முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கட்டாக் போட்டி: பரபரப்பான ஆட்டத்தில் இந்தியா வெற்றி

வியாழக்கிழமை, 1 டிசம்பர் 2011      விளையாட்டு
Image Unavailable

 

கட்டாக், டிச. 1 - மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்கு எதிராக கட்டாக்கில் நடைபெற்ற ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் பரபரப்பான ஆட்டத்தில் இந்திய அணி ஒரு விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் இந்தத் தொடரில் 1- 0 என்ற கணக்கில் முன்னிலை பெற்று உள்ளது. இந்தப் போட்டியில் இந்திய அணி தரப்பில் ரோகித் சர்மா அபாரமாக பேட்டிங் செய்து அணியை இக்கட்டான நிலையில் இருந்து மீட்டு வெ ற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார். அவருக்கு பக்கபலமாக ஜடேஜா ஆடினார். 

முன்னதாக பெளலிங்கின் போது உமேஷ் யாதவ் மற்றும் வருண் ஆரோன் இருவரும் சிறப்பாக பந்து வீசினர். அவர்களுக்கு ஆதரவாக வினய் குமார், அஸ்வின், ஜடேஜா மற்றும் ரெய்னா ஆகியோர் பந்து வீசினர். 

இந்திய அணி பேட்டிங்கின் போது ஒரு கட்டத்தில் 5 விக்கெட் இழப் பிற்கு 59 ரன்னை எடுத்து தடுமாறிக் கொண்டு இருந்தது. பின்பு ரோகி த் சர்மா மற்றும் ஜடேஜா ஆகியோரது பொறுப்பான ஆட்டத்தால் சரிவில் இருந்து மீண்டு வெற்றி பெற்றது. 

இந்தியா மற்றும் மேற்கு இந்தியத் தீவுகள்அணிகளுக்கு இடையேயா  ன முதலாவது கிரிக்கெட் போட்டி ஒரிசா மாநிலத்தில் உள்ள கட்டாக் நகரில் பகலிரவு ஆட்டமாக நடைபெற்றது. முன்னதாக இதில் டாசில் வெற்றி பெற்ற இந்திய அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. மே.இ.தீவு அணி சார்பில் அட்ரியன் பரத் மற்றும் சிம் மன்ஸ் இருவரும் ஆட்டத்தை துவக்கினர். 

ஆனால் முதலில் களம் இறங்கிய அந்த அணி இந்திய பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் திணறியது. இறுதியில் அந்த அணி 50 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 211 ரன்னை எடுத்தது. 

மே.இ.தீவு அணி சார்பில், பிராவோ அதிகபட்சமாக 74 பந்தில் 60 ரன் னை எடுத்தார். ஹியாட் 54 பந்தில் 31 ரன்னை எடுத்தார். தவிர, ரஸ்செ ல் 22 ரன்னையும், சிம்மன்ஸ் 19 ரன்னையும், பரத் 17 ரன்னையும், பொல்லார்டு 13 ரன்னையும், ராம்தின் 14 ரன்னையும் எடுத்தனர். 

இந்திய அணி தரப்பில், உமேஷ் யாதவ் 33 ரன்னைக் கொடுத்து 2 விக் கெட் எடுத்தார். வருண் ஆரோன் 47 ரன்னைக் கொடுத்து 2 விக்கெட் எடுத்தார். தவிர, வினய் குமார், அஸ்வின், ரெய்னா மற்றும் ஜடே ஜாஆகியோர் தலா ஒரு விக்கெட் எடுத்தனர். இந்திய அணி 212 ரன்னை எடுத்தால் வெற்றி பெறலாம் என்ற இலக் கை மே.இ.தீவு அணி வைத்தது. அடுத்து களம் இறங்கிய அந்த அணி 48.5 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 213 ரன்னை எடுத்தது. 

இதனால் இந்திய அணி பரபரப்பான இந்தப் போட்டியில் 1 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட இந்தத் தொடரில் 1  - 0 என்ற கணக்கில் முன்னிலை பெற்று உள்ளது. 

இந்திய அணி தரப்பில் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனான ரோகித் சர்மா நங்கூரம் போல நிலைத்து நின்று ஆடி அணியின் வெற்றிக்கு உதவி னார். அவர் ஆட்டம் இழந்ததும் வெற்றி யார் பக்கம் என்பது இழுபறி யானது. 

பின்பு கடைசி விக்கெட் உதவியுடன் இந்திய அணி வெற்றி வாகை சூடியது. 7 பந்துகள் மீதமிருக்கையில் இந்த வெற்றி கிடைத்தது. கடை சி விக்கெட்டிற்கு ஆடிய யாதவ் மற்றும் ஆரோன் இருவரும் தலா ஒரு பவுண்டரி அடித்தனர். 

மே.இ.தீவு அணி சார்பில், ரோச் 46 ரன்னைக் கொடுத்து 3 விக்கெட் எடுத்தார். ரஸ்செல் 29 ரன்னைக் கொடுத்து 2 விக்கெட் எடுத்தார். தவி ர, மார்டின், சம்மி மற்றும் பொல்லார்டு ஆகியோர் தலா ஒரு விக்கெ ட் எடுத்தனர். இந்தப் போட்டியின் ஆட்டநாயகனாக ரோகித் சர்மா தேர்வு செய்யப்பட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago