முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

புரசைவாக்கத்தில் 120 பவுன் நகை கொள்ளை

சனிக்கிழமை, 12 மார்ச் 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, மார்ச்.12 - புரசைவாக்கம் பெருமாள் கோவில் 2​வது தெருவை சேர்ந்தவர் ஜெயலட்சுமி (55). கணவரை இழந்த இவர் மகன் பாலாஜியுடன் ஓரே வீட்டில் வசித்து வந்தார். பாலாஜி சாப்ட்வேர் என்ஜினீயராக வேலை பார்த்து வந்தார். இவருக்கு திருமணமாகி தனி அறையில் வசித்து வந்தார்.  இவர்கள் வீட்டு வேலைக்கும் ஆட்கள் வைத்திருந்தனர். அதே குடியிருப்பில் 3 வீடுகளை வாடகைக்கும் விட்டிருந்தனர். நேற்று முன்தினம் மதியம் பாலாஜி மனைவியுடன் வெளியில் சென்று விட்டார். இதற்கிடையே அவரது உறவினர்கள் ஊரில் இருந்து வீட்டுக்கு வந்திருந்தனர்.  மதியம் வேலைக்காரர்கள் வேலையை முடித்து விட்டு வீட்டுக்கு சென்று விட்டனர். ஜெயலட்சுமி மதியம் சாப்பிட்டதும் தூங்கிவிட்டு பிற்பகல் 3 மணிக்கு எழுந்தார். 

அப்போது அறை கதவு திறந்து கிடந்தது.  அங்கிருந்த பொருட்கள் சிதறி கிடந்தன. பீரோ உடைக்கப்பட்டிருந்தது. அதில் இருந்த 60 பவுன் நகை கொள்ளை போயிருந்தது. யாரோ மர்ம ஆசாமிகள் பின் பக்கம் உள்ள கதவு nullட்டை உடைத்து உள்ளே சென்று நகைகளை கொள்ளையடித்து சென்றிருப்பது தெரிய வந்தது.  இந்த கொள்ளை தொடர்பாக வேப்பேரி போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்