும்
24 Apr 2024புதுடில்லி, ஏப். 25- தமிழகத்தில் ஈரோடு, சேலம் உட்பட 15 மாவட்டங்களுக்கு வெப்ப அலைக்கான மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
-
கிர்கிஸ்தானில் நீர் வீழ்ச்சியில் விழுந்து இந்திய மாணவர் பலி
24 Apr 2024கிர்கிஸ்தான், கிர்கிஸ்தானில் உள்ள நீர்வீழ்ச்சியில் விழுந்து ஆந்திர மாணவர் பலியானார்.
-
கேரளாவில் சக்திவாய்ந்த வெடிகுண்டுகள் கண்டெடுப்பு
24 Apr 2024திருவனந்தபுரம், கேரள மாநிலம், கண்ணூர் மாவட்டம் மட்டன்னூரில் உள்ள ஒரு வயலில் சக்திவாய்ந்த வெடிகுண்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வரு
-
விமான பயணத்தின்போது பெற்றோருக்கு அருகிலேயே குழந்தைகளுக்கு இருக்கை டி.ஜி.சி.ஏ. புதிய உத்தரவு
24 Apr 2024புதுடெல்லி, விமானங்களில் 12 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு அவர்களின் பெற்றோர் ஒருவருடன் இருக்கை ஒதுக்க வேண்டும் என்று விமான நிறுவனங்களுக்கு விமான போக்குவரத்து தலைமை இயக்க
-
இட ஒதுக்கீட்டை அதிகரிக்க இண்டியா கூட்டணி நடவடிக்கை எடுக்கும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிக்கை
24 Apr 2024சென்னை, ஓ.பி.சி., எஸ்.சி./எஸ்.டி. மக்களின் இட ஒதுக்கீட்டை அதிகரிக்க இண்டியா கூட்டணி நடவடிக்கை எடுக்கும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
கூவாகம் கூத்தாண்டவர் கோயில் தேரோட்டம் கோலாகலம்: ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு
24 Apr 2024கள்ளக்குறிச்சி, கள்ளக்குறிச்சி மாவட்டம் பிரசித்தி பெற்ற கூவாகம் கூத்தாண்டவர் கோயிலில் நடைபெற்ற தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.