முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வாக்காளர் அடையாள அட்டைபெற சிறப்பு முகாம்

சனிக்கிழமை, 12 மார்ச் 2011      தமிழகம்
Image Unavailable

சென்னை, மார்ச் 12 - புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் அடையாள அட்டைகளை பெறுவதற்கு வசதியாக 2 நாட்கள் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளன. இதுகுறித்து தமிழக தலைமை தேர்தல் ஆணையர் பிரவீன்குமார் வெளியிட்ட அறிக்கையில், சட்டப்பேரவைத் தேர்தலில் தகுதியான அனைவரும் வாக்களிக்க ஏதுவாக 100 சதவீதம் பிழையற்ற புகைப்படத்துடன்கூடிய வாக்காளர் அடையாள அட்டைகள் வழங்க நடவடிக்கைகள் எடுத்துவரப் படுகின்றன. எனவே இன்றும், நாளை ஞாயிற்றுக்கிழமையும் மீண்டும் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளன. இந்த முகாம்கள் ஊரகப் பகுதிகளில் கிராம நிர்வாக அலுவலகங்களிலும், நகர்ப்புற பகுதிகளில் நகராட்சி அலுவலகங்களிலும், மாநகராட்சி அலுவலகங்களிலும், சென்னையைப் பொறுத்த வரை மண்டல அலுவலகங்களிலும் இந்த முகாம்கள் நடைபெற உள்ளன. எனவே 2010-2011 வாக்காளர் பட்டியல் சுருக்கமுறை திருத்தத்தின்போது பதிவு செய்துகொண்டு இதுவரை அடையாள அட்டை பெறாதவர்கள் அனைவரும் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளலாம் என்று பிரவீன்குமார் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்