எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புதுடெல்லி, டிச.1 - சில்லரை வர்த்தகத்தில் அன்னிய நேரடி முதலீட்டை அனுமதிப்பது என்ற மத்திய அரசின் முடிவுக்கு பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. நேற்றும் எதிர்க்கட்சிகள் ஏற்படுத்திய அமளியால் பாராளுமன்றத்தின் இரு சபைகளும் ஒத்திவைக்கப்பட்டன. பாராளுமன்றத்தின் லோக்சபை நேற்று காலை 11 மணிக்கு கூடியதும், சபாநாயகர் மீராகுமார் வழக்கமான பணிகளை துவக்குவதன் அடையாளமாக கேள்வி நேரத்தை எடுத்துக்கொள்வதாக அறிவித்தார். அப்போது பா.ஜ.க. உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் உடனடியாக எழுந்து சில்லரை வர்த்தகத்தில் அன்னிய முதலீட்டை அனுமதிக்க கூடாது என்று கோரி கோஷங்களை எழுப்பினார்கள். அப்போது ஆந்திராவைச் சேர்ந்த சில காங்கிரஸ் எம்.பி.க்களும், தெலுங்குதேசம் கட்சி எம்.பி.க்களும் தங்கள் கைகளில் இருந்த பதாகைகளை அசைத்தபடி தனி தெலுங்கானா மாநிலத்தை அமைக்க வேண்டும் என்று கோஷங்களை எழுப்பினர். மத்தியில் ஆளும் கூட்டணியில் இடம் பெற்றுள்ள முக்கிய கட்சியான திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எம்.பி.க்களும் தங்கள் கைகளில் பதாகைகளுடன் எழுந்து சில்லரை வணிகத்தில் அன்னிய முதலீட்டை அனுமதிப்பது என்ற முடிவை உடனடியாக வாபஸ் பெற வேண்டும் என்று கோரி கோஷங்களை எழுப்பினார்கள். தெலுங்குதேசம், இடது கம்யூனிஸ்ட், சிவசேனா ஆகிய கட்சிகளைச் சேர்ந்த சில எம்.பி.க்கள் சபையின் மையப் பகுதியை நோக்கி விரைந்தனர்.
இதனால் சபையில் கடும் அமளி ஏற்பட்டது. எம்.பி.க்களை அமைதிப்படுத்தி அவர்களை அவரவர் இருக்கைகளில் அமரச்செய்ய சபாநாயகர் மீராகுமார் திரும்பத் திரும்ப கேட்டுக்கொண்டார். ஆனால் அந்த வேண்டுகோள்கள் பலிக்கவில்லை. எம்.பி.க்கள் தொடர்ந்து தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பிக்கொண்டே இருந்தனர். இதனால் சபை நடவடிக்கைகளை தொடர முடியாத நிலை ஏற்பட்டதால் சபையை நண்பகல் 12 மணி வரை சபாநாயகர் மீராகுமார் ஒத்திவைத்தார்.
பிறகு சபை மீண்டும் கூடியபோதும் சில்லரை வர்த்தகத்தில் அன்னிய முதலீடு உள்பட பல்வேறு பிரச்சனைகளை எழுப்பி எதிர்க்கட்சி எம்.பி.க்களும், ஆளும் கூட்டணி எம்.பி.க்களும் ஆளுக்கு ஒரு பக்கமாக கூச்சல் போட்டனர். இதனால் சபையில் பெரும் அமளி ஏற்பட்டது. யார் என்ன பேசுகிறார்கள் என்பது காதில் விழாத அளவுக்கு பேரிரைச்சல் ஏற்பட்டது. இதையடுத்து சபையை தொடர்ந்து நடத்த முடியாததால் லோக்சபையை நேற்று நாள் முழுவதுமாக சபாநாயகர் மீரா குமார் ஒத்திவைத்தார்.
இதேபோல ராஜ்யசபையிலும் சில்லரை வர்த்தகத்தில் அன்னிய முதலீடு உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளை கிளப்பி பா.ஜ.க., பகுஜன்சமாஜ், ஐக்கிய ஜனதா தளம், அ.தி.மு.க. ஆகிய கட்சிகளைச் சேர்ந்த எம்.பி.க்கள் கோஷங்களை எழுப்பினார்கள். சில்லரை வர்த்தகத்தில் அன்னிய நேரடி முதலீட்டை அனுமதிக்கக் கூடாது என்று கோரி இவர்கள் கோஷம் எழுப்பினார்கள். சிலர் சபையின் மையப் பகுதிக்கே சென்று கோஷமிட்டனர். இதனால் கேள்வி நேரத்தை நடத்த முடியவில்லை. இதையடுத்து அமளிக்கு இடையே சபையை நண்பகல் 12 மணிவரை சபைத் தலைவர் ஹமீது அன்சாரி ஒத்திவைத்தார்.
பிறகு சபை மீண்டும் கூடியது. ஆனாலும் கூட எதிர்க்கட்சிகளின் அமளி ஓயவில்லை. தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி அவர்கள் கோஷம் இட்டனர். சில்லரை வர்த்தகத்தில் அன்னிய முதலீட்டை அனுமதிப்பது என்ற மத்திய அரசின் முடிவை உடனே வாபஸ் பெறவேண்டும் என்று கோரி, எதிர்க்கட்சி எம்.பி.க்களும், ஆளும் கூட்டணியில் இடம்பெற்றுள்ள திரிணாமுல் காங்கிரசும் கோஷங்களை எழுப்பின. இதையடுத்து ராஜ்யசபையை நேற்று நாள் முழுவதுமாக சபைத் தலைவர் அன்சாரி ஒத்திவைத்தார்.
சில்லரை வர்த்தகத்தில் அன்னிய முதலீட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த வெள்ளி, திங்கள், செவ்வாய், புதன் ஆகிய நான்கு நாட்களும் எதிர்க்கட்சிகள் ஏற்படுத்திய தொடர் அமளியால் பாராளுமன்றத்தின் இரு சபைகளும் தொடர்ந்து 4-வது நாளாக முடக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
சூப்பர் சாஃப்ட் இட்லி2 days 6 hours ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி6 days 5 hours ago |
ரவா பர்பி1 week 2 days ago |
-
ஆர்வமுடன் வாக்களித்த உலகின் குள்ளமான பெண்
19 Apr 2024நாக்பூர், நாக்பூரில் உள்ள வாக்குச்சாவடியில் உலகின் குள்ளமான பெண்மணியான ஜோதி ஆம்ஜி என்பவர் வாக்களித்தார்.
-
கடற்படையின் அடுத்த தளபதியாக தினேஷ் குமார் திரிபாதி நியமனம்
19 Apr 2024புது டெல்லி, கடற்படைத் துணைத் தளபதியாக தற்போது பணியாற்றி வரும் வைஸ் அட்மிரல் தினேஷ் குமார் திரிபாதியை வரும் 30-ம் தேதி முதல் கடற்படையின் அடுத்த தளபதியாக அரசு நியமித்துள
-
மாலத்தீவு முன்னாள் அதிபரின் 11 ஆண்டு சிறை தண்டனை ரத்து: மறுவிசாரணைக்கு நீதிமன்றம் உத்தரவு
19 Apr 2024மாலே, மாலத்தீவு முன்னாள் அதிபரின் 11 ஆண்டு சிறை தண்டனையை ரத்து செய்து உத்தரவிட்ட நீதிமன்றம் இந்த வழக்கில் மறுவிசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.
-
பார்லி. தேர்தல்: சொந்த கிராமத்தில் வாக்களித்த எடப்பாடி பழனிசாமி
19 Apr 2024சேலம், தமிழகம் முழுவதும் நேற்று பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது.
-
சைக்கிள் ஓட்டிச்சென்று நடிகர் விஷால் வாக்களிப்பு
19 Apr 2024சென்னை : நடிகர் விஷால் சைக்கிள் ஓட்டிச்சென்று வாக்களித்தது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
-
பார்லி. தேர்தல்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாக்களித்தார்
19 Apr 2024சென்னை : தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளில் பாராளுமன்ற தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி நேற்று நடைபெற்றது. இந்த தேர்தலை
-
கர்நாடகாவில் காங்கிரசில் இணைந்த முன்னாள் எம்.எல்.ஏ.-க்கள் 2 பேர்
19 Apr 2024பெங்களூர், கர்நாடகா மாநிலத்தின் முன்னாள் பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் இருவர் மலிகாய்யா கட்டேதார், சாரதா மோகன் ஷெட்டி ஆகியோர் நேற்று காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர்.
-
ம.பி.யில் காங்கிரசின் நகுல் நாத்துக்கு வாக்களிக்க கோரிய பா.ஜ.க. மேயர்
19 Apr 2024சிந்த்வாரா, மத்தியப் பிரதேசத்தின் நட்சத்திர தொகுதியான சிந்த்வாராவில் நேற்று முதல்கட்ட வாக்குப்பதிவு நடந்தது.
-
பார்லி. தேர்தல்: வாக்களிக்க சென்ற 3 பேர் மயங்கி விழுந்து உயிரிழப்பு
19 Apr 2024சென்னை, தமிழகத்தில் நேற்று நடந்த பாராளுமன்ற தேர்தலில் வாக்களிக்க சென்ற 3 பேர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 19-04-2024.
19 Apr 2024 -
ஸ்காட்லாந்தில் அருவியில் குளித்த இந்திய மாணவர்கள் 2 பேர் தவறி விழுந்து உயிரிழப்பு
19 Apr 2024லண்டன், ஸ்காட்லாந்தில் அருவியில் குளித்து மகிழ்ந்த 2 இந்திய மாணவர்கள் தவறி விழுந்து உயிரிழந்தனர்.
-
அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்: கட்காரி
19 Apr 2024நாக்பூர், நாக்பூரில் வாக்களித்த பின், தேர்தலில் நான் நிச்சயம் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்தார்.
-
புதுச்சேரியில் மோட்டார் சைக்கிளில் சென்று வாக்களித்த முதல்வர் ரங்கசாமி
19 Apr 2024புதுச்சேரி, புதுச்சேரியில் மோட்டார் சைக்கிளில் சென்று தனது வாக்கினை பதிவு செய்தார் அம்மாநில முதல்வர் ரங்காசமி.
-
மதுரை சித்திரை திருவிழா: வைகை அணையில் இருந்து தண்ணீர் திறப்பு
19 Apr 2024தேனி : மதுரை சித்திரை திருவிழாவையொட்டி கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்திற்காக வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
-
இ.வி.எம். குறித்த அச்சம் தேவையில்லை: வாக்குகள் பத்திரமாகவும், பாதுகாப்பாகவும் இருக்கும் : தலைமை தேர்தல் ஆணையர் உறுதி
19 Apr 2024புதுடெல்லி : மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்த அச்சங்களை மறுத்துள்ள இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், “மக்களின் வாக்குகள் பத்திரமாகவும் பாதுகாப்பாகவும
-
நீங்கள் நினைப்பது போல இந்தியாவிற்கு வெற்றிதான் : வாக்களித்தப்பின் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேட்டி
19 Apr 2024சென்னை : நீங்கள் நினைப்பது போல இந்தியாவிற்கு வெற்றி தான் என வாக்களித்த பின் முதல்வர் மு.க.ஸ்டாலின் என தெரிவித்தார்.
-
பாராளுமன்ற தேர்தல்: ஜனநாயக கடமையாற்றிய திரை பிரபலங்கள்
19 Apr 2024சென்னை : தமிழகத்தில் நேற்று நடந்த பாராளுமன்ற தேர்தலில் திரை பிரபலங்கள் பலரும் தங்களது ஜனநாயக கடமையையாற்றினர்.
-
பாராளுமன்ற தேர்தல்: காலையிலேயே வாக்களித்த தமிழக அரசியல் தலைவர்கள்
19 Apr 2024சென்னை, வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன்பே அரசியல் கட்சி தலைவர்கள் காத்திருந்து முதல் ஆளாக தங்களது ஜனநாயக கடமையை ஆற்றினர்.
-
காந்திநகரில் அமித்ஷா வேட்புமனு தாக்கல்
19 Apr 2024காந்திநகர், குஜராத் மாநிலத்தில் உள்ள 26 தொகுதிகளுக்கும் 3-வது கட்டமாக மே 7-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 12-ம் தேதி தொடங்கியது.
-
சென்னையில் வாக்களித்த கவர்னர் ஆர்.என்.ரவி மகிழ்ச்சி
19 Apr 2024சென்னை : ஜனநாயகத்தின் மிகப் பெரிய திருவிழா இது.
-
தமிழகத்தில் அமைதியான வாக்குப்பதிவு தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு பேட்டி
19 Apr 2024சென்னை, தமிழ்நாடு முழுவதும் அனைத்து இடங்களிலும் அமைதியாக, நல்லபடியாக வாக்குப்பதிவு நடைபெற்றதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு கூறினார்.
-
102 பார்லி. தொகுதிகளில் முதல் கட்ட வாக்குப்பதிவு நிறைவு: தமிழகம், புதுச்சேரியில் விறுவிறு வாக்குப்பதிவு : புதுச்சேரியில் 72.84 சதவீதம் - தமிழகத்தில் 66 சதவீதம் வாக்குப்பதிவு
19 Apr 2024சென்னை : தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது.
7 கட்டங்களாக...
-
ஐ.நா.வில் பாலஸ்தீனத்தை உறுப்பினராக்கும் தீர்மானம்: வீட்டோ அதிகாரம் மூலம் முறியடித்த அமெரிக்கா
19 Apr 2024நியூயார்க், 193 உறுப்பினர்களைக் கொண்ட ஐ.நா.
-
ராமநாதபுரம் தொகுதியில் எனது வெற்றிவாய்ப்பு பிரகாசமாக உள்ளது : வாக்களித்த பிறகு ஓ.பன்னீர்செல்வம் பேட்டி
19 Apr 2024தேனி : கருத்துக்கணிப்புகள் அனைத்தும் பொய்யாகும் என்று தெரிவித்த ஓ.பன்னீர்செல்வம், கருத்துக்கணிப்புகள் அனைத்தும் பொய்யாகும் என்றும் அவர் தெரிவித்தார்.
-
தேர்தலில் நாங்கள் மக்களை நம்புகிறோம்: மோடி, வாக்கு இயந்திரங்களை நம்புகிறார்: செல்வப்பெருந்தகை
19 Apr 2024சென்னை : நாங்கள் மக்களை நம்பி தேர்தலை சந்திக்கிறோம்.