முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

செங்கம் அருகே ரூ.21 லட்சம் ரொக்கப்பணம் பறிமுதல்

சனிக்கிழமை, 12 மார்ச் 2011      தமிழகம்
Image Unavailable

 

செங்கம், மார்ச்.12 - செங்கம் அருகே தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய சோதனையில், காரில் எடுத்துச் செல்லப் பட்ட ரூ.21 லட்சம் ரொக்கப் பணம் பறிமுதல் செய்யப் பட்டது. அந்த பணம் கருவூலத்தில் ஒப்படைக்கப் பட்டது.

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த அம்மாபாளையம் அருகே கலசப்பாக்கம் சட்டமன்ற தொகுதி தேர்தல் பறக்கும் படை தாசில்தார் கார்த்திகேயன் தலைமையில் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் குமார், போலீசார் ரமேஷ், அர்த்தநாரி ஆகியோர் கொண்ட குழுவினர் வாகன சோதனை நடத்தினர். அப்போது செங்கத்தில் இருந்து திருவண்ணாமலை நோக்கி வந்த ஒரு டாட்டா சுமோ காரை மடக்கி சோதனை போட்டனர். அதில் பயணம் செய்த முத்தனூர் கிராமத்தைச் சேர்ந்த தாளப்பன் என்பவர் குமாரர்கள் சின்னசாமி, மாயக்கிருஷ்ணன் ஆகியோரிடம் இருந்து ஆயிரம் மற்றும் 500 ரூபாய் நோட்டுக் கட்டுக்களாக ரூ.20 லட்சத்து 50 ஆயிரம் எடுத்துச் செல்லப்பட்டது கண்டுபிடிக்கப் பட்டது.

ரூ.2 லட்சத்துக்கு மேல் எடுத்துச் செல்லக்கூடாது என்ற தேர்தல் நன்னடத்தை விதி காரணமாக, பறிமுதல் செய்த ரூ.20 லட்சத்து 50 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டு செங்கம் கருவூலத்தில் ஒப்படைக்கப் பட்டது. சம்பந்தப் பட்டவர்களிடம் அதற்கான ரசீது வழங்கப் பட்டது.

செங்கம் அடுத்த முத்தனூர் கிராமத்தைச் சேர்ந்த சின்னசாமி, மாயகிருஷ்ணன் இருவரும் சுமார் 10 வருடங்களாக மலேசியாவில் வேலை செய்து வருவதாகவும், தங்கள் நிலங்களை முத்தனூரைச் சேர்ந்த சண்முகம் என்பவருக்கு விற்று அந்த பணத்தை பெற்றதாகவும் அது நேற்றைய தேதியில் செங்கம் ஸ்டேட் பேங்க்கில் எடுக்கப் பட்ட தொகை எனவும் அவர்கள் தெரிவித்தனர். இந்த தகவல் மாவட்ட தேர்தல் அதிகாரிக்கு தெரிவிக்கப் பட்டது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்