எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஆண்டிபட்டி நவ.- 27 - வைகை ஆற்றின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு முதல் பெய்த பலத்த மழையின் காரணமாக வைகை ஆற்றில் மீண்டும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இதனால் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. எனவே கரையோர கிராம மக்கள் வெளியேற கலெக்டர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.தேனி மாவட்டம், கடமலை-மயிலை ஒன்றிய பகுதிகளில் கடந்த சில தினங்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக வைகை ஆற்றின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த பலத்த மழையின் எதிரொலியாக வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அதன் பின்னர் மழை பெய்வது அடியோடு நின்ற நிலையில் வைகை ஆற்றின் நீர்வரத்து படிப்படியாக குறைந்து கொண்டே வந்தது. இந்நிலையில் வங்கக்கடலில் ஏற்பட்ட புயல்சின்னம் காரணமாக நேற்று முன்தினம் இரவு முதல் வைகை ஆற்றின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் அடைமழை பெய்தது. நேற்று பிற்பகலில் வைகை ஆற்றில் பயங்கர வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. சுமார் 3.30 மணியளவில் வைகை ஆற்றில் வந்த நீரின் அளவு படிப்படியாக அதிகரித்து 4.30 மணியளவில் அதிகமான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
இதனால் ஆற்றில் அதிக இரைச்சலுடன் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இந்த வெள்ளப்பெருக்கால் வருசநாடு, முருக்கோடை, சிங்கராஜபுரம், தங்கம்மாள் புரம், தும்மக்குண்டு ஆகிய கிராமங்களில் வைகை ஆற்றில் உள்ள உறைகிணறுகளில் பொருத்தப்பட்டு இருந்த குடிநீர் குழாய்கள் மற்றும் மின் இணைப்பு கேபிள்கள் அனைத்தும் அடித்து செல்லப்பட்டு விட்டது. இதன்தாரணமாக அந்த ஊராட்சிகளில் குடிநீர் வினியோகம் தடைப் பட்டுள்ளது. இதேபோல வருசநாடு-சிங்கராஜபுரம் இடையே வைகை ஆற்றின் கரையில் கட்டப்பட்டு இருந்த தடுப்புசுவர் வெள்ளத்தில் அடியோடு இடிந்து விழுந்தது.தொடர் மழை காரணமாக குமணன்தொழு கிராமத்தில் ஏற்கனவே சேதமடைந்து காணப்பட்ட ஊராட்சி அலுவலகம் இடிந்து விழுந்தது. தொடர்மழை காரணமாக கடமலை-மயிலை ஒன்றியத்தில் உள்ள பல்வேறு கிராமங்களில் ஏராளமான வீடுகள் சேதமடைந்;துள்ளது. குறிப்பாக தங்கம்மாளபுரம் ஊராட்சியில் 50-க்கும் மேற்பட்ட வீடுகள் மழையால் சேதமடைந்து உள்ளதாக ஊராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது. வீடுகள் இடிந்துவிழுந்தாலும் உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை.வைகை ஆற்றில் தொடர்ந்து வெள்ளப்பெருக்கு அதிகரித்தகாரணத்தால் மயிலாடும்பாறை- கடமலைக் குண்டு இடைப்பட்ட இடத்தில் சாலையில் வெள்ள நீர் பெருகியது. இதன்காரணமாக சிறிது நேரம் போக்குவரத்து தடைப்பட்டது. வைகை ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தினால் ராயர் கோட்டை, செல்வராஜபுரம், வண்டியுர்ை, தண்டியர்குளம், அஞ்சரைப்புளி ஆகிய கிராமங்கள் மீண்டும் துண்டிக்கப்பட்டுள்ளன.வைகை அணையின் மொத்தம் உயரம் 71 அடி ஆகும். ஆணையின் நீர்மட்டம் 69 அடியை எட்டியவுடன், தண்ணீர் திறந்து விடுவது வழக்கமாகம். சமீபத்தில் அணை நிரம்பியதையொட்டி மதுரை,சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டஙகளுக்கு பாசனத்திற்தாக வினாடிக்கு 3,760 கன அடி நீர் திறந்துவிடப்பட்டது.இந்ந்லையில் தேனி மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக பெய்து வரும் பலத்த மழையின் காரணமாக அணைக்கு நீர்வரத்து அதிகமாக வந்து கொண்டு இருக்கிறது. ந்ேற்று இரவு 9 மணி அளவில் வினாடிக்கு 12 ஆயிரம் கன அடி தண்ணீர் அணைணக்கு வந்து கொண்டு இருந்தது. இந்த நீர்வரத்து தொடர்நது அதிகரிக்கும் பட்சத்தில்;, அணையின் முழு கொள்ளளவை மீண்டும் எட்டும். இதனை கருத்தில் கொண்டு நேற்றுக்காலை 10 மணி முதல் ; வினாடிக்கு 8400; கன அடி வரை வெளியேற்றப்படுகிறது.
இதைதொடர்ந்து தேனி, திண்டுக்கல்;, மதுரை, மாவட்டங்களில் வைகை ஆற்றுகரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. எனவே கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லும்படி கலெக்டர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஸ்வீட் உருளைக்கிழங்கு கேக்1 day 18 hours ago |
பெப்பர் சிக்கன்5 days 18 hours ago |
ஹனி பட்டர் சிக்கன்1 week 1 day ago |
-
கெஜ்ரிவால் விவகாரத்தை தொடர்ந்து காங்கிரஸ் வங்கி கணக்கு குறித்து கருத்து தெரிவித்த அமெரிக்கா
28 Mar 2024வாஷிங்டன், டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் விவகாரத்தை தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்கு முடக்கம் குறித்து அமெரிக்கா கருத்து தெரிவித்துள்ளது.
-
ஆஸ்திரேலியா ஒப்பந்த பட்டியல்: முக்கிய வீரர்களுக்கு இடமில்லை
28 Mar 2024மெல்போர்ன், ஆஸ்திரேலிய ஆடவர் கிரிக்கெட் அணிக்கு மத்திய ஒப்பந்தப் பட்டியல் வெளியாகியுள்ளது. இதில் பல முக்கிய வீரர்களுக்கு இடமில்லை.
-
முக்கிய வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்பு: தமிழகத்தில் வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை முடிந்தது: இறுதி வேட்பாளர்கள் பட்டியல் நாளை வெளியீடு
28 Mar 2024சென்னை, தமிழ்நாடு முழுவதும் வேட்புமனு தாக்கல் செய்த முக்கிய தலைவர்கள் அனைவரின் வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டுள்ளது.
-
தி.மு.க., காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று தர்மபுரியில் பிரச்சாரம்
28 Mar 2024தர்மபுரி, தர்மபுரி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் தி.மு.க.
-
பட்டாசு தொழிலை காப்பாற்றுவதற்கு தி.மு.க. அரசு எதுவும் செய்யவில்லை : சிவகாசி பொதுக்கூட்டத்தில் இ.பி.எஸ். குற்றச்சாட்டு
28 Mar 2024விருதுநகர், தி.மு.க. அரசு பட்டாசு தொழிலை காப்பாற்ற எதும் செய்யவில்லை சிவகாசி பொதுக்கூட்டத்தில் அ.தி.மு.க.
-
குன்றத்தில் வெகுவிமர்சையாக நடந்த சுப்பிரமணிய சுவாமி - தெய்வானை அம்மன் திருக்கல்யாண வைபவம்
28 Mar 2024மதுரை, மீனாட்சியம்மன், சுந்தரேஸ்வரர் பிரியாவிடை முன்னிலையில் திருப்பரங்குன்றத்தில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை அம்மன் திருக்கல்யாண வைபவம் வெகுவிமர்சையாக நேற்று நடைபெற்
-
ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பி.எஸ். பெயரில் தாக்கலான 6 பேரின் வேட்புமனுவும் ஏற்பு
28 Mar 2024ராமநாதபுரம், பாராளுமன்ற மக்களவைத் தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பன்னீர் செல்வம் எனும் பெயரில் வேட்புமனு தாக்கல் செய்த 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டுள்ளது.
-
ஏப். 4-ல் டெல்லியில் கூடுகிறது காவிரி மேலாண்மை ஆணையம்
28 Mar 2024புது டெல்லி, காவிரி மேலாண்மை ஆணையத்தின் 29-வது கூட்டம் ஏப்ரல் 4-ம் தேதி டெல்லியில் நடைபெற உள்ளது.
-
தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின், ராகுல் காந்தி இணைந்து பிரச்சாரம்: செல்வப்பெருந்தகை தகவல்
28 Mar 2024சென்னை, முதல்வர் மு.க.ஸ்டாலினும், ராகுல் காந்தியும் ஒன்றாக சேர்ந்து தமிழகத்தில் இண்டியா கூட்டணி வேட்பாளர்களுக்கு சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வாக்கு சேகரிக்க
-
தாய்லாந்தில் ஓரின சேர்க்கையாளர் திருமணத்துக்கு சட்டப்பூர்வ அனுமதி
28 Mar 2024பாங்காங்க், ஓரின சேர்க்கையாளர் திருமணத்திற்கான சட்ட மசோதா தாய்லாந்து பாராளுமன்றத்தில் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது.
-
5 நாள் பயணமாக கவர்னர் ரவி நாளை ஊட்டி செல்கிறார்
28 Mar 2024ஊட்டி, 5 நாள் பயணமாக கவர்னர் ஆர்.என். ரவி நாளை ஊட்டிக்கு புறப்பட்டு செல்கிறார்.
-
கிறிஸ்தவ ஆலயங்களில் இன்று புனித வெள்ளி சிறப்பு வழிபாடு
28 Mar 2024சென்னை, தமிழகம் முழுவதும் கிறிஸ்தவ ஆலயங்களில் இன்று புனித வெள்ளி சிறப்பு வழிபாடு நடத்தப்படுகிறது.
-
வேட்புமனு தாக்கல் செய்ய ஏப். 3-ல் கேரளா செல்கிறார் ராகுல் காந்தி
28 Mar 2024திருவனந்தபுரம், ஏப்ரல் 3-ம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்ய கேரளா செல்கிறார். அதை தொடர்ந்து கல்பெட்டா கலெக்டர் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்கிறார்.
-
ஏப்.4-ல் மத்திய அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகை: சென்னை, மதுரை, சிவகங்கையில் பிரச்சாரம்
28 Mar 2024சென்னை, தேர்தல் பிரச்சாரத்துக்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஏப்ரல் 4-ம் தேதி தமிழகம் வரவுள்ளார். அவர் மதுரை, சிவகங்கை, சென்னையில் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.
-
கெஜ்ரிவாலை பதவியிலிருந்து நீக்க கோரிய மனு தள்ளுபடி
28 Mar 2024புது டெல்லி, அரவிந்த் கெஜ்ரிவாலை முதல்வர் பதவியில் இருந்து நீக்க கோரி தொடரப்பட்ட பொதுநல மனுவை தள்ளுபடி செய்து டெல்லி ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
-
2-ம் கட்ட தேர்தல்: 13 மாநிலங்களில் உள்ள 89 மக்களவை தொகுதிகளில் மனு தாக்கல் தொடங்கியது
28 Mar 2024புது டெல்லி, நாடு முழுவதும் பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்படும் நிலையில், இரண்டாவது கட்டமாக ஏப்ரல் 26-ம் தேதி 13 மாநிலங்களில் உள்ள 89 மக்களவை தொகுதிகளில் வாக்க
-
ஈரோடு எம்.பி. கணேசமூர்த்தி மறைவு: முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல்
28 Mar 2024சென்னை, ஈரோடு மக்களவை உறுப்பினர் கணேசமூர்த்தி மறைவுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
-
ஈரோடு எம்.பி. கணேசமூர்த்தி மறைவு: இ.பி.எஸ். உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல்
28 Mar 2024ஈரோடு, ஈரோடு பாராளுமன்ற உறுப்பினரும், மதிமுக கட்சியின் மூத்த தலைவர்களின் ஒருவருமான கணேசமூர்த்தி நேற்று அதிகாலை 5 மணியளவில் உயிரிழந்தார். இந்த நிலையில், 
-
தமிழகத்தில் 1-ம் தேதி வரை வெப்பநிலை அதிகரிக்க கூடும்: சென்னை வானிலை மையம் தகவல்
28 Mar 2024சென்னை, தமிழகத்தில் வரும் 01-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2 டிகிரி செல்சியஸ் வரை படிப்படியாக அதிகரிக்கக் கூடும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்
-
முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தர்மபுரி வருகை: இன்டியா கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரிக்கிறார்
28 Mar 2024தர்மபுரி, முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தருமபுரி வருகையையொட்டி அதற்கான முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
-
செந்தில் பாலாஜியின் புதிய மனு ஏப். 4-ம் தேதிக்கு தள்ளி வைப்பு
28 Mar 2024சென்னை, சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த புதிய மனுவுக்கு அமலாக்கத்துறை பதிலளிக்கும் படி உத்தரவிட்டு ஏப்ரல் 4-ம் தேதி
-
அடுத்த தலைமுறைக்கான பயணிகள் விமானத்தை உருவாக்கும் ஜப்பான்
28 Mar 2024டோக்கியோ, ஹைட்ரஜன் எரிபொருள் என்ஜினை பயன்படுத்தி அடுத்த தலைமுறைக்கான பயணிகள் விமானத்தை ஜப்பான் உருவாக்க உள்ளது.
-
தி.மு.க. வேட்பாளர் செல்வகணபதி மனு நீண்ட இழுபறிக்கு பிறகு ஏற்பு
28 Mar 2024சேலம், தி.மு.க. வேட்பாளர் டி.எம்.செல்வகணபதியின் வேட்பு மனு நீண்ட இழுபறிக்கு பிறகு ஏற்கப்பட்டது.
-
பார்லி. தேர்தலுக்கு பின் விடுபட்ட அனைவருக்கும் உரிமைத்தொகை: அமைச்சர் உதயநிதி வாக்குறுதி
28 Mar 2024ஸ்ரீபெரும்புதூர், பாராளுமன்ற மக்களவை தேர்தலுக்கு பின்னர் விடுபட்ட அனைவருக்கும் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
செல்வகணபதி மீது மேலும் ஒரு புகார்: சேலம் தி.மு.க. வேட்பாளர் வேட்புமனு ஏற்கப்படுமா?
28 Mar 2024சேலம், சேலம் தொகுதி தி.மு.க. வேட்பாளர் செல்வகணபதியின் வேட்புமனு பரிசீலனையின் போது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.