முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சீக்கியர்களின் விழாவில் வைகோ பங்கேற்பு

வெள்ளிக்கிழமை, 25 நவம்பர் 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, நவ.25 - பஞ்சாப்பில் சீக்கியர்களின் சமய பாரம்பரிய வளாகத்திறப்பு விழாவிற்கு பஞ்சாப்  முதல்வர் பிரகாஷ் சிங்பாதல் அழைப்பின்பேரில் இன்று விழாவில் வைகோ கலந்து கொள்கிறார். இதுகுறித்து ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- பஞ்சாப் மாநிலத்தில் அனந்தப்ர் சாகிப் எனும் சீக்கியர்களின் திருத்தலத்தில் சீக்கியர்களின் வரலாற்றை ​ நிகழ்வுகளைச் சித்தரிக்கும் பிரம்மாண்டமான அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது. அனந்தப்ர் சாகிப் எனும் இந்த இடத்தில்தான் அகாலிதளம் கட்சி பிரசித்தி பெற்ற மாநில சுயாட்சிப் பிரகடனத்தைச் செய்தது.

சீக்கிய மதத்தையும் பாரம்பரியத்தையும் பெருமைப்படுத்தும் வளாகம் திறப்பு விழா பஞ்சாப் முதலமைச்சர் பிரகாஷ் சிங்பாதலின் தலைமையில்

இன்று காலை 11 மணிக்கு நடைபெறுகிறது.

விழாவில் மாநில முதலமைச்சர்களும், மதத் தலைவர்களும், அரசியல் கட்சித் தலைவர்களும் கலந்து கொள்கின்றனர். அந்த விழாவில் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்குமாறு முதலமைச்சர் பாதல் அழைத்ததன்பேரில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ பஞ்சாப் சென்றுள்ளார். அந்த விழாவில் அவர் இன்று கலந்து கொள்கிறார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்